இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 27 டிசம்பர், 2010
யாழில் தொடரும் துப்பாக்கிக் கலாச்சாரம் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் பலிவாங்கியது _
யாழ். வலிகாமத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்குக் கொள்ளையிட வந்த ஆயுததாரிகள் தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற நான்காவது தப்பாக்கிப் பிரயோகம் இதுவாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக