வியாழன், 29 ஏப்ரல், 2010

படையினரின் திட்டமிட்ட நடவடிக்கையா?

தமீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அணியென காட்டிக்கொள்ள முற்படும் தமிழ் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகங்களுக்கு இந்த துண்டுப்பிரசுரம அனுப்பப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் சுவர்களிலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் வித்தில் செயற்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தொணியில் அமைந்துள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டவற்றை முழுமையாக தருகிறோம். எச்சரிக்கின்றோம் இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிடப் பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மைச் சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு .இன்று எமது மக்களிடம் உண்டு. ஆனால் இதற்கு மக்களில் சிலர் துணைபோவது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் விதத்தில் 01. வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழியில் எழுதுதல் 02. சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு வாடகை வீடுகளை வழங்குதல் 03. சிங்களவர்களுக்கு வீடுகள், காணிகள், கடைகளை விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல் 04. தனியார் சிற்றூர்திகளில் ( மினிபஸ் ) சிங்கள மொழிப்பாடல்களை ஒலிபரப்புதல், சிங்களப் பேரினவதத் தலைவர்களின் படங்களை வைத்தல் போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தல் வேண்டும். இந்த நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியேற்றப்படும் அதி உச்ச தண்டணையை பெறுவீர்கள் அன்பார்ந்த தலைவர்களே! எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இவ்வேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்கள மயமாக்கலில் இருந்து எமது தாய் மண்ணையும் தாய் மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம். சிங்கள மக்களே உங்கள் இராணுவத்தை நம்பி யாழ்ப்பாணம் வராதீர்கள் இனியும் வந்தால் கடும் துன்பங்களை எதிர்கொள்வீர்கள். தணியாத தாகத்துடன் . . . தளராத வேகத்துடன் . . . தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம். யாழ் மாவட்டப் பிரிவு. இவ்வாறு அமைந்ததிருக்கும் சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது யாழ்ப்பாணத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடத்தல்கள் கொலைகள் கப்பம் கோரல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவற்றை காரணம் காட்டி இராணுவம் மற்றும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த நிலையில் அவசர காலச் சட்டத்தை அகற்றுதல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தல் யாவும் முடிவுற்ற நிலையில் அரசாங்கத்துள்ள அமச்சரவை தெரிவில் பல முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் அரசியல் காய்நகர்த்தல்கள் நாடுகடந்த அரசின் தீவிர செயற்பாடு என்ற பல காரணிகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் அரசு மீண்டும் புலிப் பீதியை ஏற்படுத்தி அனைத்தையும் திசைமாற்றவும், தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காகவுமே அரசாங்கம் இவ்வாறான பல நடடிக்கைகளை தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தும் தமிழ் மக்களிடையே பரவலாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது

பதவியும் ஆபத்தும்!!

மகாவம்சம் கூறுவது போல், காசியப்ப மன்னன் பாரிய அச்சத்திலேயே இருந்தார். எப்போதாவது எதிரிகள் வந்து தனது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவரது மாளிகையை கல்மலையின் உச்சிக்கு கொண்டு சென்றார். சீகிரி ராஜ்ஜியத்தை ஏற்படுத்திய அவர், தனது மாளிகையை எவரும் நெருங்க முடியாதவாறு பாரிய சுவர்களை எழுப்பினார். அகழிகளை அமைத்து அதில் மனித மாமிசம் உண்ணும் முதலைகளை இட்டார். எதிரிகள் தனது ராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியாதவாறு நாலபுறமும் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார். காசியப்பன் தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஏற்படுத்தி கொண்ட ஏற்பாடுகளை போலவே மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பாதுகாப்பு அரண்களை அமைத்து கொண்டுள்ளதை காணமுடிகிறது. தனது பதவி காலம் முடிவதற்கு முன்னர், மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மேலும் 7 வருடங்களுக்கு பதவிகாலத்தை நீடித்து கொண்டார். அதேபோல் நாடாளுமன்றத்தில் தனது அதிகாரத்தை பாதுகாத்து கொள்வதற்காகவே தனது சகோதர்களில் ஒருவரான ஷமல் ராஜபக்ஷவை சபாநாயகராக நியமித்துள்ளார். ஓய்வுப் பெறும் வயதில் டி.எம்.ஜயரத்ன பிரதமராக நியமிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர், பசில் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஜனாதிபதியும் ராஜபக்ஷ, பிரதமரும் ராஜபக்ஷ குடும்பத்தினாராக இருப்பர். இராணுவம், காவற்துறை உள்ளிட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக ராஜபக்ஷ ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நாலாப்புறமும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதால், எதிரிகள் நுழைய மாட்டார்கள் என மகிந்த நினைக்ககூடும். வெளியில் இருந்து மாத்திரமல்ல, அரசாங்கத்திற்குள்ளும் எதிரிகள் தலையெடுக்க முடியாது என அவர் எண்ணக்கூடும். இந்தியாவில் இருந்து படையை கொண்டு வந்து தனது ராஜ்ஜியத்தை சகோதரர் கைப்பற்றி விடுவார் என்ற அச்சம் காசியப்ப மன்னளுக்கு இருந்தது. எனினும் மகிந்தவுக்கு இருக்கும் அச்சம் என்ன?. ஷமல் ராஸபக்ஷவை சபாநாயகராக நியமித்தன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தனக்கு அச்சம் இருப்பதை மகிந்த முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தினார். மகிந்தவுக்கு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த அச்சம் வெறுமனே வந்துவிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கலைத்தது போல், அமைச்சரவை என்ற சீட்டு கட்டை கலைக்க சென்றதால், மகிந்தவுக்கு இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரேமதாச, ஜே.ஆரின் அரசாங்கத்தில் நீண்டகாலமாக அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் அமைச்சுக்களை மாற்றம் செய்ததால், பெரும் எதிரிகளை சம்பாதித்துக் கொண்டார்.ஜே.ஆரின் காலம் முதல் வர்த்தக அமைச்சராக பணியாற்றிய லலித் அத்துலத்முதலியை பிரேமதாச அந்த பதவியில் இருந்து நீக்கினார். விவசாய அமைச்சர் பதவியில் இருந்து காமினி திஸாநாயக்கவை நீக்கி விட்டு, அவருக்கு பெருந்தோட்டத்துறையை கையளித்தார். இவ்வாறு ஜே.ஆர் காலத்தில் அமைச்சர்களாக இந்த பலரின் அமைச்சுக்களை மாற்றிவிட்டு, பிரேமதாச, அவர்களுக்கு புதிய அமைச்சுக்களை வழங்கினார். இந்த அமைச்சுப் பொறுப்பு மாற்றங்களே ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வழிகோலியது. அது மாத்திரமல்ல, பிரதமர் பதவியை கோரிய லலித், காமினி ஆகியோருக்கு அதனை வழங்காது, ஓய்வுப் பெறும் வயதில் கண்டி மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட டி.பி.விஜேதுங்கவுக்கு அந்த பதவியை வழங்கினார். பிரதமர் பதவியை கண்டிக்கு வழங்கியதன் மூலம் பிரேமதாச பலரை பகைத்துக் கொண்டார். பகைத்து கொண்டவர்களே இந்த நம்பிக்கையில்;லாப் பிரேரணையை கொண்டு வந்தனர். மகிந்த, பிரேமதாசவை போல், சீட்டு கட்டை கலைத்தது மாத்திரமல்ல, பிரதமர் பதவியை கோரிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அந்த பதவியை வழங்காது, பிரதமர் பதவியை கண்டிக்கு வழங்கினார். மைத்திரபால சிறிசேன என்பவர், சந்திரிக்காவிடம் போராடி மகிந்தவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக் கொடுத்தவர். சந்திரி;க்க, லக்ஷ்மன் கதிர்காமருக்கு பிரதமர் பதவியை வழங்க முயற்சித்த வேளையில், அரசாங்கத்தை ஜே.வீ.பீயிடம் இருந்து காப்பற்ற, அந்த கட்சியுடன் போராடிய மகிந்தவுக்கு பிரதமர் பதவியை கொடுக்க வேண்டும் என மைத்தரிபால கூறினார். யாரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கூறி, ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, சந்திரிக்காவிடம் பட்டியல் ஒன்றையும் வழங்கியிருந்தார். அந்த பட்டியலில் முதல் பெயராக லக்ஷ்மன் கதிர்காமரின் பெயரே காணப்பட்டது. இரண்டாவதாக அனுர பண்டாரநாயக்கவின் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், மூன்றாவது பெயராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மகிந்தவை புறக்கணித்து விட்டு, ஜே.வீ.பீயினர் தனது பெயரை பரிந்துரைத்திருந்த வேளையில், ஜே.வீ.பீயின் தாளத்திற்கு ஆடாமல், மகிந்தவை பிரதமராக நியமிக்குமாறு மைத்திரிபால சந்திரிக்காவுக்கு யோசனை கூறினார். லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள நிலையில், மகிந்தவுக்கு அந்த பதவியை வழங்கினால், கதிர்காமர், அதிருப்தியடைவார் என சந்திரிக்கா கூறிய போது, கதிர்காமரை தேற்றும் பொறுப்பை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மகிந்தவை, ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலும் மைத்திரிபால சிறிசேனவே, சந்திரிக்காவின் மனதை மாற்றினார். மகிந்த ஜனாதிபதியானதும், தான் பிரதமராகலாம் என்ற எண்ணம் மைத்திரிபாவிடம் இருந்ததோ தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியாக பெறுபேற்றதும், அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள ரட்ணசிறி விக்ரமநாயக்கவை பிரதமராக்குவோம் மைத்திரிபால, மகிந்தவிடம் கூறினார். சந்திரிக்காவிற்கு ஆதரவுள்ள நாடாளுமன்றம் செயற்படும் நிலையில், மகிந்த ஜனாதிபதியாக பதவி வகிப்பதால், சந்திரிக்காவின் பிரதமரான ரட்ணசிறியை பிரதமராக நியமித்து, அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணியிருக்கலாம். மகிந்த இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டப் பின்னர், நடத்தப்படும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்;று பிரதமராகலாம் என மைத்திரிபால எண்ணியிருக்ககூடும். இதன் காரணமாவே மைத்திரி யுகத்தை ஆரம்பித்து வைப்போம் எனக் கூறி அவர் தனது பொதுத் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார். மைத்திரிபால, மகிந்தவிற்கு அடுத்தவர், என மைத்திரிபால சிறிசேனவின் புத்தம் ஒன்றை வெளியிடும் வைபவத்தில் உரையாற்றிய பேராசிரியர் காலோ பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார். பொதுத் தேர்தல் முடிவடைந்து, மகிந்த, பிரதமர் பதவிக்கான நபரை தேடும் போது, தான் அந்த பதவிக்கு பொறுத்தமானவர் என மைத்திரிபால பகிரங்கமாக கூறியிருந்தார். மைத்திரிபாலவுக்கு பிரதமர் பதவியை வழங்காது மாத்திரமல்ல, அவர் சந்திரிக்கா காலத்தில் வகித்து வந்த அமைச்சு பதவியை அவரிடம் இருந்து பறித்து கொண்டார். அதேவேளை ஊவாவில் இருந்து பிரதமரை தெரிவுசெய்வோம் எனக்கூறிய நிமால் சிறிபாலவுக்கும், மைத்திரிபாலவுக்கு நேர்ந்த கதியே நேர்ந்தது. நிமால் சிறிபால டி சில்வா, பல காலமாக பிரதமராக பதவியேற்கும் கனவை கொண்டிருந்தார். அவருக்கு பிரதமர் பதவி மாத்திரமல்ல, அவர் சந்திரிக்கா காலத்தில் இருந்து வகித்து வந்த அமைச்சு பதவியும் இல்லாமல் போனது. டி.எம்.ஜயரத்ன பிரதமராக பதவியேற்கும் வைபவத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை. அமைச்சர்கள் பதவியேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலரை தவிர ஏனைய அனைவருமே அதிருப்தியான முகத்துடனேயே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சந்திரிக்காவுக்கு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ததன் காரணமாக எதிரிகளை உருவாக்கி கொண்டதாகவும் எதிர்காலத்தில் நாம் பார்த்துகொள்வேமே என பதவியேற்றப் பின்னர், நடைபெற்ற தேனீர் விருந்தின் போது, சிரேஷ்ட அமை;சசர் ஒருவர், அரச அதிகாரியொருவரிடம் தெரிவித்திருந்தார். அவர் கூறியது சரிதான், சந்திரி;க்கா திடீரென அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார். அப்போது மகிந்த தொழிலமைச்சராக இருந்தார். சந்திரிக்கா, மகிந்தவிடம் கலந்தாலோசிக்காமலேயே தொழில் அமைச்சர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அவரை மீன்பிடி அமைச்சராக நியமித்தார். அப்போது முதலே மகிந்த, சந்திரிக்காவுக்கு எதிரான அரசியல் விளையாட்டை ஆரம்பித்தார். காரணம் தான் வகித்து வந்த பதவியில் மாற்றம் செய்தமை தொடர்பில், மகிந்த கடும் அதிருப்தியையும் ஆத்திரமும் வேதனையையும் கொண்டிருந்தார். இந்த நிலையில், மகிந்த ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது, அமைச்சர்களுக்கு தெரியாமல், அவர்களின் பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது, அமைச்சர்களுக்கு ஏற்படும் வேதனையை மகிந்த அறிந்திருக்கவில்லையா?. முடியும். இதன் காரணமாவே சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அவர் அமைச்சரவையை நியமித்தார். சபாநாயகர் தெரிவுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி சந்திருந்தார். ரணில் தன்னுடன் இருப்பதாகவும், தனக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என செய்தியை அமைச்சர்களுக்கு வழங்கவே, ஜனாதிபதி ரணிலை சந்தித்தார். அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தெரிவு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றிருக்குமானால், தனது நியமனம் தொடர்பில் வேதனையடைந்த அமைச்சர்கள் எதிரணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்ற அச்சம் மகிந்தவிடம் காணப்பட்டது. இதன் காரணமாகவே சபாநாயகர் பதவிக்கு போட்டியாளரை நியமிக்க வேண்டாம் என்ற இணக்கத்தை, மகிந்த, ரணிலுடன் ஏற்படுத்தியிருக்ககூடும். ரணிலும் இந்த சந்தர்ப்பத்தை மகிந்தவிற்கு வழங்கி விட்டு, பிரச்சினைகள் முற்றும் போது, அரசியல் விளையாட்டை நடத்த எண்ணியிருக்கலாம். எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷ தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்து கொள்ள நாலாப்புறமும் ராஜபக்ஷ என்ற அதியுயர் பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வெளியில் இருந்து வரும் எதிரியை விட, உள்ளிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பது இலகுவானதல்ல. காசியப்ப மன்னர், சீகிரிய குன்றில் ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி, நாலாப்புறமும் சுவர்களை எழுப்பி, அகழியை அமைத்து, மரண பொறியை வைத்த போதிலும் எதிரிகள் நுழைவதை அவரால் தடுக்க முடியாது போனது. தனது அரசாங்கம், சீகிரி குன்றை விட பலமானது எனவும் தனக்கு ஆறில் ஐந்து பெருபான்மை பலம் இருப்பதாக ஜே.ஆர்.ஜயவர்தன கூறியிருந்தார். அந்த குன்றை இந்திய டயனமைட்டை வைத்து தகர்க்கும் வரை ஜே.ஆர் அதனை அறிந்திருக்கவில்லை. இதனால் மகிந்த கவனமாக இருக்க வேண்டும். எனினும் அதிக கவனமும் ஆபத்தில் முடியக்கூடும்.

கடத்தும் முயற்சி முறியடிப்பு!

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்நாள் புதன்கிழமையும் பாடசாலைச் சிறுவர்களைக் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை. மாணவர்களை இலக்குவைத்து கடத்தல்களை மேற்கொள்ள முயல்வோரால் குடாநாட்டில் பெற்றோரும் மாணவர்களும் கல்விச் சமூகமும் பெரும் பீதியடைந்துள்ளது. கடந்த வாரமும் இதுபோன்ற ஓரிரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தென்மராட்சியில் மீசாலை மற்றும் மட்டுவில் பகுதியில் நேற்று முன்நாளும் சுன்னாகத்தில் நேற்றுக் காலையும் பாடசாலை சிறுவர்களைக் கடத்தும் முயற்சிகள் இடம்பெற்றும் அவை கைகூடவில்லை. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 7 ல் கல்விகற்கும் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரு மாணவிகள் பாடசாலைக்குப் புதன்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றில் வேகமாக வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் நிறுத்திவிட்டு அவ்விரு மாணவிகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டபோது அவர்களிருவரும் அவர்களிடமிருந்து தப்பி அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து வேகமாகச் சென்று மறைந்து விட்டனர். அன்று மாலை 4.30 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மட்டுவிலைச் சேர்ந்த மாணவர்கள், பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மட்டுவில் மத்தியில் வைத்து இவர்களை வெள்ளை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிய மாணவர்கள் அவலக்குரலெழுப்பவே அயலவர்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களைக் கடத்த முயன்ற வானின் இலக்கத் தகடுகள் துணியொன்றால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம், நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சுன்னாகத்தில் தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனொருவனை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். மாணவனின் அருகில் வான் வந்து நின்ற போது அவனின் கழுத்தைப்பிடித்து வானுக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அந்த மாணவச் சிறுவன் அவர்களை உதறித் தள்ளிவிட்டு தப்பியோடவே கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பெருந்தொகை பணத்தைக் கோரி ஆட்களைக் கடத்தும் சம்பவங்கள் சில இடம்பெற்ற அதேநேரம், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி வதந்திகளும் காட்டுத் தீ போலப் பரவுவதால் குடாநாட்டு மக்கள் கலங்கிப் போயுள்ளனர். கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவங்கள் மக்கள் மனங்களில் நிழலாடுவதால் குடாநாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதேநேரம், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் விழிப்புடனிருப்பதாக படைத்தரப்பும் தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு நிமிடம் எனக்காக அழு! நானும் தொலைந்துபோன சுதந்திரம் போலவே! வன்னி போரின் போது பூத்த பிஞ்சு பூ நான் ! மொட்டு பூவாக மாறுமுன்னரே கசக்கப்படும் பூக்களின் நடுவிலே! வாட ''மல்லி''' போலே நானிருப்பதால் தவித்து பதறுகிறேன் துடிக்கிறேன்! தூரதேசம் வாழும் என் உறவுகளே! வாருங்கள் என் தேசத்திற்கு ..... என் போன்றவரை உரித்தாக்க உங்கள் உறவாக்க ஒரு முறை வாருங்கள்...... யுத்தம் தந்த பரிசை கையில் ஏந்திய படி காத்திருக்கிறேன்! என் உறவே வருவீர்களா? இல்லையேல் எனக்காக ஒரே ஒரு நிமிடம் அழுங்கள்!

காணவில்லை!!

பெயர்:சுதந்திரம் வயது: 62 இடம்: வடக்கு/கிழக்கு (ஈழம்) மொழி: தமிழ் தொலைந்த திகதி: 1948 .02 .04 தொலைந்த இடம் :சிலோன் (சிங்களதேசம்) வேடிக்கை நிறைந்த உலகத்தின் முன் விளையாட்டு பொம்மைகளாக ஆட்டுவிக்கப்படும் ''தமிழர்'' நாம் ஆண்டாண்டாய் அழுது புரண்டு,மாண்டு மாறாத ''விழுப்புண்'' அடைந்து திறந்த வெளிச்சிறையாக மாறிநிற்கும் வடக்கு/கிழக்கு அடக்கப்பட்ட உணர்வுகளும் அழிக்கப்பட்ட உயிரும் சொத்துமாய் தொடர்ந்துவரும் திட்டமிட்ட விரோத பேரினவாத நகர்வுகளால் நம் நிலம் தொலைகிறது ....... பசுமை தந்த பச்சை வயலும் தலாட்டி நின்ற நீலக்கடலும் நாளை காணக்கூடுமோ? பிடுங்கள் கண்டு கிளர்ந்தெழுந்த ''சிவகுமாரன்'' முதற்கொண்டு நேற்றுவரை ''உயிரிழந்த" தமிழர் வரை நிறைவு பெறாத ஆசைகளுடன் மண்ணை முத்தமிட்ட மாவீரர் /மக்களை.........எதை புறக்கணித்தோ புறம் தள்ளியோ பலனேதும் இல்லை பேரினவாதம் தோல்விகாண... முதலில் நான் என்று மார் தட்டும் தமிழ்த்தலைவர் ஒன்று பட ................. நான் நீயென்று போட்டிபோட்டு ஒருவர் மீதொருவர் சேறு வாரியிறைக்கும் தமிழர் வாழ்வியல் போராட்டத்தை முன்னெடுக்க உதவி நின்ற ''ஊடகங்கள் '' ஒன்றுபட வேண்டும் ....... ஒத்த குரலில் உரத்துக்கூவ வேண்டும் உணர்ந்து ஐக்கியமாய் கையுயர்த்த வேண்டும்...........

தமிழின அழிப்பின் உச்சக்கட்டம் ......................

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் எதிர்வரும் மே 2 ஆம் தேதி ::: எம்மால் துவக்கு தூக்கி அடிபட முடியவில்லை முள்ளிவைக்காளிலே மக்கள் கொல்லப்படும் போது அவர்களுக்காக குரல் மட்டும் தான் கொடுக்க முடிந்தது எமது அபிலாசைகளை எமது விருப்புகளை சர்வதேசதிட்க்கு உணர்த்த ஜனநாயக ரீதியான ஒரு தருணமே தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் இதற்க்கு அனைவரும் அணி திரண்டு வாக்கு அளித்திடுவோம்
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட நீரோட்டத்தில் சரியான திசையில் தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் ஏற்பட்ட தடங்கல்களை விலக்கியும், களையெடுப்புக்களும், இடைநிறுத்தல்களும் தமிழீழ தேசியத் தலைமையால் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்களாகிய நாம் தமிழீழத் தேசியத் தலைமை கவனித்துக் கொள்வர் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் வாளாவிருந்தோம். ஆனால் தற்போது தமிழீழத் தேசியத்தலைமை நேரடியாக வழிப்படுத்தலுக்கான வேலையைசெய்ய முடியாதுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் தேசியத் தலைமையின் செயற்பாட்டை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றை கருத்திற் கொண்டு வரும் தேர்தலில் கொள்கை பற்றுருதியுடன் உள்ளவர்களை தெரிவு செய்வது எமது கடமை என்பதை புரிந்து கொள்வோம்

தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்!!!

தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் "பயங்கரவாதம்" என்ற போர்வையில்

25 வருடங்கள் ஆகியும் சாதித்தது என்ன?

தெற்காசிய நாடுகள் அமைப்பு எனப்படும் சார்க் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அது ஆரம்பிக்கப்பட்ட இலக்கை எட்டியதாகக் காணப்படவில்லை என்றும், குறைகள் இருந்தாலும் சார்க் அமைப்பு ஏதும் சாதிக்கவில்லை எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனினும் இந்த 25 ஆண்டு காலப்பகுதியில் உலக அளவில் “தெற்காசிய நாடுகளுக்கான ஒரு அடையாளத்தை” சார்க் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று புதுடில்லியில் இருக்கும் தெற்காசிய ஆய்வாளர் டாக்டர் சகாதேவன் தமிழோசையிடம் தெரிவித்தார். அந்த அடையாளம் ஏற்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார். பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியில் தெற்காசிய பிராந்தியம் இன்னமும் ஒரு இணைக்கப்படாத பகுதியாவே இருந்து வருகிறது என்றும் டாக்டர் சகாதேவன் சுட்டிக்காட்டுகிறார். குறைகள் இருந்தாலும் சார்க் அமைப்பு ஏதும் சாதிக்கவில்லை, அந்த அமைப்பினால் பலன்கள் ஏதும் இல்லை என்று கூறுவதையும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறுகிறார். திட்டங்களை நிறைவேறுவதில் சிக்கல்கள் தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் ஏராளமான திட்டங்கள் சார்க் அமைப்பால் தீட்டப்பட்டிருந்தாலும், அதை செயற்படுத்துவதில்தான் பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டுகிறார் சகாதேவன். சமூக ரீதியிலான சில அபிவிருத்துகளை சார்க் அமைப்பு செய்துள்ளது என்று கூறும் அவர், பொருளாதார இணைப்பு என்பதில் ஏதும் முன்னேற்றங்கள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது என்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே அரசியல் உறவுகள் எப்போது மேம்பாடு அடையுமோ அப்போதுதான் சார்க் அமைப்பின் செயற்பாடுகள் திறம்பட அமையும் எனவும் கூறுகிறார் புதுடில்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான பேராசிரியராக இருக்கும் டாக்டர் சகாதேவன். தெற்காசிய நாடுகளுக்கு இடையே இருக்கும் பலவித முரண்பாடுகளும் சார்க் அமைப்பின் வெற்றிக்கு தடைகளாக இருக்கின்றன எனவும் அவர் தெரிவிக்கின்றார். இந்தியா போன்ற நாடுகள் பரப்பளவில் பெரிதாகவும், பொருளாதார வல்லமையும் மிகுந்த நாடுகள் ஒரு புறமும், நிலப்பரப்பில் சிறியதாகவும், பொருளாதார துறைகளிலும் பின் தங்கிய நாடுகளும் இருக்கும் நிலையுமே தெற்காசிய நாடுகளுக்கு இடையே நெருக்கமான இணக்கப்பாடு ஏற்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதும் அவர் கருத்தாக இருக்கிறது. இந்தியா சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தை போல தெற்காசிய நாடுகள் இணைந்து செயற்பட முடியாததற்கு அரசியல் ரீதியான காரணங்களுக்கு அப்பாற்பட்டு அப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகள் இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள் எடை போடுகிறார்கள் என்பது போன்ற வேறு காரணங்களும் இருக்கின்றன எனவும் பேராசிரியர் சகாதேவன் கூறுகிறார். தெற்காசிய நாடுகளிலேயே பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பங்களிப்பு கூடுதலாக இருந்தாலும், அரசியல் பொருளாதார ரீதியில் சில விட்டுக்கொடுப்புகளை இந்தியா செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவின் கொள்கைகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன எனவும் டாக்டர் சகாதேவன் கூறுகிறார்.

யாழில் நகைகளை அபகரிக்க முயன்ற தென்னக யுவதி பிடிபட்டார்

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை வேளை, வயோதிபப் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் அபகரிக்க முற்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த இளம்பெண், பாதுகாப்புப் படைப்பிரிவினரால் பிடிக்கப்பட்டார். யாழ்ப்பாண நகர் சென்றுவிட்டு பஸ்ஸில் முத்திரைச் சந்தியில் இறங்கி தனது வீடு நோக்கி 60 வயது மதிக்கத்தக்க மேற்படி வயோதிபப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த நாகரீகமாக உடையணிந்த மூன்று யுவதிகள் அவரது நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளனர். வயோதிப மாது கூக்குரல் எழுப்பவே, அப்பகுதியில் கடமையில் இருந்த பாதுகாப்புப் படையினர் ஒரு யுவதியைப் பிடித்தனர். ஏனைய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிக்கப்பட்ட யுவதியை படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, குறிப்பிட்ட பெண் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் என்பது தெரியவந்தது.