செவ்வாய், 6 ஏப்ரல், 2010

1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது. அப் பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்கையின் பின்னர் சபையானது, பிரகடனத்தை வெளியிடுமாறும், அவ்வாறு வெளியிடப் பெற்றதை "நாடுகள் அல்லது ஆள்பலங்கனின் அரசியல் அந்தஸ்துக் காரணமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும், வாசிக்கச் ெசய்யவும், விளக்கவும" செயற்படுமாறு அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக் ெகாண்டது. மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்ைதையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும், மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும், கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும், ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும், இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது: பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது. உறுப்புரை 1 மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும். உறுப்புரை 2 இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர். மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது. உறுப்புரை 3 வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர். உறுப்புரை 4 எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம். உறுப்புரை 5 எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது. உறுப்புரை 6 ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 7 எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள். உறுப்புரை 8 அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள். உறுப்புரை 9 ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. உறுப்புரை 10 அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர். உறுப்புரை 11 1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும். 2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது. உறுப்புரை 12 ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 13 1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. உறுப்புரை 14 1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது. உறுப்புரை 15 1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு. 2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது. உறுப்புரை 16 1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு. 2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும். 3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது. உறுப்புரை 17 1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது. உறுப்புரை 18 சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும். உறுப்புரை 19 கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும். உறுப்புரை 20 1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு. 2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது. உறுப்புரை 21 1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. 2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. 3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும். உறுப்புரை 22 சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர். உறுப்புரை 23 1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர். 2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர். 3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும். 4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு. உறுப்புரை 24 இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும். உறுப்புரை 25 1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர். 2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன. உறுப்புரை 26 1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும். 2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு. உறுப்புரை 27 1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர். உறுப்புரை 28 இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர். உறுப்புரை 29 1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. 2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும். 3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது. உறுப்புரை 30 இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது. 1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது. அப் பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்கையின் பின்னர் சபையானது, பிரகடனத்தை வெளியிடுமாறும், அவ்வாறு வெளியிடப் பெற்றதை "நாடுகள் அல்லது ஆள்பலங்கனின் அரசியல் அந்தஸ்துக் காரணமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும், வாசிக்கச் ெசய்யவும், விளக்கவும" செயற்படுமாறு அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக் ெகாண்டது. மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்ைதையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும், மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும், கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும், ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும், இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது: பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது. உறுப்புரை 1 மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும். உறுப்புரை 2 இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர். மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது. உறுப்புரை 3 வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர். உறுப்புரை 4 எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம். உறுப்புரை 5 எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது. உறுப்புரை 6 ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 7 எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள். உறுப்புரை 8 அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள். உறுப்புரை 9 ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. உறுப்புரை 10 அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர். உறுப்புரை 11 1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும். 2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது. உறுப்புரை 12 ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 13 1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. உறுப்புரை 14 1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது. உறுப்புரை 15 1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு. 2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது. உறுப்புரை 16 1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு. 2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும். 3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது. உறுப்புரை 17 1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது. உறுப்புரை 18 சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும். உறுப்புரை 19 கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும். உறுப்புரை 20 1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு. 2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது. உறுப்புரை 21 1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. 2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. 3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும். உறுப்புரை 22 சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர். உறுப்புரை 23 1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர். 2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர். 3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும். 4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு. உறுப்புரை 24 இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும். உறுப்புரை 25 1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர். 2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன. உறுப்புரை 26 1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும். 2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு. உறுப்புரை 27 1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர். உறுப்புரை 28 இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர். உறுப்புரை 29 1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. 2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும். 3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது. உறுப்புரை 30 இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

ஈழத்தமிழ் அகதிகள் மீது தமிழகக் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள்

தமிழகத்தில் இருந்து சிறீலங்காவுக்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரை கைது செய்துள்ள இந்திய கடற்படை அவர்களை தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. தமிழக காவல்துறையினர் தம்மை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் அவர்களின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கவே தாம் சிறிலங்கா செல்ல முற்பட்டதாக ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், தமிழக காவல்துறையினர் மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கி குண்டுபட்டு உயிரை விடலாம் எனவும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். திருச்சி பகுதியில் உள்ள கரூர் முகாமில் இருந்த ஆறு இளைஞர்கள் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சிறீலங்கா செல்ல முற்பட்டிருந்தனர். கடந்த மாதம் 31 ஆம் நாள் அவர்களை ஏற்றிச் சென்ற படகோட்டி நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் நள்ளிரவு நேரம் இறக்கிவிட்டு அது சிறீலங்கா என கூறிச் சென்றுள்ளார். ஆனால் அங்கு சிக்கிய இளைஞர்கள் மூன்று நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி கடும் துன்பங்களை சந்தித்திருந்தனர். அதன் பின்னர் இந்திய கடற்படையின் சுற்றுக்காவல் படகினை கண்ட அவர்கள், உதவிகேட்டபோது, அவர்களை கைது செய்த கடற்படையினர், காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல அண்மையில் மற்றுமொரு தொகுதி இளைஞர்கள் சிறீலங்கா செல்ல முற்பட்டபோது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்மை செய்யும் யாழ் தேர்தல் சுவரொட்டிகள்


கால்நடைகளுக்கு உணவாகும் தேர்தல் சுவரொட்டிகள் இதற்காவது உதவுதே என்று திருப்தி கொள்ளவேண்டியதுதான்

பத்திரிகை தர்மம்

ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் லசந்தா. தமது மரணம் எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசந்தாவால் யூகிக்க முடியவில்லை. மற்றபடி, அவர் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று எழுதியும் வைத்திருந்தார். ராஜபக்சேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்சேவின் ஆட்சியை தீவிரமாக விமர்சனம் செய்து, அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இனப்படுகொலைகளை லசந்த விக்கிரமதுங்கே நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்து விடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்சேவை விமர்சனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக் கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை அவர் அளித்திருந்தார். லசந்த விக்கிரமதுங்கவைப் போலவே என்.ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னை பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர். இன் சீஃப் என்.ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால் என்றாவது லசந்தாவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?இது தேசிய அவமானம் என்பதாக மங்களூர் பப் விவகாரம் பற்றி நீட்டியும், முடக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதரவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும், ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக் கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்சனையும். ராஜபக்சே அப்பழுக்கற்ற தியாதி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகளும் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் சொல்ல வேண்டும். மற்றபடி, தமிழீழம் அமையும் என்று சொல்வதற்கில்லை. சிறிதும் சளைக்காமல் ஒருநாள் விட்டு ஒருநாள் ராஜபக்சேவிடம் பேசி, ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டு விடுகிறார் என்.ராம். தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும் விட, தமிழர்கள்மீது எனக்கு அளவு கடந்த பாசமும், நேசமும் உண்டு. எங்கள் எதிரிகள் விடுதலைப்புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். என்.ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். ‘உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி.’ லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை.

பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்

வன்னி வதை முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப்பட்ட தமிழக் குடும்பங்களில், ஆண் உறுப்பினர் அற்ற குடும்பத்துப் பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப்படுகொலைப் போரில் தங்கள் குடும்பத்து ஆண் உறுப்பினர்களை இழந்த குடும்பத்துப் பெண்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்ட 15 தகரங்களைக் கொண்டு பாதுகாப்பான தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்ளக் கூட முடியாத நிலையில், அவர்களுக்கு கழிப்பிட வசதியில்லாத காரணத்தினால், இரவு வரை காத்திருந்து தாவரங்கள் அடர்ந்த வனப் பகுதிக்குச் சென்று - ஒரு ஆபத்தான சூழலில், தனிமையை காப்பாற்றிக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, தாங்கள் வாழ்ந்த பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினரும், காவல் துறையினரும் மறு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர். இவை யாவும் வன்னி முகாமில் முழுமையாக செய்து முடிக்கப்ட்டப் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டு, மீள் குடியமர அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மீ்ண்டும் அவர்களிடம் ‘நீங்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா’ என்றெல்லாம் கேட்கப்படுவதும், இராணுவ, காவல் துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மொழிப் பிரச்சனையும் இந்த விசாரணையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆண் துணையற்ற நிலையை விசாரணையின் மூலம் இராணுவத்தினரும், காவல் துறையினரும் தெரிந்துகொள்ளும் நிலையில், தங்களுக்கு மீண்டும் பாலியல் அச்சுறுத்தல் உருவாகுமோ என்ற அச்சமும் இப்படிப்பட்ட பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நிதியுதவி நிறுத்தம் வன்னி முகாம்களில் இருந்து 1.9 இலட்சம் தமிழர்கள் மீள் குடியமர்த்தம் அல்லது தங்களது உறவினர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், மீள் குடியமர்த்தம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் அளித்துவந்த நிதியுதவி மார்ச் 8ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு அன்றாட நிவாரண உதவியில் இருந்து மறுவாழ்விற்கு நிதியுதவி வரை செய்துவந்த ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அயல் நாடுகளில் இருந்து வரும் நிதியுதவியைப் பெற சிறிலங்க அரசு மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இந்த நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை

பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே மாதம் அளவில் இலங்கை அரசாங்க ஊடகங்கள் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பாதுகாப்பிற்கான ஊடக மையம் என்பன விடுத்த பல செய்திக் குறிப்புக்களில் ஆரம்பத்தில் 17500 வரையான விடுதலைப் புலிகள் அரசாங்க படைகளால் கைது செய்யப்பட்டனர் அல்லது சரணடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர் 15000 வரையான புலிகள் தம்மிடம் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக வந்த செய்திகளில் இந்தத் தொகைகள் 13500, 12500, 11500 என குறைக்கப்பட்டு தற்போது 11 ஆயிரம் என்ற கணக்கு பசில் ராஜபக்ஸவால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்டகால அல்லது தீவிர செயற்பாட்டுப் போராளிகள் என 2 ஆயிரம் வரையானவர்கள் தனியான முகாமிலும் 4 ஆயிரம் வரையிலான போராளிகள் தனியான முகாமிலும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக பலராலும் அறியப்பட்டு இருந்தது. இவ்வாறு இரகசியமான முறையில் விசேட முகாம்கயில் தடுத்து வைக்கப்பட்ட 6 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொடர்ந்தும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி சரத் பொன்சேகா

வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு ஆரம்பமாகும் அஸ்தமனம்?. ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக்கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால் நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்; பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும்பாலும் உண்மையான கருத்தாகவே இருக்கக் கூடும். அது எந்தவகையில் என்றால்- அரசியல்ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை. கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி விட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார். அப்போதே அவர் அரசியல் ரீதியான தற்காலைக்குத் தயாராகி விட்டார் என்பது தெரிந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் சரி தோற்றால் அவரது எதிர்காலம் பாழாகி விடும் என்பதை தெளிவாகவே உணரமுடிந்தது. ஆனால் இராணுவ அதிகாரியாக இருக்கும் போது எது நடந்தாலும் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அமைய அரசியலில் அவர் செயற்படவில்லை. வெற்றி ஒன்றையிட்டே சிந்தித்தாரே தவிர தோல்வி ஒன்றின் பின்னால் இருக்கக் கூடிய அபாயங்களையிட்டு கணிக்கத் தவறிவிட்டார். அதைவிட அவர் விரும்பியோ விரும்பாமலோ செய்த சில ஏற்பாடுகளும் சுற்றியிருந்தவர்களின் நடவடிக்கைகளும் சரத் பொன்சேகாவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சினமன் லேக் சைட் விடுதியில் இடம்பற்ற நிகழ்வுகளும், அதனை ஒட்டிய சில சம்பவங்களும் தான் சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்துக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாகவே அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார். * அதுமட்டுமன்றி இரண்டு இராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது. இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும் அது எப்படித் தொடரப் போகிறது என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன. காரணம் இரண்டாவது நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகள் நியமனம் கடந்த பத்து நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தை எப்படி கொண்டு செல்வது என்பதைத் தீர்மானிப்பதில் சற்றுத் தயக்கம் காட்டுகிறது. இது ஒருபுறத்தில் இருக்க ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் ஒட்டியிருந்த கட்சிகள் எதுவும் இப்போது அவருக்குத் துணையாக இல்லை என்பது தான் வேடிக்கை. முன்னாள் பிரதம நீதியரசர் மட்டும் சரத் பொன்சேகா விடயத்தில் அரசாங்கம் செய்வது தவறு என்று கூறிக் கொண்டே இருக்கிறார். * அதைவிட அவரது மனைவி அனோமா இன்னொரு பக்கம் அழுது வடியும் முகத்துடன் அடிக்கடி செய்தியாளர்கள் முன்தோன்றி ஏதாவது பரபரப்பான கதைகளை அவிழ்த்து விடுகிறார். உண்ணாவிரதம் இருப்பதாகவும், மதிய உணவை புறக்கணிப்பதாகவும், உணவு கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படுவதாகவும் சரத் பொன்சேகா விடயத்தில் ஒரு பரப்பரப்பான செய்தியை அவிழ்த்து விடுவதிலேயே ஜேவிபினர் குறியாக இருக்கின்றனர். காரணம் வெறும் அரசியல் இலாபம் மட்டுமே. ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகா போட்டியில் இறங்கியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருக்காக பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று அவருக்காக வீதியில் இறங்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர் என்பதை- கொழும்பில் நடக்கின்ற அவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கையைக் கொண்டே உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவின் பக்கம் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் விலகிக் கொண்டது. பின்னர் ஐதேகவும் அதனோடு சேர்ந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது சரத் பொன்சேகாவின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருப்பது ஜேவிபி மட்டும் தான். ஜேவிபியைப் பொறுத்தவரையில் பெரிதும் பலவீனமானதொரு கட்டத்தில் இருக்கிறது. ஐதேகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற அதன் கனவு தகர்ந்து போனபோது சரத் பொன்சேகா என்ற புளியங்கொம்பைப் பிடிப்பதை விட அதற்கு வேறு தெரிவே இருக்கவில்லை. அதனால் பொதுத்தேர்தல் வரைக்கும் சரத் பொன்சேகாவை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தும். அதற்குப் பிறகும் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்காக எந்தளவுக்குப் போராட்டங்களை நடத்தும் என்பது சந்தேகமே. சரத் பொன்சேகா விடயத்தில் அவருடன் ஒட்டிக் கொள்ள முனையும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது அரசாங்கம். இதனால் அனைத்து அரசியல் சக்திகளுமே வில்லங்கத்தை எதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகின்றன. இது சரத் பொன்சேகாவின் நிலையைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விட்டது. சரத் பொன்சேகாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் தயாராக இல்லை. அதேவேளை அவரை சட்டப்படியாக வெளியே கொண்டு வருவதும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் அவருக்காக குரல்கொடுத்து வந்த அரசியல் வட்டம் சுருங்கிப் போய்க் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் அவர் யாருமே துணைக்கில்லாத ஒருவராக மாறிவிடக் கூடும். * வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ சேவைப் பதக்கங்களைப் பறிக்கின்ற திட்டமும் கூட அரசாங்கத்திடம் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இப்போதெல்லாம் அவர் பற்றிய செய்திகள் குறைவடையத் தொடங்கியுள்ளன. வெளியாகும் செய்திகளின் மீதான மக்களின் ஆர்வம் குன்றத் தொடங்கி விட்டது. சரத் பொன்சேகா விவகாரம் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருவதையே இது உணர்த்துகிறது. சரத் பொன்சேகாவின் நிலையை அறியும் ஆர்வம் மக்களிடத்தில் மறையத் தொடங்கியிருப்பதால் ஊடகங்களும் அவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டன. இது அரசாரங்கத்துக்கு இன்னமும் வாய்ப்பாகவே அமையப் போகிறது. இந்தநிலை நீடிக்குமானால் வெகுவிரைவிலேயே சரத் பொன்சேகா யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்தநிலைக்குக் காரணம் அவரைத் தவிர வேறெவராகவும் இருக்க முடியாது. அரசியல் ஆசை அவரை படுகுழிக்குள் கொண்டு போய்த் தள்விட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக அரசியல் நடத்துவதோ அல்லது நடத்த முனைவதோ தவறென்று கூறவரவில்லை. ஆனால் அவர் அரசியல் நடத்துவதற்குத் தெரிவு செய்த பாதைகளும் அதற்கான வழிமுறைகளும்- ஒரு இராணுவ அதிகாரி என்ற தோரணையில் இருந்ததே தவிர அரசியல்வாதி என்ற வகையில் அமைந்திருக்கவிலலை. * ஒரு தேர்ச்சிமிக்க அரசியல்வாதி சொல்லக் கூடாததை அவர் சொல்லத் தொடங்கியதும் செய்யக் கூடாததை அவர் செய்யத் தொடங்கியதும் தான் அவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம். இந்தத் தவறுகள் தான் அவரை வரலாற்றின் பக்கங்களில் கைவிடப்பட்ட ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கிறது.