இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உட்பட 7 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர். இக் குழுவினர் இலங்கை அதிகாரியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை வந்த அவர் பாதுகாப்புச் சம்பந்தமாக பல்வேறுபட்ட அதிகாரியுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபடவுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரி வித்தார். பிரதீப் குமாரின் இலங்கைக்கான விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டுறவு மற்றும் உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வருடம் யூன் மாதம் ஜனாதி பதி மகிந்த ராஜபக்வுக்கும் இந்தி யப் பிரதமர் மன்மோகன் சிங்குக் கும் இடையில் நடைபெற்ற சந்திப் பின் போது பாதுகாப்புத் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்த கலந்துரையாடலை நடத்து வதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக