ஞாயிறு, 7 நவம்பர், 2010

மாவீரர்கள்..!!!

இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !



இரத்தக் கடலிலே
நீச்சலடித்தவர்கள்
இரையாக்க நினைத்துத்
தூண்டில் போட்டவர்களை
தூண்டிலோடு இழுத்தவர்கள்
உயிர் வாயுவை சுமந்து
சுழியோடியவர்கள்!
எலும்புகளும் மண்டையோடுகளும்
இடறும் போது
இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு
துப்பாகித் தடுப்பால் கரை தேடியவர்கள்
உறுதிக்கும் உவமானமாகும்
உண்மையின் உடன்பிறப்புகள்
எம் விடுதலைத் தீயை
உலகெங்கும் கொழுந்து விட்டெரியச் செய்யும்
கொள்கையின்
தீப்பிழம்புகள்
உறங்கிக் கிடந்தவர்களை
தட்டியெலுப்பிய உதய சூரியன்கள்
போராளிகளிப் படைத்துக் கொண்டிருக்கும்
புதிய சிருஸ்டிகர்த்தாக்கள்!
எதிரியை நோக்கி எடுத்து வைக்கும்
ஒவ்வோர் அடியையும் துரிதப் படுத்தி
முன்னேற வைக்கும் வீரத்துக்கு
விரிவுரை நிகழ்த்திடும் விரிவுரையாளர்கள்!


தமிழீழத்தில் புலரும் பொழுதுக்கு
ஒளி கொடுக்கப் போகும்
சூரியக் கதிர்கள்!
இவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல
எம்முள் எல்லாமாய் இருப்பவர்கள்!


விருதுகளின் பெறுமதி..
அங்கும் இங்குமாய்
குவிந்து புகைந்தபடியே
சாம்பல் மேடுகள்..
உடைபட்ட இடிபாடுகள்
உருக்குலைந்த பிணமலைகள்
வீதிகள் எங்கணும்
அந்நியக் காலடிகள்
இவற்றுக்கிடையே
உருமறைப்புகள் மத்தியில்
குறி பார்த்தபடி வேங்கைகள்
பீரங்கிகள் கவச வாகனகள்
எல்லாமே பொடிப் பொடியாக
ஆய்த பலமும் ஆட்பலமும்
மண்டியிட்டபடியே பின்வாங்க..
வீர மரணங்கள் பெற்றுத் தந்த
விருதுகளின் பெறுமதியே
தமிழீழ விடுதலை!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக