ஞாயிறு, 20 ஜூன், 2010

தமிழர் தரப்பின் நிலை..........

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் எப்படியெல்லாம் பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நாளுக்கு நாள் எம்மால் உணர முடிகிறது.
அரசியல் ரீதியாகவும் சரி- உரிமைப் போராட்ட ரீதியாகவும் சரி- ஊடகத்துறை ரீதியாகவும் சரி- தமிழர் தரப்பின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
தமிழர்களாகிய எமக்குள்ளே சண்டை போட்டுக் கொள்வதற்குத் தான் எமக்கெல்லாம் நேரம் கிடைத்துள்ளது.

வெற்றி கொண்டாட்டம் எவளவு காலத்திற்க்கு ....??!!!

கருணாநிதியின் செம்மொழி மாநாடு ஒரு கேலிக் கூத்து!

தமிழும், தமிழினமும் வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவது கேலிக்கூத்தானது- கடும் கண்டனத்திற்கு உரியது என, அ.தி.மு.க பொதுச் செயலாலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய சூழலில்

லெப். செல்லக்கிளி - அம்மான்-சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நேற்றைய ஜப்பானும் இன்றைய தமிழீழமும்!!!!

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் 12 மணித்தியாலமும் 15 நிமிடமும் 17 விநாடிகளும் பறந்து 1945 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ம் திகதி காலை 8 மணிக்கு ஜப்பானின் ஹிரோஷிமா என்ற மிகம்பெரிய கைத்தொழில் நகரம் மீது குட்டிப்பையன் (Little boy) என்ற பெயருடைய அணுகுண்டை வீசியது.


அதனைத் தொடர்ந்து 3வது நாள் அதவாது 9 ம் திகதி நாகசாகி என்ற மற்றொரு கைத்தொழில் நகரம் மீதும் 2வது பெரிய பையன் (Big boy) என்ற பெயருடைய அணுகுண்டையும் அந்த விமானம் வீசியது. உலகம் அதிர்ந்து போனது. முதல் அணுகுண்டு யுரேனியம் இரண்டாவது புளுட்டோனியம்.

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிக்கா சென்றடந்தார்

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிவிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

உலக அகதிகள் தினம்( World Refugee Day)

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கே.பி , புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள்?!!!?

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர்.
புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.