வியாழன், 22 ஏப்ரல், 2010

வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு

சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த ஐந்து கூட்டுத் தொழில் துறைகளும் சிறிலங்கா அரசு சார்பில்லாத தனியார் நிறுவனங்கள் மூலமே செய்யப்படும். சிறிலங்கா தனியார் துறை 1400 மில்லியன் ரூபாய்களும், அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் 600 மில்லியன் ரூபாய்களும் முதலீடு செய்யும். ஆக மொத்தமாக 2 பில்லியன் ரூபாய் முதலீடுகளில் ஐந்து தொழில் துறைகள் உருவாக்கப்படும். கடல் மற்றும் நன்நீர் மீன்கள் வளர்த்தல், ஆடைகள் தயாரிப்பு, உணவு விநியோகம், தோட்டப் பயிர்ச்செய்கை போன்ற வகையான தொழில் துறைகள் இவற்றில் அடங்கும். ஆடைகள் தயாரிப்பு கூட்டுத்தொழில்: வடக்கு பகுதியில் உள்ள வவுனியாவிற்கு அருகில் ஓமந்தையில் ஆடை தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை உருவாகுவதன் மூலமாக வடக்கு பகுதியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள இளம் விதவைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு சுமார் 1000 வேலை வாய்ப்புக்களை ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனம் அளிக்கும். மீன் வளர்ப்பு கூட்டுத்தொழில்: வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறிலங்கா மீன்வளர்ப்பு நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் தொழில் கூட்டு ஏற்பட்டுள்ளது. மீன் விற்பனை வருவாய் மட்டுமன்றி உயர்தர கடல் உணவுகள் மூலமும் வருவாயை இரு மடங்காக திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்குமான தொடர்பை உண்டாக்குதல்: போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை முன்னணி விநியோக நிறுவனம் ஆராய்ந்து அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் வருவாயிலும் உயர்வு ஏற்படும். சுமார் 1500 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதன் மூலம் பலனடைவர். யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய குளிர் சேகரிப்பு மையங்கள் இதற்காக உண்டாக்கப்படும். வடக்கில் தோட்டக்கலை கூட்டுத்தொழில்: சிறிலங்க தோட்டக்கலை நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நவீன முறைகளின் மூலமாக காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் உற்பத்தி பெருக்கப்படும். இத்திட்டத்தின் படி 1100 விவசாயிகள் பயனடைவர்.

மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறுமாறிவரும் .......................


இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே உங்களோடு ஒரு நிமிடம்…… நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம். இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை. தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது. ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ் மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது. மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும். மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது. அந்த வகையில் நாம் கீழே குறிப்பிடும் ஆக்கம் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தலாம்..? ஆனால் …. எல்லாம் நடந்து முடிந்து நடப்பவை நல்லவையகட்டும் என்று ஆனபின்பும்…. உள்ளிருந்து கொல்லும் வியாதிபடைத்தோரின் வன்மமும் மறைமுக சதிவலைப்பின்னல்களும் துரோகங்களும் தொடரவே செய்கின்றன. இவ்வாறான இழிசெயல்களை நிறுத்தும்படி ஏன் எவரும் தட்டிக்கேட்கவில்லை? துணிவில்லையா? இல்லைப் பயமா? இல்லை விடுதலை வியாபாரமா? ஏன் எதற்கு இந்த வன்மம்? இன்நிலையில் எவரெவரோவெல்லாம் தாயகவிடுதலையை உரிமைகொண்டாடி கொடுமைசெய்யும்போது நாம் மட்டும் உண்மைகளை வெளிக்கொணர காலம் தாழ்த்துவதென்வது ஒரு தவறாகவே உணருகின்றோம்… எனவே: வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்? [மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்] உங்கள் மனம் எப்படித்துடிக்கிறது என்பதை அடுத்தவனின்மீது குற்றம் சாட்டுவோர் புரிந்துகொண்டால் வேதனையின் வலி புரியும்….., ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் தாயக விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுதமாட்டோம். இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன் வைப்பதற்குக்காரணம் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது எமக்கு வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே. இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. இன்போ தமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வத்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின் கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆகையால்.....? ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளர்களாய் ஆகிய நிலையில்........? எங்கள் கருத்தை நேரடியாகவே உரியவர்களிடம் முன்வைக்கின்றோம் - இன்போதமிழ் குழுமம்- இனி…… உங்களிடம் நேரடியாகக் கேட்கின்றோம் நாடு கடந்த தமிழீழ அரசை நாசமாக்க எழுந்து விட்ட நாசகாரக் கும்பல்களே உங்கள் உள் நோக்கம் தான் என்ன? நீவீர் யாருடைய கைக் கூலி ? தமிழினத்தின் இன்றைய பரிதாப நிலையை, அவசர அவசிய தேவைகளை முதலில் அறிந்து கொள் தெளிந்து கொள் அடுத்த நிலைக்குப் போகத் துணிந்து கொள் ! கரும்புலியாக எங்காயினும் போய் வெடித்துச் சிதறப் போகும் உணர்விருந்தால் அதைச்செய்துகொள்? அதை உனக்கு செய்யும் துணிவை உன் தொடர்பகத் தளபதிகள் ஊட்டி வழர்க்கவில்லையா? உண்மைக்காய் உயிர் கொடுத்த தலைவன் பாசறையில் வளர்ந்த்தாய் பறைசாற்றும் உங்கள் பிதற்றல்களுக்கு உது புரியவில்லையா? அதுவே உன் அறிவுச் சுடரின் ஒளியாக இருக்குமெனில் அதற்கான முழுச் சுதந்திரமும் உனக்கு உண்டு , உடனே முதலில் அதனைச் செய்து காட்டி காவியமாகுங்கள்? காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.? யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை. ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே? நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா? அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா? உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே! வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது உன்வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால் ? மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும் உங்கள் மனம் எப்படித்துடிக்கும் என்பதுவும், ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் விடுதலை விடுதலைக்காக வாழ்நாள்முழுவதும் தன்னைஅர்ப்பணித்து அந்தப்புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுத்தாதீர் . இந்தக்குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன்வைப்பதற்குக்காரணம் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே. இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. இன்போதமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வ செய்தித்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின்கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சரி நீவீர் திரு. உருத்திர குமாரனைப் பற்றி சொன்னது இனியும் சொல்லப் போவதாக மிரட்டுவது அத்தனையும் அரிச்சந்திர வாக்காகவே இருக்கலாம். ஆனால் அந்த அரிச்சந்திரன் யார் என்பதை உம் அருவருப்பான கரும் உருவம் களங்கப் படுத்துகிறதே! எனவே உங்கள் திருமுகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் மக்கள் முன் வாருங்கள் நேரடி விவாதத்துக்கு. நாங்கள் சொல்கின்றோம் நாம் யாரென்று அதனால் தான் துணிவோடு விமர்சனங்களை முன்வைக்கின்றோம். கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம். உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம். முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு. உங்களுக்கு யாழ் நகரபிதா விசுவநாதனைத் தெரிகிறது. அது முதல் யாழில் இடம் பெற்ற இப்பொழுதும் இடம் பெற்றுவரும் துன்ப துயரங்கள் பற்றி ஏதும் தெரியுமா? அவற்றுக்கு நீவீரும் உம்போன்ற புரட்டுப் போராட்ட வீரர்களும் காட்டும் தீர்வு என்ன? அதை செய்து காட்டுங்கள் உங்களிடம் உமையும் சத்தியமும் இருந்தால் உங்கள் பெரிய அறிவை பாராட்டி உன் வழிக்கே மக்கள் திரு. உருத்திர குமாரனின் தலைமையை விடுத்து உன்னோடு வருவர். ஏன்? அவர்கள் என்ன நாங்களும்தான் செல்லும் வழிதவறாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காய் வருவோம்…….? அப்படி வருவதற்கு ஒரு சிங்களவரான வைத்திய கலாநிதி பிரையன் செனவிரத்னா வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த தமிழரை நோக்கி விடுத்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தந்து உங்கள் தெய்வீக முக தரிசனத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்! வட்டுக் கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு மட்டும் ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை முடிவு செய்யாது? என்பதால்? நாடு கடந்த அரசின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல முடியும். அதனால்தான் எம் போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை ஆதரிக்கிறோமே அல்லாது திரு. உருத்திர குமாரன் கூறுவதற்காக அல்ல. திரு. உருத்திர குமாரனின் சட்ட அறிவும் கல்வித் தகமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் இலட்சியப் பற்றும் உங்களுக்கோ உன்னை வழிநடத்தும் எந்தக் கொம்பனுக்காயினும் இருந்தால் முன்வந்து வழி நடத்துங்கள் உங்களின் பின்னால் வரத் தமிழினம் துணிந்து விடும். இனி டாக்டர் பிரையன் செனவிரத்னாவின் வாதத்தின் சாராம்சம் இதோ! நீங்கள் சிங்கள இனத்துடன் இப்போது உள்ள இரண்டாந்தர அடிமை நிலையில் காலவரையரை இன்றிச் சந்ததி சந்ததியாக வாழச் சம்மதமா? முட்கம்பி முகாம்களில் வதைபட்டுச் சாகும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன? அரசியல் தீர்வுக்காக காலவரையரை இன்றிக் காத்திருந்து ஒரு அமைதித் தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா? உங்களைப் போன்றோரிடம் துப்பாக்கியும் துணிச்சலும் மறு பேச்சுப் பேசுவோரைத் சுட்டுப் போடும் வீரமும் இருக்கலாம்.? உங்களின் வெத்து வேட்டு வீரத்தை விட விலை மதிப்பற்ற மாவீர மாணிக்கங்களையும் மனித நேயமிக்க மானுடத்தையும் அனைத்துக்கும் உயர்வான தாய் மண்ணையும் தன்மானத்தையும் தமிழினம் இழந்து நிற்கையில் வேண்டாம் இந்த ஐந்தாம் படைத் துரோகத் தனம்.? இறுதியாக முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் பொன்னான சிந்தனைகளை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்.? உங்களைப் போன்றே 1940களில் இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய முஸ்லீம் மக்களினது நியாயமான சந்தேகங்களை கேட்கவோ தீர்க்கவோ முற்படாத காரணத்தால் இன்று வரை பகமையில் இரு நாடுகளும் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியமே அழிவுச் சகதியில் சிக்கிக் கிடக்கிறது. இந்திய பிரிவினை பற்றிய அரசியல் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுங்கள். அன்று இந்தியத் தலைவர்கள் நடந்த அதே வழியில் தான் இன்று இலங்கைச் சிங்களத் தலைவர்களும் நடந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி உள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் இல்லாமல் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது. தமிழீழத்தில் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கள் இந்துக்களைப் போன்ற உரிரைமகளும் பொறுப்புகளும் பெறத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை நீங்களும் உம்போன்ற விடுதலை வீரர்களும் தெரிந்து கொள்வது அவசியம். நாம் இன்னமும் காட்டு மிராண்டிகள் நிலையில் இருக்க முடியாது. வீரம் மட்டும் அல்ல விவேகமும் வெற்றிக்கான படிக்கல் தான் என்பதை உணர்ந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள். "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" இது எமக்கான எதிர்காலம் மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது. அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது. சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது. ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு. பிரபாகரன் என்ற 'வரலாற்றின் பிரசவத்தால்' செய்ய முடியாததை, தமிழர்களின் சக்தியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாததை இனி யாரால் தான் செய்ய முடியும் என்ற கேள்வியைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான். ஆனால், தமிழர்களுடைய இராணுவ பலம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற காரணத்திற்காக, எமது விடுதலைப் பயணத்தை இடை நடுவில் விட்டுவிடமுடியாது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன. சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர். தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார். தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும். எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது. தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க. ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது. ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு. தேக்கமடைந்துள்ள போராட்டச் சக்கரத்தை நகர்த்துவதற்காகப் போட்டிகள், தேவையற்ற விமர்சனங்கள், சுய நலத்தைக் கைவிட்டு விட்டு தேசியம் மீதான பற்றுறுதியோடு நீண்டகால அடிப்படையில் செயற்படுவதற்கு ஒற்றுமைப்படுவோம், உறுதி பூணுவோம். ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார். எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம். தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல். . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல். . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல் . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல். சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல். . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல் ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல். தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல் மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே. வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.

அறிவித்தல் புலிகளின் குரல் வானொலி................


எதிர்வரும் மே மாதத்தோடு சிங்கள அரசும் அதற்கு உறுதுணையாகவிருந்த வல்லரசுகளும் எமது தாயக உறவுகள் மேல் கொடும்போர் தொடுத்து நிகழ்த்திய இனப் படுகொலையின் ஓராண்டு நிறைவடைகிறது. மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் என்று தொடர்ந்து, புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளியவளை என்று நடந்து முடிந்த கோரத்தாண்டவத்தில் கொத்துக் கொத்தாகவும் குடும்பம் குடும்பமாகவும் எமது மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். இன்னொரு புறத்திலே தமிழர் படையின் வீரம் செறிந்த போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அளிவிட முடியாத பெரும் படைப்பலத்துடனும் வல்லாதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடனும் எம்மினத்தைக் காவுகொள்ள வந்த சிங்களப் படையை எமது போராளிகள் தீரமுடன் எதிர்கொண்டு போராடினார்கள். மகத்தான தியாகங்களும் சாதனைகளும் இறுதிநேர யுத்தத்தில் படைக்கப்பட்டன. இவ்வேளையில், கடந்த ஆண்டு நடந்த இனப்படுகொலையினதும் வீரமிகு போரினதும் பதிவுகளை புலிகளின் குரல் வானொலி தொகுக்க விரும்புகிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பாகவோ வீரமிகு போராட்டம் தொடர்பாகவோ ஆக்கங்கள், ஆவணங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி சாட்சிகளான பலர் இன்று மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தோ அயல்நாடுகளில் தஞ்சமடைந்தோ இருக்கும் நிலையில், அவர்கள் தமது நினைவுப்பகிர்வுகளைப் படைப்புக்களாக்கி புலிகளின் குரல் வானொலிக்கு அனுப்பலாம். புலம்பெயர்ந்த, தமிழக, தாயக உறவுகள் அனைவருமே தங்களது படைப்புக்களை அனுப்பலாம். படைப்புக்கள் கதை, கவிதை, சிறுகதை நாடகம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படலாம். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: articles@pulikalinkural.com நன்றி. புலிகளின் குரல் வானொலி.

மறக்கடிக்கப்படுகிறதா கிழக்கு?


மே 2009ல் போர் முடிவுக்குவந்த பின்னர் வடபகுதி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்ட வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதிலேயே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தமது கவனத்தினைக் குவித்திருக்கின்றன. 'வடமாகாணத்தின் வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே அனைத்துலக சமூகம் தனது கவனத்தினைச் செலுத்துவதால் கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய புனர்வாழ்வுப் பணிகளுக்கான உதவிகளைப் பெறுவது தொடர்ந்தும் கடினமானதாகவே இருக்கிறது' என உலக நலவாழ்வு நிறுவனத்தினது உடனடி மனிதாபிமான நடவடிக்கைக்கான தொழில்சார் அலுவலர் எட்வின் சல்வடோர் [Edwin Salvador] கூறுகிறார். 'உட்கட்டுமானங்களின் மீள்நிர்மானம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகளை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைக் கிழக்குவாழ் மக்களுக்கு வழங்குவது சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது' என அவர் தொடர்ந்தார். ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர் ஆணையத்தின் தகவலின்படி, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அனைத்தையும் அரச படையினர் தம்வசப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு மோதல்கள் முடிவுக்கு வர 200,000 இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள். மோதல்களின் போது கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளான கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட மனிதவளம் மற்றும் போதிய நிதி வழங்கல் இன்மை என்பன கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான நலவாழ்வு சேவைகளை வழங்குவதில் பெரும் தாக்கதினை ஏற்படுத்தியதாக சல்வடோர் கூறுகிறார். 'கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் முடிவுக்குவர அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவந்த அனைத்துலக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், வடக்கில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கில் தாம் முன்னெடுத்துவந்த வேலைத்திட்டங்களைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். போதிய நிதியினைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அபிவிருத்திப் பணியினை மேற்கொள்வதில் போதிய அனுபவம் இன்மை என்பனவே இதற்காக காரணம்' என்கிறார் எட்வேட் சல்வற்றோர். கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் முடிவுக்கு வந்தபோது, சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் தொடக்கத்தில் அங்கு செயலாற்றி வந்ததாகக் கூறும் உலக நலவாழ்வு நிறுவனம் தற்போது Comité d’Aide Médicale [CAM] நிறுவனம் மட்டும் செயல்படுவதாக கூறியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நிதியுடனிருக்கும் மாகாண நலவாழ்வு திணைக்கள அதிகாரிகளும் சுகாதார அமைச்சினைச் சேர்ந்தவர்களும் கிழக்கு மாகாணத்தில் போரினால் சேதமடைந்த சுகாதார வசதிகளை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுப்பதற்குத் தம்மால் முடிந்தவரை முயன்றுவருவதாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவிக்கிறது. கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் தவிந்த சிறு நகரங்களிலிருக்கும் நலவாழ்வு வசதிகள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் சேதமடைந்து விட்டன. 'இவ்வாறாகச் சேதமடைந்த நலவாழ்வு வசதிகளைப் புனரமைக்கும் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக தமக்கான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் நீண்ட தூரங்களுக்குப் பயணிக்கவேண்டி இருக்கிறது' என சல்வற்றோர் தொடர்கிறார். 'இந்தத் தேவையினை நிவர்த்திசெய்யும் வகையில் நடமாடும் மருத்துவ சேவைகள் முன்னனெடுக்கப்பட்டு வந்தாலும், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதால் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று நடமாடும் மருத்துவ சேவையினை முன்னெடுப்பது முடியாத காரியமாகவே இருக்கிறது' என கூறுகிறார். இது தவிர, பொருத்தமான நலவாழ்வுப் பணியாளர்களை தேடிக் கண்டுபிடிப்பதும் சவால் நிறைந்த பணியே. கிழக்கு மகாண நலவாழ்வு சேவைகளைப் பொறுத்தவரையில் முக்கியமான பல பதவிகளுக்கு இன்னமும் வெற்றிடங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதன் விளைவாக தற்போது சேவையிலிருக்கும் மருத்துவர்களும் தாதியர்களும் நிரந்தரமாக ஓரிடத்தில் தரித்திருக்காமல் சுழற்சிமுறையில் பணிசெய்யவேண்டியிருக்கிறது' என உலக நலவாழ்வு நிறுவனத்தினைச் சேர்ந்த எட்வின் சல்வடோர் கூறுகிறார்.

ஐ.நா வின் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கு முஷாரப் ஆட்சியில் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறியதுதான் காரணம் என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாற்றியிருந்த நிலையில், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் கிடைத்தால்தான் முஷாரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பெனாசிர் படுகொலை குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிப்படையாக இருப்பதால் அதனை பாகிஸ்தான் அரசு வரவேற்பதாக கூறினார். "பெனாசிரை கொன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். அரசின் முயற்சியும் அதுவேதான் என்பதால், நிச்சயம் அது நிறைவேற்றப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே‚ மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்… மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்… மே 18… மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்… மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்… மே 18… நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது… வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்… விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்… எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய… சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா…? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா…?

இலங்கையில் மனித உரிமைகளை பேணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்


இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் ஆகியவற்றை நீக்கி மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் போர் முடிவுற்ற பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் அந்த நாட்டில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும்.அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அந்த நாட்டில் பரவலாக மனித உரிமைகள் மீறப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளன. போர் முடிவுற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்றம் நாளை 22 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளது. 1971 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, இடைவிடாது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் ஆகியவற்றை நீக்கி மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும். இலங்கை முன்னேறிச் செல்ல வேண்டுமானால் மக்களின் மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறி தட்டிப்பறிக்கும் இச் சட்டங்களை முற்றாகக்களைந்து, மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் சட்ட விதிகளை நீக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பொதுசன பாதுகாப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகள் என்பன இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகளை மீறத் தூண்டுதல் அளித்தும் உதவி புரிந்தும் வந்திருக்கின்றன என்றும் மல்கோத்ரா கூறினார். இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கும் மனிதாபிமான உரிமைகளை உரிய முறைப்படி நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. நீதித்துறை செயலற்றுப் போகும் விதத்தில் இதனை நடைமுறைப்படுத்துகின்றது.அவசரகாலச் சட்டத்தின் கீழாக விதிகளை அமைத்துள்ளது. இப்போதுள்ள நடைமுறை நீக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மல்கோத்ரா மேலும் வலியுறுத்தியுள்ளார்

துணைப்படைக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு....

பொதுத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அமைதிகாத்து வந்த அரச தரப்பும், துணைப்படைக் குழுக்களும், தோ்தலைத் தொடர்ந்து தமது வன்முறைச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ளன. தோ்தல்வரை சற்று ஓய்ந்திருந்த கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், பாலியல் துன்புறுத்தல் என்பன தமிழர் தாயகப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. வவுனியா திருநாவற்குளம் சிவன்கோவில் பகுதியில் கொள்ளையிட்ட துணைப்படைக் குழுவினர் வீட்டில் இருந்த தயாரையும், 3 பிள்ளைகளையும் குத்திக் காயப்படுத்தியிருந்தனர். இதில் 9 அகவையுடைய ஜனனி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் நாவாலியைச் சோ்ந்த இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டு, 50 இலட்சமும், 30 இலட்சம் ரூபாவும் கப்பமாக கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக யாழ் சுன்னாகம் பகுதியில் வவுனியா முகாமில் இருந்து சென்றிருந்த இளம் பெண் ஒருவர் துணைப்படைக் குழுவைச் சோ்ந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்ட இவர் மறுநாள் தப்பி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து மானிப்பாய் பார்வதி முகாமில் தங்கியிருந்த 13 அகவையுடைய துரைசிங்கம் அஜீத்குமார் என்ற சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட இருந்த போதிலும், அந்தக் கடத்தல் முயற்சியில் இருந்து சிறுவன் தப்பிச் சென்றிருந்தார். இவர் கடத்திச் செல்லப்பட முயற்சிக்கப்பட்டபோது வெள்ளை வானில் ஏற்கனவே கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மேலும் இரண்டு சிறுவர்களைக் கண்ணுற்றதாக குறிப்பிட்ட சிறுவன் தனது முறைப்பாட்டில் கூறிய போதிலும், மானிப்பாயில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை படைகள், மற்றும் அரச ஆதரவுக் கட்சிகளின் துணைகள் இன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கடினம் எனவும், தோ்தலில் அதிக பணத்தைக்கொட்டிச் செலவழித்த துணைப்படைக் குழுக்கள், மக்களைக் கடத்தி கப்பம் பெற முனைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது