தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.
இலங்கைத் திருநாட்டில் தமிழர்களின் தாயக மான வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன தான் நடக்கின்றது என்பதை உணரமுடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். விடுதலைப் போராட்டம் நடைபெற்றது உண்மை.அந்தப் போராட்டம் போர் மூலம் முறியடிக்கப் பட்டமை உண்மை.தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தின் மூலம் அரசு தோற்கடித்து விட்டமைக்காக தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.
தமிழனின் உயிர் குடித்த இராணுவ அதிகாரி சவேந்திரா டி சில்வா ஐக்கிய நாடுகளின் தூதுவரா?
வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார்.
யாரை கண்காணிக்க ராடரும்,வேவு விமானமும்...........
கொழும்பு இரத்மலானை விமானப்படை தளத்தில் அமெரிக்கா, தனது செலவில் நவீன ராடர் கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த நவீனரக ராடர், செய்மதியூடாக தொலைத் தொடர்புகளையும், தரவுகளின் பரிமாற்றங்களையும், துல்லியமாக அறியும் திறன்கொண்டது எனக் கூறப்படுகிறது. பீச் கிராப் என அழைக்கப்படும், ஆளில்லா வேவு விமானங்களையும் அவதானித்து இதனூடாக் கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்க தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்களை நீங்களே!.....
முள்ளிக்குளம் முதல்
முள்ளிவாய்க்கால் வரை
அவன் களத்தில்
சமரின் வடுக்கள்
தங்கிய உடம்பு
குருதி கொட்டியே
மெலிந்த தேகம்.
பெற்றவர் இழந்த
பெரும் துயர் நெஞ்சில்
மக்களின் துயரம் அவன்
மனதைப் பிழியும்
உறுதி தளர்ந்திடா
உண்மை வீரன்
குண்டு மழையில்
குற்றுயிரானான்
முள்ளிவாய்க்கால் வரை
அவன் களத்தில்
சமரின் வடுக்கள்
தங்கிய உடம்பு
குருதி கொட்டியே
மெலிந்த தேகம்.
பெற்றவர் இழந்த
பெரும் துயர் நெஞ்சில்
மக்களின் துயரம் அவன்
மனதைப் பிழியும்
உறுதி தளர்ந்திடா
உண்மை வீரன்
குண்டு மழையில்
குற்றுயிரானான்
சிறையிலிருக்கும் அம்மாவே... நீங்கள் வரவே மாட்டீர்களா?"
அன்பின் அம்மாவுக்கு,
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.
போரின் முடிவுக்குப் பின்னரான நிரந்தரமான படைகளின் பிரசன்னம்
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகளைப் பொறுத்தரை அரசாங்கத்தின் அறிவிப்புக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றவைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதற்கு நாம் இங்கு உதாரணங்களைக் காட்ட வேண்டிய தேவையில்லை. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைக்கக்கூடிய போதிய உருப்படியான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதாக இல்லை.
"செவிடன் காதில் ஊதிய சங்கு".. விரைவான மீள்குடியேற்றம். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கோரிக்கை
இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் விரை வில் குடியேற்றுவது குறித்தும், ஏற்கெனவே மீள்குடியேற்றப் பட்டவர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை உருவாக்கு வது குறித்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கத்தோலிக்க ஆயர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)