செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

உங்களை நீங்களே!.....

முள்ளிக்குளம் முதல்

முள்ளிவாய்க்கால் வரை
அவன் களத்தில்
சமரின் வடுக்கள்
தங்கிய உடம்பு
குருதி கொட்டியே
மெலிந்த தேகம்.


பெற்றவர் இழந்த
பெரும் துயர் நெஞ்சில்
மக்களின் துயரம் அவன்
மனதைப் பிழியும்
உறுதி தளர்ந்திடா
உண்மை வீரன்
குண்டு மழையில்
குற்றுயிரானான்

ஊர்ந்து வந்தான்
உதவ அங்கு ஆளில்லை
அவன்போல் தோழர்
அநேகர் அங்கே
இன்று எதிரிச் சிறையில்
எங்கள் வீரன்


இன்று இவனோ
துரோகி.. கோழை


களத்தில் எதிரி
தலைக் கறுப்புக் காணா
காண அஞ்சிக் கழன்று வந்த
கனவான்களே! வாயிருப்பதால் எல்லாம்
பேசிவிடலாம். என்றில்லை
கையிருப்பதால் எல்லாம்
எழுதிவிடலாம் என்றில்லை



அதற்கும் ஒரு
தகுதி வேண்டும் ..ஆம்
தார்மீகத் தகுதி .
உங்களை நீங்களே
ஒருமுறை உற்றுப் பாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக