இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 29 ஏப்ரல், 2010
காணவில்லை!!
பெயர்:சுதந்திரம் வயது: 62 இடம்: வடக்கு/கிழக்கு (ஈழம்) மொழி: தமிழ் தொலைந்த திகதி: 1948 .02 .04 தொலைந்த இடம் :சிலோன் (சிங்களதேசம்) வேடிக்கை நிறைந்த உலகத்தின் முன் விளையாட்டு பொம்மைகளாக ஆட்டுவிக்கப்படும் ''தமிழர்'' நாம் ஆண்டாண்டாய் அழுது புரண்டு,மாண்டு மாறாத ''விழுப்புண்'' அடைந்து திறந்த வெளிச்சிறையாக மாறிநிற்கும் வடக்கு/கிழக்கு அடக்கப்பட்ட உணர்வுகளும் அழிக்கப்பட்ட உயிரும் சொத்துமாய் தொடர்ந்துவரும் திட்டமிட்ட விரோத பேரினவாத நகர்வுகளால் நம் நிலம் தொலைகிறது ....... பசுமை தந்த பச்சை வயலும் தலாட்டி நின்ற நீலக்கடலும் நாளை காணக்கூடுமோ? பிடுங்கள் கண்டு கிளர்ந்தெழுந்த ''சிவகுமாரன்'' முதற்கொண்டு நேற்றுவரை ''உயிரிழந்த" தமிழர் வரை நிறைவு பெறாத ஆசைகளுடன் மண்ணை முத்தமிட்ட மாவீரர் /மக்களை.........எதை புறக்கணித்தோ புறம் தள்ளியோ பலனேதும் இல்லை பேரினவாதம் தோல்விகாண... முதலில் நான் என்று மார் தட்டும் தமிழ்த்தலைவர் ஒன்று பட ................. நான் நீயென்று போட்டிபோட்டு ஒருவர் மீதொருவர் சேறு வாரியிறைக்கும் தமிழர் வாழ்வியல் போராட்டத்தை முன்னெடுக்க உதவி நின்ற ''ஊடகங்கள் '' ஒன்றுபட வேண்டும் ....... ஒத்த குரலில் உரத்துக்கூவ வேண்டும் உணர்ந்து ஐக்கியமாய் கையுயர்த்த வேண்டும்...........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக