ஞாயிறு, 7 நவம்பர், 2010

மாவீரர்கள்..!!!

இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !

ஈழத்தமிழா இனியாவது திருப்பிப்போடு தீபாவளியை ....

நேற்றய போராளி அரக்கனாக்கப்பட்டான் தீபாவளி வந்தது… இன்றய போராளி பயங்கரவாதியாக்கப்பட்டான்.. இனி என்ன வரும்…


அன்பான ஈழத்தமிழா தீபாவளி வாழ்த்துக்கள் கூறத்தொடங்கிவிட்டாயா நீ வாழ்க.. உனக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..