இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 2 மார்ச், 2010
மீன் செதில்களுடன் அதிசய குழந்தை
மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ¨ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். இவன் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிறந்தான். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.
இந்த நிலையில் அவனது உடலில் மீன் போன்ற செதில்கள் வளர தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை டாக்டர்களிடம் சென்று காட்டினர். பரிசோதனை செய்த டாக்டர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.
அவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உடலில் இருந்து வெப்பத்தை குறைக்க அவன் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். இதற்காக அவனை ஐஸ்கட் டிக்குள் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுஒருவகை மரபுநோய் என்றும் தெரி வித்தனர். இவனை அனை வரும் மீன் சிறுவன் என்றே அழைக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக