இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 22 ஏப்ரல், 2010
ஐ.நா வின் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கு முஷாரப் ஆட்சியில் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறியதுதான் காரணம் என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாற்றியிருந்த நிலையில், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் கிடைத்தால்தான் முஷாரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பெனாசிர் படுகொலை குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிப்படையாக இருப்பதால் அதனை பாகிஸ்தான் அரசு வரவேற்பதாக கூறினார்.
"பெனாசிரை கொன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். அரசின் முயற்சியும் அதுவேதான் என்பதால், நிச்சயம் அது நிறைவேற்றப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக