இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
மக்கள் வீதியில் விடப்பட்டனர்
மகிந்தவின் வருகைக்கென வலுக்கட்டாயமாக ஏற்றிச்செல்லப்பட்ட வன்னி மக்கள் தெருவில் விடப்பட்டுள்ளனர்.மகிந்தராஜபக்ச கலந்துகொண்ட தேர்தல் பரப்புரை நிகழ்வு நேற்றுவவுனியாவில் நடைபெற்றிருந்தது.
நிகழ்விற்காக வன்னியில் மீள் குடியேறியுள்ள மக்களில்முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மன்றும் வவுனியாவடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் பங்குகொள்ள வேண்டும் என்றுஅடிக்கும் பாணியில் மிரட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒவ்வொருவர்பேருந்துகளில் ஏற்றப்பட்டுள்ளனர்.
அச்சம் காரணமாக மக்கள் பேருந்துகளில் ஏறிச் சென்றுள்ளனர். நிகழ்விடத்தில் மக்களைஇறக்கிய பேருந்துகள் சென்றுள்ளன. மக்கள் நிகழ்வு நிறைவு பெற்றதும் தமதுஊர்களுக்குச் செல்வதற்காக ஏற்பாட்டாளர்களை அணுகி தமது போக்குவரத்துக்கு வழிசெய்யும்படி கேட்டிருக்கின்றனர்.
ஏற்பாட்டாளர்கள் கைவிரித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து மக்கள் நேற்று உணவேதும்இன்றி தெருவோரங்களிலும், பேருந்து நிலையங்களிலுமே தமது இரவைக்கழித்துள்ளனர்.
இன்று காலை மக்களில் பலர் தமது பகுதிகள்குச் செல்வதற்கு பணம் ஏதும் இன்றிச்சிரமப்பட்டதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் எதுவித வருமானமும் இன்றியேவாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இம்முறை மிகக்குறைந்தளவு மக்களே யாழ்ப்பாண மாவட்டத்தில்நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்டிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது
நிகழ்விற்காக வன்னியில் மீள் குடியேறியுள்ள மக்களில்முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மன்றும் வவுனியாவடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் பங்குகொள்ள வேண்டும் என்றுஅடிக்கும் பாணியில் மிரட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒவ்வொருவர்பேருந்துகளில் ஏற்றப்பட்டுள்ளனர்.
அச்சம் காரணமாக மக்கள் பேருந்துகளில் ஏறிச் சென்றுள்ளனர். நிகழ்விடத்தில் மக்களைஇறக்கிய பேருந்துகள் சென்றுள்ளன. மக்கள் நிகழ்வு நிறைவு பெற்றதும் தமதுஊர்களுக்குச் செல்வதற்காக ஏற்பாட்டாளர்களை அணுகி தமது போக்குவரத்துக்கு வழிசெய்யும்படி கேட்டிருக்கின்றனர்.
ஏற்பாட்டாளர்கள் கைவிரித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து மக்கள் நேற்று உணவேதும்இன்றி தெருவோரங்களிலும், பேருந்து நிலையங்களிலுமே தமது இரவைக்கழித்துள்ளனர்.
இன்று காலை மக்களில் பலர் தமது பகுதிகள்குச் செல்வதற்கு பணம் ஏதும் இன்றிச்சிரமப்பட்டதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் எதுவித வருமானமும் இன்றியேவாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இம்முறை மிகக்குறைந்தளவு மக்களே யாழ்ப்பாண மாவட்டத்தில்நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்டிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)