விடுதலையின் பிரசவிப்பிற்காய்
வடுக்களை ஏற்றாய்
வசந்தத்தை தொலைத்து
வடிவிழந்து கிடக்கிறாய்
துடிக்கிறது மனசு
பாதகர் கால்கள்
பதிகிறது உன்னில்
வெஞ்சினம் கொள்வாய்
வேதனை வேண்டாம்
தேற்றிடு மனதை.
நீதிக்கான யுத்தம்
அர்த்தமற்றுப்போகுமா.....?
நிறைந்து கிடக்கும் வரலாறு
மறைந்திடுமா..........?
கொடுதலை என்னும்
நிலை வந்த போதும்
விடுதலை நிலை மாறா
தலைவன்............
உயிர் நீக்கத்தயங்காத
உத்தமர்கள்........
குடும்பச் சுமையோடு
விடுதலைச் சுமையை
முழுதாய்ச் சுமந்த மக்கள்.......
குடும்பமே எல்லையில் நின்று
கடுங்சமர் புரிந்த வரலாறு.......
இப்படி இப்படி
எத்தனையோ சுமந்தாய்
எல்லாமே அழிந்துபோகுமா.....?
உன் தேகமெங்கும்
திட்டுத்திட்டாய்
கொட்டுண்டு கிடக்கிறது
உயிர் விலைகள்
அத்தனையும் வீணாகிப்போய் விடுமா?
கிட்ட நின்று
எட்டிப்பார்த்தோம்
தொட்டிடத்தான் முடியவில்லை
ஆனாலும்.........
பாதைகள் மாறலாம்
உனக்கான
பயணம் ஓய்ந்திடுமா........????
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....