வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஜீவன் கூல் தொடர்பான செய்தி தவறானது! சண்முகலிங்கன் பதில் துணைவேந்தரானார்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளமை பொய்யான தகவல் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பில் கடந்த சிலமாதங்களாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில்  பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்நிலையில் குறித்த தகவல் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கூல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னர் துணைவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதியினால் கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்  தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும், அப்போதைய மணவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா-விக்கிலீக்ஸ்

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.