செவ்வாய், 2 மார்ச், 2010

பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்

தென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிலியில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் மற்றும் இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் பீதி அடங்குவதற்குள் இன்று பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்ஜிஸ்தான் நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள காகயன், இசபெல்லா ஆகிய பகுதிகளில் காலை 7 மணியளவில் பூமி அதிர்ந்தது. இதில் வீடுகள் சில வினாடிகள் குலுங்கின. நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததும் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். நில நடக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதில் சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான கிர்கிஸ்தானில் இன்று காலை 7.25 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரமான பிஷ்கேக்கிலி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சிறிது நேரம் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மீன் செதில்களுடன் அதிசய குழந்தை

மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ¨ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். இவன் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிறந்தான். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான். இந்த நிலையில் அவனது உடலில் மீன் போன்ற செதில்கள் வளர தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை டாக்டர்களிடம் சென்று காட்டினர். பரிசோதனை செய்த டாக்டர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். அவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உடலில் இருந்து வெப்பத்தை குறைக்க அவன் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். இதற்காக அவனை ஐஸ்கட் டிக்குள் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுஒருவகை மரபுநோய் என்றும் தெரி வித்தனர். இவனை அனை வரும் மீன் சிறுவன் என்றே அழைக்கின்றனர்.