இத்தாலியப் பொலிஸாரால் 9 இலங்கைத் தமிழர்களை கைது செய்யப்பட்டதையடுத்து இவர்கள் சிறீலங்கா அரசின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை விரும்பிகளிற்கு எதிரான ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 10 மே, 2010
முதலாம் ஆண்டு வீரவணக்கம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி வல்லுனராக விளங்கிய கேணல் வசந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட கேணல் வசந்தன் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாககொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாடாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசாரனாகவும் விளங்கினார். பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகிருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாகப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார், யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய கேணல் வசந்தன் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார். இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணிதொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானக திகழ்ந்த வசந்தன் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார். தமிழீத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக காட்டிநின்றார். இவ்வாறு விளங்கிய வசந்தன் அவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்கட்டு 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்
அடங்காது தமிழீழ தாகம்!!!
"சமாதானத்துக்கான என் ஏக்கம் மறைந்து விட்டது. நான் என்ன விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நான் மீண்டும் அறிந்து கொண்டேன். புரட்சியின் மைந்தன் நான். என் அன்னை தன் மந்திர சக்தி படைத்த ஆசியை அருளிய அந்த மாய ஆயுதங்களை நான் மீண்டும் பற்றிப் பிடிக்கிறேன். "மலர்கள்!... மலர்கள்!... வாழ்வா சாவா என நிர்ணயிக்கும் இப்போருக்காக நான் முடி சூட்டிக் கொள்கிறேன். யாழையும் என்னிடம் கொடுங்கள் நான் போர் பரணி பாட வேண்டும். ...என் உள்ளம், உடல், உதிரம் எல்லாம் இன்பம்; இசைப்பண்; தீப்பிழம்பு!..
நாடுகடந்த அரசுக்கு தெரிவான 272 தமிழர்களும் தேடப்படுவோர் பட்டியலில்!
நாடு கடந்த அரசு அமைப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டு தெரிவான 272பேரும் தேடப்படும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடாத்தப்பட்ட தேர்தலில் மேற்படி 272பேரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந் நாடுகடந்த தமிழீழ அரசை ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ள அரசு, இவர்கள் குறித்த விபரங்களை புலனாய்வு பிரிவினர் சேகரித்துள்ளதாகவும், இலங்கைக்குள் வருவதற்கு தெரிவு செய்யப்பட்ட எவரும் அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அன்னை !
தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் !
கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல்.
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள் .........
வன்முறை என்பது இப்போ அரசியல் ஆகி அந்த அரசியல் இராணுவ மயமாகி அந்த மையத்தில் இருந்து எழுகின்ற அனைத்துமே புலி எதிர்ப்பாகி மனிதத்தைப் பற்றி பேசுவதும் புலியாகி - பின் மாயமாகி - சடலமாக வெளித்தெரிகிறது. மனித உரிமை பற்றிப் பேசாதே. உணவு இல்லை என்றால் உண்பதனைத் தவிர். மாறாக உணவு இல்லை எனக் கேளாதே. ஊடகசுதந்திரம் பற்றிப் பேசாதே சொல்பவற்றை அப்படியே கேள் இல்லாவிடின்
வன்னிப் பேரவலத்தின் நினைவுகள் ஒவ்வொருவர் நெஞ்சையும் எரிய வைத்துக் கொண்டிருக்க, அதன் ஓராண்டு முடிவடையும் காலத்துள் நாம் வாழ்வது என்பது தாங்க முடியாத சோகமானது. பேரினவாத சிங்கள அரசு தனது ஆயுத பலத்தை தமிழ்மக்கள் மீது மூர்க்கத்தனமாக மேற்கொண்டதால் எம் மக்கள் கடந்த வருட மே மாதத்தில் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். மே மாதம் 18ஆம் திகதி என்பது, உலகம் கண் விழித்துப் பார்த்திருக்க, ஈழத் தமிழினத்தின் மீது மனிதகுலம் ஏற்க முடியாத கொடூரத்தைதச் சிங்கள தேசம் ஏவி, அதன் உச்சத்தைத் தொட்ட இருண்ட நாள். மே மாதம் 18ஆம் திகதியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் போர்க் குற்றவியல் நாளாக கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரம் நிறைந்த மறவர்களின் தியாகத்தாலும் தீரத்தாலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விரிக்கப்பட்ட விடுதலைப் பயணம் அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில், பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது துயரமானது. அகதிகளாக்கப்பட்டவர்களின் அவலம் தொடர்கிறது. புனர்வாழ்வு என்ற பெயரில் கைதான போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழரின் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. வன்னிப் பெருநிலம் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது. இத்தனை கொடுமைகளையும், கண்டும் காணாதது போல சர்வதேசம் கண்மூடிப் பூனையாக நடிக்கிறது. எங்கள் மண்ணுக்காக மடிந்த மக்களையும் மாவீரர்களையும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளை நெஞ்சில் இருத்தி அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வது காலத்தின் கடமை.
முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம்!
"கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா"? தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது. ஆனாலும்
இலங்கைத் தமிழருக்கு உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தவில்லை "றோ' வின் முன்னாள் தலைவர்
இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார்.
சிவில் படையினர் இளைஞர் மீது தாக்குதல்:மன்னாரில் சம்பவம்
மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சிவிலில் வந்த காவற் படையினர் மூவர் இன்று இரவு 8.30 மணியளவில் தாக்கியுள்ளனர். மேற்படி 25 வயதான இளைஞர் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு வெளியில் நின்று கொண்டிருந்த போது, வாகனம் ஒன்றில் சிவிலில் வந்த படையினர் மூவருக்கும் இளைஞருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படையினரில் ஒருவர் தன்னிடம் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் இளைஞரின் முகத்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் பதற்றநிலை உருவானதுடன் பொலிஸாரும், இராணுவப் படையினரும் கூடி பதற்ற நிலையை வழமைக்குக் கொண்டு வந்துள்ளனர். இதன் பின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை அவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாக்குதல் நடத்திய சிவில் படையினர் மூவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
முள்ளிவாய்க்கால்1-18
முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. 1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா? 2. டாங்கிகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்... இரத...்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம் 3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’ 4. முகம் சிவந்தார் ஹிட்லர் மகிந்த ராஜபக்ஷேவைப் பார்த்து “ஆஸ்ட்விட்ஸ் புக்கன் வால்டு என ஆங்காங்கே கொலைக்களம் வைத்திருந்தேன் யூதர்களுக்கு... நீங்கள் என்னை வென்று விட்டீர்கள் மூன்றில் ஒரு பங்கு நாட்டையே அல்லவா படு கொலைக் கூடமாக்கிவிட்டீர்கள் விட்டுத் தருகிறேன் “பிரபஞ்சக் கொலைகாரர்” பட்டம் உங்களவர்களுக்கே” 5. டொரான்டோவில் புலம் பெயர் மக்கள் ஊர்வலம் சிறுவன் கையில் தட்டி “உயிர்த்தெழுவோம் உயிர்த்தெழுவோம்” பக்கத்தில் சென்று கேட்டேன் “தலைவர் உயிரோடிருக்கிறாரா”? சுட்டும் விழிச் சுடரோடு சுடச் சுட வந்தது பதில்: “தெரியாது உயிரோடு இருக்கிறார்கள் துரோகிகள்”. 6. பசப்பு வார்த்தைகள் பயனற்ற வார்த்தைகள் பச்சோந்தி வார்த்தைகள் கசப்பு வார்த்தைகள் கண்ணீர் வார்த்தைகள் கர்ஜனை வார்த்தைகள் சுனாமியாய்த் தாக்க ஈழத்துக் கடற்கரையில் மேலும் ஒதுங்கின தமிழர் பிணங்கள்! 7. குண்டுபட்ட தழும்பு கிளிநொச்சிச் பனை உச்சியில் தாய்க்கிளி குஞ்சுக்கிளிக்குச் சொல்லிற்று : “சிறகு முளைத்ததும் பறக்கலாம் கண்ணே எல்லாத் திசையிலும்... வேண்டாம் வடக்குத் திசை அது நமக்கு எமன் திசை”. 8. கதவு தட்டிப் பாற்சோறு காட்டி வெற்றியைக் கொண்டாடச் சாப்பிடச் சொன்னான் சிங்கள இளைஞன் கதவு திறந்த தமிழர் பார்வையில் தெரிந்தது பாற்சோறு அல்ல இரத்தம் கசியும் பலிச்சோறு. 9. யாரோ பத்திரிக்கை ஆசிரியராம் தமிழ் நாட்டிலிருந்தாம் அகதிகள் முகாமில் ஆர்வத்தோடு கேட்டாராம் “இனி யார் உங்களைப் பாத்துப்பா”? கிழிந்த லுங்கியை இறுக்கிய பெரியவர் சொன்னார் “எங்கள் உழைப்பு”. 10. முள்ளி வாய்க்காலில் பாதி கரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்தது விடுதலைப்போர் வீரனின் உடல் முகம் மண்ணை முத்தமிட்டபடி கால் பிடிவாதமாக வடக்குத் திசையை எற்றியபடி. 11. பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு வந்தது வாழ்த்துச் செய்தி! “திட்டமிட்டு வெற்றிபெற்றுவிட்டீர்கள் நாங்கள் திபேத்தில் செய்தது போல” 12. கண்டியில் படுத்திருந்தார் புத்தர் கோரைப் பற்களுடன் சிங்கள பிக்குகள் ஊதுவத்தி கொளுத்தி வழிபடலாயினர் “புத்தம் சரணம் கச்சாமி தமிழர் மரணம் கச்சாமி” 13. இன்று துரோகிகள் ஓடி ஒளிக்கின்றனர் முப்பது நாடும் ஒன்றாய் செய்த தவறை மறைக்க தமிழனுக்கு தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கிறன நாட்களை நகர்த்தியபடி.. 14. தமிழகத்திலும், புலத்திலும் தலைவன் வருகைக்காக பாதை அமைக்கின்றன தாயக வடக்கிலும் கிழக்கிலும் புலியில்லா வாழ்வை தமிழ் உறவுகள் ஏற்க மறுக்க தொடங்கி விட்டனர் 15. உலக வல்லரசும், சிங்கள தேசமும் தமிழர்களை முட்டாளாக்க எடுத்த முயற்சியும் படுதோல்வியிலே தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் தலைவனுடன் இணந்து தமிழீழம் நோக்கி நடக்க புறப்பட்டு விட்டான்!!! 16. ஏற்றுக் கொள்ள முடியாத கோத்தபாய கொக்கரிக்கிறார் பசீலும் பச்சையாக பேசுகிறான் ராஜபக்சாவும் சோனியாவும் கருணாநிதியை அழைத்து கற்ப்பூரம் காட்டுகிறான் இதில் சிங்கள சொறி நாய்களும் எலும்புக்காக அலையும் துரோகிகளும் தமிழர் அடையாளங்களை அழிக்கிறான்கள்... 17. முள்ளிவாய்க்காலோடு முடக்கி கிடந்த தமிழினம் முழு மூச்சோடு நிமிர்ந்து நிற்கிறது இனிமேலும் எவனும் கிட்ட நெருங்கி எம்மை அடக்க நினைப்பான என்ன?? 18. முள்ளிவாய்க்கால் ஆன்மாவொன்று .. சின்னத் தூக்கம் கொண்டோம் அன்றி எங்கள் தேகம் வாடியது இல்லை உங்கள் அண்ணன் தங்கை பிள்ளைகள் யாரும் கண்கள் முடியது இல்லை உள்ளே உயிராய் உள்ளோம் உள்ளோம் உங்கள் நினைவுடனே.. இங்கு வெல்லும்வரையும் வீசும் காற்றை உள்ளோம் உங்கள் அருகினிலே.. ஏறக் குறைய முப்பத்தி எண்ணாயிரம் மாவீரர்களையும், இரண்டு லட்சம் மக்களையும் எம் மண் சுமந்து கொண்டுதான் எமது விடுதலைப் போர் பெரும் விருட்சமாக விழுது விட்டு இன்று உலகம் முழுவதும் விரிந்து நிற்கிறது. உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் காணத இழப்பை சந்திச்சு மீண்டும் நிமிந்து நிற்கிறது இதற்கு காரணம் முழுமையான அற்ப்பணிப்பும், கடின உழைப்பும்தான். ஆகவே உறவுகளே, உங்களுடைய தலைவர் உங்களுடதான் இருக்கிறார் அவரை முழுமையாக நம்புங்கள் அவர் நிச்சயம் எங்கள் எல்லாருடைய கனவு மெய்ப்பட வைப்பார். அந்தக் காலம் மிகவும் எமக்கு அருகாமையிலே உள்ளது. அது எங்களுடைய தலைவர் காலத்தில் அது அமையும். தமிழீழம் என்பது வெறும் எங்களுடைய உயிர் அல்ல, ஒவ்வொரு தமிழர்களதும் உயிராயுதம் நிச்சயம் எந்த ஒரு ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் உயிராயுதம் அடிபணியாது அதுவைரை மாவீரர் வழி தொடர்ந்து எம் பணி முடிப்போம் என் உறுதி எடுத்துக் கொண்டு அடுத்த எமது விடுதலைப் போருக்கு எம்மை தயார் படுத்துத்திக் கொள்வோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)