புதன், 8 செப்டம்பர், 2010

நினைவு வீரவணக்கம்

"வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம்" மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் நினைவு வீரவணக்கம். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக...

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது . இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. ' உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம். "எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை உண்டு. அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது

18ஆவது அரசியலமைப்பு திருத்தம் 144 மேலதிக வாக்குகளால் வென்றது

18-வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மை அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர் திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.இலங்கை ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் சீனா.

தெற்காசியாவில் தனது வகிபாகத்தை கோடிட்டுக்காட்டியுள்ள சீனா, ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் என்ற வகையில் உபகண்டத்தின் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தான் விரும்புவதாகக் கூறியுள்ளது. தெற்காசியா உட்பட ஆசியாவின் சமாதானம், ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு சீனா பற்றுறுதியுடன் இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஜியாங் யூ கூறியுள்ளார்.


சம்பந்தன் ஜயாவும் , பியசேனா மாத்தையாவும்.

ஐயா சம்பந்தன் தேர்ந்தெடுத்த ஆட்கள் இவர்கள்!. பியசேன என சிங்களப் பெயருடன், தமிழ் தாயின் பாலைக் குடித்து வளர்ந்த இவர் பெயரில் உள்ள சிங்களப் புத்தியைக் காண்பித்துவிட்டார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முதல் முதல் போட்டியிட்ட சிங்களவர் பியசேன. நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானார். மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மேல்வைத்திருந்த நம்பிக்கையால் இவருக்கு வாக்களித்தனர்.

செட்டிக்குளத்தில் யுவதி கைது !!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் இளம் யுவதி ஒருவர் செட்டிகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.