ஞாயிறு, 6 ஜூன், 2010

மனிதநேயமற்ற மானுடர் கவனத்திற்கு ....இம் மானுடஉலகில் இல்லாத மனிதநேயம் ............



தமிழீழம் என்ற பெயர்... -கண்மணி

மகரந்தங்கள் என நம்பி
பாதங்களை அழுத்தியபோது
நெருஞ்சி முற்கள் தைத்தன.
கொட்டிய குருதியில்
வஞ்சகம் புரிந்தது.
புன்னகைக்குள்ளே
புதைக்குழி.

பிரிகேடியர் கபிலம்மான்-நினைவுகளின் பகிர்வு

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்


தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்.........

எங்கள் காவலரண் ......!



வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை !


நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் !

இன்றைய செய்தித் துளிகள்..........

வடக்கு மக்களின் அவல நிலைமைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியும் முக்கிய பொறுப்பாளி என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வாழ்ந்து காட்டிய தேசிய தலைவர் -கண்மணி

வீழ்த்த முடியாத உயரத்தில் தமிழின விடுதலை நிலைபெற்றிருக்கிறது. பன்னாட்டு அரச பயங்கரவாதங்கள் ஒன்றிணைந்து எமது விடுதலையை அதன் வீரியமிக்க போராட்ட வடிவங்களை வீழ்த்தமுடியவில்லை. உரிமையற்று, மானமற்று வாழ்வதைவிட செத்துப்போவதுதான் சாலச்சிறந்து என்கிற உயரிய மாந்த சிந்தனையோடு தமிழினம் தமது போராட்ட வடிவங்களை தளம், களம் மாற்றி கருத்தூண்றி நிற்கின்றது. நாம் வாழ்வதற்கு வெறும் உயிர் போதும். சோறு போதும். சோறு திண்று வாழ்வது மட்டும்தான் வாழ்வா? என்றால்

இம்ரான்-பாண்டியன்- பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் - யாழ்

(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)

விசேட புலனாய்வுப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது.

வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் இலங்கையின் காவற்துறையின் விசேட புலனாய்வுப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தத்தின் இறுதியில் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களின் பின் தன்னை வைத்தியர் என இனங்காட்டாது முகாமிலிருந்து வெளியேறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று இந்தியா சென்றிருந்தார்.

அன்றாட பிரச்சினைகள், போராளிகளை விடுவித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முதல் முறையாக நாளை மாலை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமான சந்திப்பில் பேச்சுவார்த்தையில் போருக்குப் பிந்திய மீள்குடியேற்றத்துக்கும், சிறையில் உள்ள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களுக்கு உரிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படும்.