திங்கள், 31 மே, 2010

நல்லிணக்கக் குழு மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை – செல்வம் அடைக்கலநாதன்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கக் குழு மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்தக் குழுவால் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசுக்கு இன்று ஏற்பட்டுள்ள சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்கான ஒரு தந்திரமாகவே இதனைப் பார்க்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (கேசரி வார வெளியீட்டுக்க ) வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துளார்

கரும்புலி

உலகின் தன்னார்வ கொடை என்பதற்கு பல முன் உதாரணங்களை நாம் முன் நிறுத்தலாம்.. ஆனால் அந்த கொடைகளின் பின் பலத்தில் ஏதோவொரு ஆதாய நோக்குக்ள் தங்கியிருப்பதை நாம் ஆராய்ந்து கண்டறிந்து விடலாம். ஆனால் எந்த வித ஆதாயங்களின்றி கொடை கொடுப்பவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றால் அது உலகின் எங்கோ ஒரு தென் கோடியில் புள்ளியாக அமைந்திருக்கும் தமிழீழ திரு நாட்டில் பிறந்து மடிந்து இருக்கிறார்கள் என்றால் அது அந்த தெய்வீக கரும்புலிகள்தான்

வெலிக்கடை சிறைப் படுகொலைகள்!- மீளாய்வு


சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது.

இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்)கட்டப்பட்டதாகும்

தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேசன்துறை) இலங்கையில் 1918-இல் "இலங்கை தேசிய காங்கிரஸ்' எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, "தமிழ் லீக்' (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க "தனிநாடு' வேண்டும் என்பதாகும்

முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!

நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2010

பழிதீர்க்க உடைவாளை....





புத்தரை பூஜிக்கும்
லாமாக்களின் உதடுகள்
சரணம் சொல்லி
மகிழாமல் - தமிழரின்
மரணம் சொல்லி
மகிழ்ந்தது.


அசோகனின் சக்கரம்
அடக்க முடியாமல் சுழன்று
ஆயிரக்கணக்கான
தமிழர் உயிர்களை
குடித்தது

புதுயுகம் படைப்போம் !!

உலகெங்கும் விடுதலைக்கான போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. நமக்கு ஏன் விடுதலை வேண்டும்? என்ற கேள்வியிலிருந்துதான் விடுதலைக்கான போராட்டங்கள் தொடங்குகிறது. இந்த ஏன் என்ற கேள்வி தத்துவ ஞானி சாக்ரடீஸ் கற்றுத் தந்தது. ஏன் என்று கேட்கப் பழக வேண்டும். இதிலிருந்துதான் நமது வெற்றி தொடங்குகிறது. இயல்பாக நடைபெறுகின்ற ஓட்டப்பந்தயங்களில்கூட கடினமாக உடல் வலிமையை அனைத்தையும் ஒருங்கிணைத்து பின்னரே தமது இலக்கை அடைய முடிகிறது. அதை அடைந்த பின்னர் ஏற்படும் மகிழ்ச்சி தாம் இழந்த ஆற்றலை பன்மடங்கு கூட்டித் தருகிறது. சாதாரண ஒரு ஓட்டப்பந்தயத்தில் தனி நபருக்கான வெற்றியே அந்த நபரின் ஆற்றலை உயர்த்துகிறது என்றால், ஒரு இன விடுதலைக்கான வெற்றி எப்படி நம்மை உயர்த்தும் என்பதை நாம் உணரத் தொடங்கக் கூடிய காலநிலையில் இயங்கி வருகிறோம்

இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்




‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் 


உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. 1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில் WHA 42.19 தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மக்களை மீள்குடியேற்ற முடியாது


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவததள்ளார்

எமது போராளிகள்..........??


நம் கண்கள் முன் நடமாடி நம் கண்களுக்கு தெரியாத ஓராயிரம் விடயங்களை மனதிற்குள் புதைத்துக் கொண்டு சிரித்து பேச மட்டுமே தெரிந்த விந்தை மனிதர்கள். உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர்க்கும் இருக்கக் கூடிய அவ்வளவு ஆசாபாசங்களையும் கொண்டவர்கள் ஆனால் அதை எதையுமே உள்வாங்க மறுத்து தலைவர் காட்டிய பாதை மட்டுமே கர்மமாய் கொண்ட நடமாடும் தெய்வங்களே எமது தேசத்தின் போராளிகள்.

தமிழீழம் அதன் பிரதிநிதிகள் யார்?

தமிழீழம் அதன் பிரதிநிதிகள் யார்? காலத்திற்கு காலம் பலர் உரிமை கோரியிருக்கின்றார்கள். ஆனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யார்? எமது மக்கள் அறிந்த விடயம் உலகம் அறியத் தவறிய விடயம். அதுவே தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை! உண்மையிலேயே உலகம் அறியத் தவறிவிட்டது அல்லது தவிர்க்கப்பட்டது.


ஏன் தவிர்க்கப்பட்டது? தவிர்க்கப்பட்டதற்கும் காரணம்

ஞாயிறு, 30 மே, 2010

புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர் ..................


சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.


சிறீலங்கா அரசின் இந்த இராஜதந்திரப்போர் என்பது எதற்காக? யாரை எதிர்த்து? உலகில் உள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துலக அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் மேற்குலகம்,

மஹிந்த ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி


இலங்கையும் இந்தியாவும் வெறும் நண்பர்கள் அல்ல. நாம் உறவினர்களைப் போன்றுள்ளோம். இன்று எமது உறவு மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளது.
எம்மை கவனித்துக் கொள்ளவேண்டிய கடமை இந்தியாவுக்குள்ளது. எவ்வாறெனில், ஆதிக்க உணர்வுகொண்டதோர் மூத்த சகோதரனைப் போன்றல்லாது, தனது சிறிய சகோதரியைக் கவனித்துக்கொள்வதைப் போன்று அமையவேண்டும் என்று நான் கருதுகின்றேன் என ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

விரிவடையும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள்................



போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு தன் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பகுதி நிதியை விழுங்கும் அமைச்சாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 20,222 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மூலதனச்செலவு என்பது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகத்திரை கிழிகிறது

கடைசியில் மெல்லமெல்ல தமது உண்மையான கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது வெளியிட்டுவருகிறது. அதாவது "வட கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயார் எனில் தாம் அரசுடன் இணைந்து மகிந்த அரசை பாராளுமன்றில் 3ல் 2 பெரும் பான்மையாக்குவேன் என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
அப்படியாயின் அரசியல் சாசனத்தை திருத்தி,

ஈழத்தமிழனின் ஆண்டுத்திவசம் கருணாநிதிக்கு செம்மொழி மாநாடு!




தமிழர்களின் சாபக்கேடாக, ஈழத்தின் துரதிஸ்ட்டமாக, விரும்பியோ விரும்பாமலோ அப்புறப்படுத்த முடியாத பெரும் சமூகச்சுமையாக. ஊழல், பணபட்டுவாடா மூலம் தழிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி. கற்காலத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாட்டை இட்டுச்செல்லும் துரோக சக்தியாக, முத்துவேலுநாயக்கர், தெட்சணாமூர்த்தி, என்கின்ற “கருணா நிதி” தழிழர்களை மையங்கொண்டு, சூரிய கிரகணமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

விகடன் கக்கும் நஞ்சு...........

ஈழப் பிரச்சனைபற்றி ஒரு கட்டுரை பிரபாகரனின் அட்டைப் படத்துடன் வெளியிட்டால் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதை விகடன் குழுமப் பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம்

விதைகளிலிருந்து.........................

உலகை உலுக்கிய ஓர் மாபெரும் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு இன விடுதலைக்கான போராட்டம் கடும் கருவி போராட்டத்தால் நெருக்குதலுக்கு உள்ளானது. வளம்கொழிக்க வாழ்ந்த ஓர் இனம் சிங்கள பேரினவாத கூட்டுப்படையால் கொலை வெறிக்களம் ஆனது. பல்வேறு போராட்டங்களை கடந்து கருவி ஏந்தி களத்தில் புகுந்த தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். தமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிக்கை கொடுத்தார்கள்.

லெப்.கேணல் ராதா..........

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

சனி, 29 மே, 2010

“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி!!!!!
முள்ளிவாய்க்கால் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம்
குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில் முன்வைக்கிறார்...................................

வதை முகாம்களும், பெண் வாழ்வும்


நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.
நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம்

உறங்கிவிட்டதா எம் உணர்வுகள்? எம்மை வழி நடத்தியவர் கண்ட யாகங்கள் எத்தனையோ ?......

வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு.
நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்?

வெசாக் அனுஷ்டிப்பின் உட்பொருள்.......................?

வெசாக் பண்டிகை நாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது. தென்பகுதியை விட வடபுலத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டம் களைகட்டியிருப்பது கண்டு எதுவுமே புரியாமல் திகைத்து நிற்கும் பரிதாபம் மட்டுமே தமிழ் மக்களிடம் மிஞ்சியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் – சம்பிக ரணவக

உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார்.பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச் சபையின் அறிக்கைகளையும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட தலைமையினாலேயே நாடு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் இயங்கும் வேறும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முனைவதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட ரணவக நாட்டு மக்களும் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

உள்ளே மின்னலாய் வெட்டி உயிர்தின்கிறது ஓரினத்தின் ஓலம்;

மறக்கமுடியாத அந்நாட்களின்
இழப்பில் புதையுண்ட எம்
விடுதலையின் வேகத்தை
மீட்டெடுத்துவிடும் துணிவில் தான்
இரவு பகல் கடக்கின்றோம்;


அம்மா என்றழைக்கும்

எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை =பாலித்த கோகன்ன

இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.


சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போர்க்கைதிகளாக நடத்தப்படுவார்கள் என்று தனக்கு சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய மற்றும் பாலித்த கோகன்ன ஆகியோர் தனக்க உறுதிமொழியளித்ததாக விஜய் நம்பியார் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தமை குறித்து பாலித்த கோகன்னவிடம் இன்னர் சிற்றி பிரஸ் செய்திநிறுவனம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துவிட்டதாகவும் ஏனையோர் இருவரிடமும் (மகிந்த மற்றும் கோத்தபாய) இது தொடர்பில் கருத்தை கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற செய்தியை நீங்கள் வெளியிடலாம் என்றும் கோகன்ன தெரிவித்தார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று தன்னிடம் உறுதியளித்ததாக விஜய் நம்பியார் தெரிவித்த ஏனைய இருவரான மகிந்தவிடமும் கோத்தபாயவிடமும் கருத்தை கேட்டறியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், அவர்களின் அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சமயம், அவரிடம் இது குறித்து கேட்டறிவதற்கு முற்பட்டபோது -பீரிஸை இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனம் சந்திப்பதற்கு கோகன்ன அனுமதிக்கவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய ஊடாக கழகத்திற்கு சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அங்கு ஊடகவியலாளர்களை சந்திக்காமல் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.வோஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ஊடக கழகம் 2009 ஆம் சுதந்திர ஊடகவியலாளருக்கான தனது விருதினை படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவுக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தின் அடையாளம் தேசிய தலைவர்!!

2009ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் தேதி தமிழீழ வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேசிய இன போராட்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு இழப்பு வேறு எந்த இன விடுதலை போராட்டத்திலும் நிகழ்ந்தது கிடையாது. சற்றேறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களுடைய இன்னுயிரை தேச விடுதலைக்கான விதைகளாக தமிழீழ மண்ணிலே தூவினார்கள்.

வெள்ளி, 28 மே, 2010

நேற்று இன்று நாளை ...................

தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.

கேணல் சங்கர் -வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்களின் ஆதிவாசிகளை விட மிகவும் மோசமானது: அம்பாறை மாவட்ட எம.பி பொ. பியசேன

ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்கள் காணப்படுகின்றார்கள். அவலத்திலும் அவலமாக உள்ளது. உடன் பிறப்புக்கள் என்போர், வீர வசனம் பேசுவோர் அமைப்புக்களாக இணைந்து விரைந்து சென்று உதவவேண்டும்’ இவ்வாறு வன்னி சென்று திரும்பிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகநேயன் பொ. பியசேன அங்குள்ள நிலைவரம் பற்றித் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்காலும் ஸ்டாலின்கிராடும் .......................

உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர்,

ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான பங்களிப்பு அதிருப்தி தருகின்றது - மன்னிப்பு சபை

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பு திருப்தி தருவனவாக இல்லை என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை விவகாரத்தில் ஐ.நா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி தருகின்றது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலினால் காஸா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரின்போது சிறிலங்கா இராணுவம் ஒரு பொதுமகனைக்கூட கொல்லவில்லை: மகிந்த

"சிறிலங்கா இராணுவம் போரின்போது பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. அவ்வாறு கொலை செய்திருந்தால் மூன்று லட்சம் மக்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்திருக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தார்கள்" - என்று சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அல் ஜஸீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

உருவாகி வரும் புதிய சிக்கல்கள்..............

இலங்கையின் அரசியல் இப்போது மீண்டும் ஒரு சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு பிரச்சினைகள் இந்த நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. அல்லது இரண்டு விவகாரங்கள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. இனங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு முதலாவது பிரச்சினை.

செய்தித் துளிகள்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இப்படியும் நடக்கின்றது.


நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சாதாரண மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்ப முனைந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் விசமிகளின் செயற்பாடுகள் மக்களை மேலும் அச்சத்திற்குள் தள்ளிவிடுகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் உடுப்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞன் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அப்பாதையின் குறுக்கே கால்நடை (மாடு) ஒன்று பாய்ந்தபோது இளைஞன் மோட்டார் சைக்கிளினால் கீழே விழநேரிட்டுள்ளது. தனக்கு நேர்ந்த விடயத்தில் ஆத்திரமடைந்த இளைஞன் கால்நடையின் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளான். சுமார் 75 வயதுக்கும் மேலான வயோதிபர் இளைஞனின் தாக்குலினால் மிகவும் நோய்வாய்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் வன்செயல்கள் தொடர்பான செய்திகள் யாவற்றிக்கும் தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் இவ்வாறான பகுத்தறிவு கெட்ட செயல்களுமே காரணமாகும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

பதுங்குவது பாய்ச்சலுக்கான அடையாளம்..................

நமது வாழ்வும், நமது மகிழ்வும், நமது மண்ணின் விடுதலையிலே பிண்ணி பிணைந்திருக்கிறது. நமக்கான வாழ்வு என்பதை நமது மண்ணின் வாசத்திலே, நமது மண்ணின் அழகிலே, நமது மண்ணின் உயிர்மையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது மண்ணை பிரிந்து நமது சுவாசமோ, சிந்தனையோ ஒருபோதும் கிடையாது

புதன், 26 மே, 2010

புத்தன் என்னும் தத்துவமும் காந்தி என்னும் தத்துவமும் சேர்ந்து தமிழர்களுக்கு எழுதும் விதி

லெப்.கேணல் பாமா/கோதை

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !


எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச் செய்யும்.
ஓராண்டு முடிந்தது – எங்கள்
உறவுகள் மடிந்து ,


ஓராண்டு முடிந்தது
எங்கள் உறவுகள் சிதைந்து ,


ஓராண்டு முடிந்தது – எங்கள்....
உறவுகளின் இரத்தம்,
தசைகளை
உலகம் ஒன்றாய் சுவைத்து
ஓராண்டு முடிந்தது –
இன்றோடு....
ஓராண்டு முடிந்தது...


மரண ஓலம் எங்கும்...

சீறிய தமிழனின்..!!

பிணங்களான புலிகளை
அம்மனமாய் எறிந்தார்களாம்.
மானம் காக்க
களமாடிய
அந்த மாவீரர்கள்
மானத்தை சோதிக்கவா?
அவமானம் அடைந்தது
மானுடம்.

அடையாளம் காட்ட
அணிவகுப்பு.
பிணங்களின்
அடையாளம் காண
அணிவகுப்பு.
மகிந்தாவின்
கோரைப்பல்
அம்பலமானது
அரை நொடியில்.
அகிலமே தலைகுணிந்த
அந்த கணம்
நம் ஆன்மாவை
பிழிந்தெடுத்தது.

உன் ஆன்மா
உயிருடன் இருந்தால்
நீ உயிருடன் இல்லை
என புரிந்துக் கொள்.
பிணங்களுக்கு மானம்
இருப்பதில்லை.
அழுகிய சதையில்
நெளியும் புழுக்களில்
நடனங்கள், நாட்டியங்கள்
வெற்றி விழாவாம்.

அசோகனின் சக்கரம்
தமிழனின் உடல் பிழிந்து
குருதி கறையாய்...
தமிழனின் அம்மணம்
புத்தனின் தத்துவத்தை
தோற்கடித்தது.

மகிந்தாவின்
கூட்டாளிகள்
நெருப்பு விழிகளால்
சுட்டெரிக்கப் படலாம்.
நொறுங்கப்போகும்
சிங்கள தேசம்
சீறிய தமிழனின்
சூரிய கதிர்களால்
சுருங்கத் தொடங்கலாம்.

சுடர் முகம் தூக்கி
தமிழ் முகம் காட்ட
தலைவன் மீண்டும்
களம் காணுவான்.
நம் விலங்குகள்
நொருங்கிடும்
அந்த நொடி
விடுதலையின் காற்றில்
புலிக்கொடி பட்டொளி வீசும்....

கூட்டமைப்பின் நோக்கம் என்ன?

அரசியலுக்கான சூழல் எம்மைத் தேடிவரும் என்றிருக்காமல் வருகின்ற சூழலை அரசியலாக்குவதே ஒரு சிறந்த அரசியலாளனின் வெற்றிக்கான பாதையாகும். சூழலை அரசியலாக்கும் செயற்பாடு போரின் இறுதிக்காலத்தில் போதிய அளவு கைக்கொள்ளப்படாமையே எமது போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணம் என்கின்ற குறிப்பிட்ட அளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வுக்கு இடமளித்த அமெரிக்காவுக்கு எதிராக சிறிலங்கா அரசு வகுத்துள்ள திட்டம்?

ஜீ-15 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுள்ள சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச,புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் அமெரிக்காவுக்கு சரியான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜீ - 15 அமைப்பு தலைமை பதவியை பயன்படுத்தவேண்டும் என்று சிறிலங்கா அரசு உயர் மட்டத்தினர் மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏன் நமக்கு விடுதலை தேவையாக இருக்கிறது?

கத்தோலிக்க கிறித்துவ நிறுவனத்தின் ஒரு அமைப்பாக காரிதாஸ் லங்கை அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 30 ஆண்டுகால கடும் சமர்களுக்குப் பின்னர் நிறைவு பெற்ற சமர்காலம் என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட, சற்றேறக்குறைய 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணிலே ஏதிலிகளாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு, தற்போதைய கடுமையான வெப்பநிலை மற்றும் பருவக்கால சூழ்நிலைகளால் தண்ணீர் பற்றாக்குறை, அதனால் ஏற்படும் உள்ள உடல் பாதிப்புகளை வருத்தத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறது. கொத்து வெடுகுண்டுகளை பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் சட்டத்தை வருகிற ஆகஸ்ட் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில்

""போராட்டம் ஓயாது'';கேணல் ராம் உறுதி!- பாகம்-3

சுதந்திர தாகத்துடன் தமிழீழ பெரும் பரப்பின் மலைக்காடுகளில் ஆயுதப் போ ராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண் டிருக்கும் கேணல் ராம் தலைமையிலான விடுதலைப்புலிகள் பிரிவினர், தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியனின் தாகம் தணிக்கத் தண்ணீர் கொடுத்தனர். சுவை யான தண்ணீர் என்கிற பாண்டியன்,

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் ஐ. நா படையில்!

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவப் பிரிவொன்று மத்திய ஆபிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதற்தட வையாகும்.இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் அண்மையில் போர்குற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டுள்ளது. இவர்களை விசாரிக்கவேண்டும் என கூறும் சர்வதேச சமூகமும் ஐ. நாவும் இப்படியான குற்றம் இழைத்த இராணுவத்தினை எவ்வாறு ஐ. நாவில் சேர்க்கமுடியும்?

உலகுக்கு உணர்த்திய தமிழீழ அடையாளம்.....

"தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் - அல்லது பேரம் பேசினால் - தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்"-

செவ்வாய், 25 மே, 2010

இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட வரலாறு.............


இலண்டனில் அமைந்துள்ள ஒரு உணவு விடுதி.
ஒரு நிறைமாத கர்ப்பிணித் தாயும், அவரது மகனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாய் ஒரு இந்தியப் பெண்மணியாகவோ அல்லது இலங்கைப் பெண்மணியாகவோ இருக்கலாம். அத்தாயின் அடையாளம் அப்படித்தான் இருந்தது.
ஆனால் அக்குழந்தை ஒரு பிரித்தானியருக்கு பிறந்தவராக இருக்கவேண்டும். அக்குழந்தையின் தோற்றம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனது பிரச்சினை அதுவல்ல.