சனி, 25 செப்டம்பர், 2010

மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கங்கள்

26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீர வணக்கங்கள்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

 தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்பு  நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது."இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்அவ்வாறுமுன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் – 26.09. 1987

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.

இலங்கை கடற்படை மீது மரைன் போலீசார் வழக்கு

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது, மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில், இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி உள்ளனர். கை, கால், கண்களை இழந்து ஊனமாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இந்திய அரசு அவ்வப்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சில நாட்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இலங்கை கடற்படையினர், மீண்டும் தாக்குதலை தொடர்கின்றனர்.

யாழ் -ஆரிய குளம் பகுதியில் விபச்சாரம்

யுத்தம் முடிவடைந்து தற்போது தமிழர்  பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டு பாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரியகுள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது . இந்த விடுதியில் வரும் வாடிக்கையாளர்களை குசி படுத்த பல பெண்கள் உள்ளனர் . இந்த விடுதிக்கு பொறுப்பாக உள்ளவருக்கு யாழ் மாநகர சபை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பேராதரவினை வழங்கி வருகின்றார் . இவரும் அந்த பெண்களிடம் சென்று தனது லீலைகளை நடத்தி முடித்து வருகின்றார் . இந்த செய்திகளை யாழில் உள்ள ஊடகங்கள் தெரிந்திருந்தும் வெளியிட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளபட்டுள்ளனர் .

களியாட்டத்தால் காவு கொள்ளப்பட்ட உயிர்

தமிழ் வானொலி ஒன்றின் அனுசரனையுடன் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடந்த களியாட்ட நிகழ்வில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். துரையப்பா விளையாட்டரங்கில் உள்ள கால்ப் பந்து தடுப்பு காப்பு கம்பி மீது ஒன்றின் அருகில் நின்று களியாட்டத்தை பார்த்துக் கொண்டிருருந்த வேளை சன நெரிசல் காரணமாக கம்பி வளைந்து குறிப்பிட் இளைஞனின் தலை  மற்றும் நெஞ்சுப் பகுதியை தாக்கியதாக தெரியவருகின்றது. இதனால் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் இளைஞன் உயிரிழந்தார். மல்லாகம் நீதிமன்றவீதியை சேர்த 18 வயதுடைய சி.ஜஸ்ரின் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.