புலம் பெயர் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து அவர்களை திசைதிருப்பும் வகையிலும் சிறிலங்கா மீதான சர்வதேச சக்திகளின் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள சிலர் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் புலம் பெயர் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துளளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 25 ஜூன், 2010
உளவு பார்த்த புலி உறுப்பினர் மாத்தறையில் கைது!
மாத்தறையில், யாசகர் வேடத்தில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய அரசியல்வாதிகள் தொடர்பில் உளவு பார்க்கும் நோக்கில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் மாத்தறை நகரிற்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முக்கிய அரசியல்வாதிகள் தொடர்பில் உளவு பார்க்கும் நோக்கில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் மாத்தறை நகரிற்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
லெப்டினன்ட் சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)
ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.
யாரடா பயங்கரவாதி?
தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பெரும் கொடுமைக்காரன் இட்லரின் அவதாரமாக முசோலினியின் மூளையாக செயல்பட்ட ராசபக்சே என்ற கொலை வெறியனின் செயல்கள் இன்று அம்பலப்பட தொடங்கிஇருக்கின்றன.
பெண்களின் அழுகை நின்றபாடில்லை!!!!
போரின் காரணமாக தமது கணவன்மாரை இழந்து பல ஆயிரம் பெண்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். தமிழ் சமூகத்தில் இந்தப் பெண்கள் தமது சமூக வழக்கங்களுக்கு எதிராகவும் அதேவேளை ஆதரவளிக்காத அரசாங்கத்துடனும் போட்டியிட்டு வாழவேண்டியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினாலே இவர்கள் தமது சுய கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும். போரின் பின்னான நிலமைகள் தொடர்பாக ஏசியாநியூஸ் செய்தியாளர் வழங்கிய அறிக்கை வருமாறு:
தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினாலே இவர்கள் தமது சுய கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும். போரின் பின்னான நிலமைகள் தொடர்பாக ஏசியாநியூஸ் செய்தியாளர் வழங்கிய அறிக்கை வருமாறு:
இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் ....!
இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகைளை இடைநிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையினை 6 மாத காலங்களுக்கு நீடிப்பதாயின் தனது நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என 15 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆவ் நிபந்தனைகள் வருமாறு.
நீதிபதிகள் இடமாற்றப்படுவது நீதித்துறைக்கு உகந்ததல்ல!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலாசார சீரழிவு என்பன நடைபெற்றுவருகின்றன. எமது சொந்த தமிழ் உறவுகளும் இப்படிப்பட்ட சமூக சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைகமாகவும் ஈடுபட்டிருக்கின்றன என்று கேள்விப்படும்போது மனதுக்கு வேதனையாகவுள்ளது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)