திங்கள், 27 டிசம்பர், 2010

என் முதல் புகைப்படத்தை அமைதியாய் பார்ப்பவர்களே....

எட்டு மாதம் எனக்கு
உயிர் இருப்பதை உணரும்
வயதில்லை..
தாயென்னும் உயிருக்குள் உறங்கும்
வயது...
தாய் சாப்பிட்ட உணவு செரிக்கும்
சத்தம் மட்டுமே தெரியுமெனக்கு..
என் செவி வலிக்குமோ என அஞ்சி
என் தாய்,
திரவமாய் குடித்ததும் தெரியுமெனக்கு..
திடீரென வெடிச்சத்தம்...
கருவறை திரைகளுடன் சேர்ந்து
முழுதாய் வளராத
என் செவிப்பறைகளும் கிழிந்தன....

தாயின் உடலில் இருந்து
குழந்தையின் தலைதானே வெளிவரும்!!??
எனக்கு என் முழு உடலும் வந்தது..விழுந்தது...
பிய்ந்து பிய்ந்து..
நைந்து நைந்து..
அதிகமாய் குங்குமப்பூ தின்றாயோ தாயே?
நான் சிவப்பாய்..
நீயோ அதைவிட சிவப்பாய்..
உனக்குப் பிரசவம் பார்த்தது வெடிகுண்டல்லவா?

யாழில் தொடரும் துப்பாக்கிக் கலாச்சாரம் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் பலிவாங்கியது _

யாழ். வலிகாமத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55)  இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்குக் கொள்ளையிட வந்த ஆயுததாரிகள் தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற நான்காவது தப்பாக்கிப் பிரயோகம் இதுவாகும்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்

இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உட்பட 7 பேர் கொண்ட தூதுக்குழுவினர்  இலங்கை வந்தடைந்துள்ளனர். இக் குழுவினர் இலங்கை அதிகாரியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை வந்த அவர் பாதுகாப்புச் சம்பந்தமாக பல்வேறுபட்ட அதிகாரியுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபடவுள்ளார்.

புலிகளின் தொழில்நுட்பத்துடன் கடற்படைத்தாக்குதல் படகுகள் - வெளிநாட்டுச் சந்தையில் கிராக்கி

இறுதிக் கட்ட போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்துபோன இன்னொரு விடயம்தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள்  என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.

விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைதாகின்றனர்

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப் பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்று காரணம் கூறப்பட்டாலும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.