வியாழன், 29 ஏப்ரல், 2010

படையினரின் திட்டமிட்ட நடவடிக்கையா?

தமீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அணியென காட்டிக்கொள்ள முற்படும் தமிழ் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகங்களுக்கு இந்த துண்டுப்பிரசுரம அனுப்பப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் சுவர்களிலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் வித்தில் செயற்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தொணியில் அமைந்துள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டவற்றை முழுமையாக தருகிறோம். எச்சரிக்கின்றோம் இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிடப் பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மைச் சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு .இன்று எமது மக்களிடம் உண்டு. ஆனால் இதற்கு மக்களில் சிலர் துணைபோவது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் விதத்தில் 01. வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழியில் எழுதுதல் 02. சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு வாடகை வீடுகளை வழங்குதல் 03. சிங்களவர்களுக்கு வீடுகள், காணிகள், கடைகளை விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல் 04. தனியார் சிற்றூர்திகளில் ( மினிபஸ் ) சிங்கள மொழிப்பாடல்களை ஒலிபரப்புதல், சிங்களப் பேரினவதத் தலைவர்களின் படங்களை வைத்தல் போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தல் வேண்டும். இந்த நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியேற்றப்படும் அதி உச்ச தண்டணையை பெறுவீர்கள் அன்பார்ந்த தலைவர்களே! எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இவ்வேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்கள மயமாக்கலில் இருந்து எமது தாய் மண்ணையும் தாய் மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம். சிங்கள மக்களே உங்கள் இராணுவத்தை நம்பி யாழ்ப்பாணம் வராதீர்கள் இனியும் வந்தால் கடும் துன்பங்களை எதிர்கொள்வீர்கள். தணியாத தாகத்துடன் . . . தளராத வேகத்துடன் . . . தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம். யாழ் மாவட்டப் பிரிவு. இவ்வாறு அமைந்ததிருக்கும் சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது யாழ்ப்பாணத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடத்தல்கள் கொலைகள் கப்பம் கோரல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவற்றை காரணம் காட்டி இராணுவம் மற்றும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த நிலையில் அவசர காலச் சட்டத்தை அகற்றுதல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தல் யாவும் முடிவுற்ற நிலையில் அரசாங்கத்துள்ள அமச்சரவை தெரிவில் பல முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் அரசியல் காய்நகர்த்தல்கள் நாடுகடந்த அரசின் தீவிர செயற்பாடு என்ற பல காரணிகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் அரசு மீண்டும் புலிப் பீதியை ஏற்படுத்தி அனைத்தையும் திசைமாற்றவும், தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காகவுமே அரசாங்கம் இவ்வாறான பல நடடிக்கைகளை தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தும் தமிழ் மக்களிடையே பரவலாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக