ஞாயிறு, 18 ஜூலை, 2010

இண்டர்போலாலும் இலங்கை அரசாலும் குறிவைக்கப்பட்டுள்ள புதிய முகங்கள் .....

ஐயா எனப்படும் சங்கானையினை பிறப்பிடமாக கொண்ட பொன்னையா அனந்தராஜா அல்லது இராஜா எனப்படும் ஐயா இவர் அமெரிக்கன் பாஸ்போட் வைத்துள்ளாராம். இவர்

நம் தாய் மண் இன்று மாற்றார் கையில். கடந்த வருடம் மே மாதம் வரை, துரோகத்தனங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழ மண் அந்நியர்களினால் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் கூட, என்றாவது ஒரு நாள் எமது மண் பூரணமாக மீட்கப்பட்டு விடும், விடுதலை பெறும் என்கிற நம்பிக்கை எம்மில் 80%மானோர்க்கு இருந்தது. ஆனால் அன்று தொட்டு இன்றைய நாளின் இந்த நிமிடம் வரை எமக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மின விடுதலை எதிர்ப்பாளர்களினால், எமது மண்ணிற்கு, எமது மக்களின் விடுதலை வரலாற்றிற்கு, இழைக்கப்பட்ட துரோகங்களினால் இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம். !!


தேசியம் நாம் பேசினால் .....???

எம் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் ஏற்பட்ட வாசகர் தர்க்கம் காரணமாக அவ் வாசகர்களின்கருத்தை பலரின் ஆலோசனைக்கு 
அமைய எம்மால் நீக்கப்பட்டது .இந்த கருவை பொருளாக எடுத்து ஒரு
இணையம் எம் மீது தம் கணைகளை தொடுத்துள்ளது.முதற்கண் எம்மால் அவர்களுக்கு எதாவது தாக்கம்ஏற்ட்பட்டிருப்பின்மன்னிப்பு  கேட்டுக்கொண்டு.............
அவர்களிடம் சில .........???????/
உங்களுக்கு மட்டுமா தமிழ் தேசியம் என்ற பதம் பயன்படுத்த அனுமதி ?வாசகர்கள் ,(நிருபர்கள் கூட )புதுசெய்தியை வேறு இணையத்தில்
 பார்த்து பிரசுரிக்க தடையா ?துரோகி ,எதிரி ,போராளி என்பதன்
உள்அர்த்தம் என்னவென்று தெரியுமா ?அப்போ சமூகவிரோதி உங்கள் பார்வயில் யார் ?
ஈழப்போராட்டம் அழிய முன் இருந்த அதே உணர்வுடன் இப்போ நீங்கள் உள்ளீர்களா ?தனிப்பட்ட விரோதங்களைஏன் நீங்கள் வாசகராக வந்து 
கரும்புலிகளின் பெயர் கொண்டு இயங்கும் உயிரம்புகள் மீது பழி போடுகிறீர்கள் ?
எமது போராட்டம் அழிய அடிப்படை காரணம் என்னவென்று தெரியுமா ?அல்லது தெரிந்தவர் போல் நடிக்கிறீர்களா ?
நாம் தமிழ் தேசியத்தை கதைக்க,பேச உரிமை இல்லை என கூறநீங்கள் யார் ?தேசிய தலைவரின் வழி நின்றுபோராடிய அனைவரும் பொழுது 
போக்குக்காகவா ஆயுதம் ஏந்தினார்கள் ?
உறுதியுடன் ,உணர்வுடன் ...
எமக்கு யார் யார் ,துரோகி ,எதிரி ,போராளி ,சமூகவிரோதி ,முகவர் ,என்பது பிரித்து அறியவும் ,அதன் உண்மை
தன்மையும்,தெரியும் .(ஆதாரத்துடன் )
நாம் எமது போராட்டத்தையும் ,எமதுதேசியதலைமையும்,மனம்கொண்டு ஏற்று உடலை வருத்தி .உயிரைகொடுத்த கரும்புலி மாவீரரின் பெயர்
 கொண்டு இயங்கும் இணையம் .நாம் துரோகிகளை எரிப்போம்,
.எதிரியை எதிர்ப்போம். ..சமூகவிரோதியை இல்லாதொழிப்போம்.ஈழவிடுதலைக்கு உரமேற்றும் போராளிக்கு
தோள்கொடுப்போம் .
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்

கருணாநிதி தமிழனுக்கு விடும் அச்சுறுத்தல் ..

எமது கடமை ...செய்வோம் அதனை மனஉறுதியுடன் ...

விடுதலைப் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சொந்தம் அதே போல் போராட்டத்தால்வரும் கஷ்டங்களும் துன்பங்களும் எல்லோரும் ஒன்றிணைந்து பங்குகொள்ள வேண்டும் .ஒன்றினைந்துநாம்
மனஉறுதியுடன் போராட்ட ஆரம்ப காலத்தில் எப்படி ஆரம்பித்தோமோ அதேபோல் எல்லோரும் தமிழுக்காகமீண்டும் ஒருமுறை ஆரம்பிக்க
 வேண்டிய காலத்தின் கட்டாயம் எம் முன்னுள்ளது .அமைதிவழி ,அஹிம்சாவளி ,ஆயுத போராட்டம்என விரிவுபட எமது போராட்டம் உலகை
 உலுக்கியதால் உலகம் தந்திரமாக எமது போராடத்தை அழித்தேவிட்டது .
ஆரம்ப காலத்தில் எமது போராட்டம் நவீனமயப்படாமல் ஆரம்பித்த போது இல்லாத பிரச்சனைகள் இப்போது ஆரம்பித்துஎமது தமிழ் தாயின் இதயத்தில் 
குத்தி கீறி கிழித்துவிட்டது.அதற்கு மருந்து எம்மால் கொடுக்க முடியாவிட்டாலும்வெந்த புண்ணில் வேல்பாச்சாமல் இருக்கஎம் மக்களினது 
பெயராலும் மாவீரது பெயராலும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு ...
எமக்கு தேவை தமிழனின் நிம்மதியான வாழ்வுடன் கூடிய சுயநிர்ணய உரிமை .இதற்கு எம் முன் இருக்கும் ஒரே வழி சிறந்த
புலனாய்வு வலையுடன் கூடிய தந்திரப்போர்....! .இவ் உலகம் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மின விடுதலையை அழிக்க உறுதுணையாக
நின்றதன் பலனை உலகம் தற்போது பொருளாதார வீழ்ச்சி எனும் போரை அனுபவித்து கொண்டு வருகிறதை கண்கூடாக பார்க்கலாம்.
அன்பான தமிழ் பேசும் மக்களே ..
எமது போராட்டம் சரிய காரணமாக இருந்த வரலாற்று தவறுகளை திருத்தி மீண்டும் எமது போராடத்தை ஆரம்பகாலத்தை
நோக்கி நகர்த்தி அப்போராட்டம் சிறந்த புலனாய்வு கட்டமைப்புடன் அமைதி வழியற்ற ஆயுத வழியற்ற அஹிம்சவளியற்ற .,
ஒரு மகாதந்திரோபாய போரை நாம் இலங்கை அரசுக்கெதிராகவும்,சர்வதேச வலைபின்னலுக்கு எதிராகவும் ஏற்படுத்தி
எமது போராட்ட நியாயத்தையும் எமது தமிழின் தலை குனியா தன்மையை அவர்களுக்கு அவர்களின் பாசையில் புரிய
வைப்போம்.தமிழ் பற்று இரத்தத்தில் இருக்கவேண்டும் தமிழனாய் பிறந்தவனுக்கு .....இல்லாவிடில் எல்லாவற்றையும் விட்டு
ஒதுங்குவது தமிழுக்கும்,அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழினத்துக்கும் மிக நல்லது.
உயிரம்புகளின் ஒரு அம்பு

மறவர் மனம் ....

விடுதலையின் விலைதானே மரணம்.
விடுகதையா தினம்போட்டு மகிழ
ஒடுக்கிவைத்து தடுப்பாரை தகர்க்கும்
ஓய்வறியா நெடுந்தூரப் பயணம்
கெடுப்பதற்கு இரண்டகத்தார் இழைக்கும்
கெடுமதியை முறியடித்து ஒடுக்கும்;
தடுக்கமின்றி தமிழீழம் அமைய,,

மேஜர் கேடில்ஸ்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை )

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தடை முகாமில் உள்ளோர் மகிந்தாவுக்கு முறையீடு -.பி பி சி

முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த யுத்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டுள்ளனர்.

புதிய ஐ .நா பிரதிநிதியின் வரவால் நன்மையடையுமா தமிழினம் ?

இலங்கைக்கான ஐ.நா செயலக ஒருங்கிணைப்பாளர் நீல் பூனே அடுத்த கிழமை இலங்கைக்கு வரவுள்ளார் என ஜ.நா நாளாந்த ஊடக பேச்சின் போது ஐ.நா ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கு படையினர், பொலிஸார் அடங்கிய செயலணி சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை ..

நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தி அதனை ஒழித்துக்கட்ட படையினர் மற்றும் பொலி ஸாரைக் கொண்ட விழிப்புணர்வுச் செய லணி ஒன்றை அரசாங்கம் அவசரமாக உடனடியாக உருவாக்கவிருக்கிறது.

நல்லூர் கந்தன் யாழ் மேயருக்கு கனவில் வந்து கூறிய புதிய கட்டுப்பாடு விதிகள்

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்துக்கு வரும் பெண்கள் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சேலை, நீளப்பாவாடை, சட்டை, தாவணி போன்ற உடைகளை அணிந்து வந்தால் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

ஆயுதப் போராட்டம் என்பது இனிமேல் தமிழரின் வரலாற்றில் சாத்தியமேயில்லாத ஒன்று. ?!

கடந்த வருடம் போர் முடிந்த சில மாதங்களின் பின்னர்- சிறைப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை குறித்து
கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேரை போராளிகள் என்று சிறைபிடித்து வைத்திருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
இவர்களில் ஒரு தொகுதியினரை விடுவித்து விட்டதாகக் கூறுகிறது சிங்களதேசம். இன்னமும் 11 ஆயிரம் போராளிகள் வரை தடுப்பு முகாம்களில் உள்ளனர்.