சனி, 19 ஜூன், 2010

புத்தபிரானின் வாக்கு....

யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர் களுக்கே அதிக துக்கம் என்பது கெளதம புத்த பிரானின் வாக்கு. இந்த வாக்கின் நிஜத்தை இந்த நாடு விரைவில் அனுபவிக்கப்போவதாக சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.
இந்த எச்சரிக்கை எதனையும் இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எனினும் நேற்றையதினம் கொழும்பில் நடத் தப்பட்ட யுத்த வெற்றியின் ஓராண்டு விழா, இலங்கை மக்களின் முழுமையான ஆதரவுக் குட்படவில்லை என்பதை உணரவேண்டும்.

கப்டன் மொறிஸ்-பரதரராஜன் தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறை

நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
என்றான். அவன் தான் மொறிஸ்.

இலங்கையில் 25,000 சீன கைதிகள் ! தமிழருக்கு மேலும் பாதிப்பு- டி.ராஜேந்தர்

சீன அரசு இலங்கையிலே 25 ஆயிரம் சிறைக்கைதிகளை கொண்டு வந்து அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய இலட்சிய தி.மு.க. தலைவர் டி.இராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்று நெஞ்சு பொறுக்குதில்லை.. பொறுக்குதில்லை.. என்று பாடினான் தமிழ்க்கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி..

ஐ. நாடுகள் அலுவலகம் திறப்பு..

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது.