வெள்ளி, 19 மார்ச், 2010

திகி்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தனர். ஆனால், நீண்ட காலம் அவர்கள் இருக்கவில்லை. “ஏனையவர்கள் போன்று எம்மால் வாழமுடியாது…” இவ்வாறு அவர்கள் எழுதிவைத்த தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 345 மாணவர்கள் தமது வாழ்க்கையைக் மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றனர். விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த போது, அவர்கள் மோதலின் இடையே சிக்கியிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு அவர்களால் திரும்பிச் செல்லமுடியவில்லை. அந்த மாணவர்களில் சுமார் 12 பேர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையுடன் கதைத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் அதற்கு வெளியேயும் கடந்த வாரம் அவர்கள் இந்துஸ்தான் டைம்ஸுடன் கதைத்ததாக சுதிர்த்தோ பற்றா நோபிஸ் என்ற நிருபர் அந்தப் பத்திரிகையில் எழுதியுள்ளார். அப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2007 – 2008 காலப்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் இரவு, பகலாக பதுங்கு குழிக்குள் கழித்த நாட்கள், யுத்த விமானம், ஆட்லறி ஷெல்கள் என்பவை யுத்தத்தின் போது கிரமமாக தாக்குதல் நடத்தியமை, குடும்ப உறுப்பினர்களை இழந்தமை போன்ற திகில் நிறைந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சில பையன்கள் புலிகளினால் படையணிக்குச் சேர்க்கப்பட்டு 2 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்ட பின் அவர்களுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி கொடுக்கப்பட்டது. புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காக சில பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். நந்து என்ற பெண் கூறுகையில்; புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்கு ஒன்றில் திருமணம் செய்திருக்க வேண்டும் அல்லது காயமடைந்திருக்க வேண்டுமென்று தெரிவித்தார். அவருக்கு பிள்ளை ஒன்று உள்ளது. “நாங்கள் மரணத்தின் நிழலில் வாழ்ந்தோம். ஒருநாள் முள்ளிவாய்க்காலில் ஆஸ்பத்திரி மீது ஷெல் வந்து விழுந்தது. நாம் இருந்த பதுங்கு குழிக்கருகே அச்ஷெல் விழுந்தது. 60 க்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்று யசோதா என்ற பெண் கூறினார். கலை பீடத்தைச் சேர்ந்த அந்த மாணவி ஒரு குழந்தையின் தாயாவார். 2009 மே இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் மாதக்கணக்காக அரசாங்கத்தின் முகாம்களில் இந்த மாணவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பல்கலைக்கழக அதிகாரிகள் அதன் பின் அவர்களை விடுவித்திருந்தனர். இந்த மாணவர்களில் அநேகமானவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த இரண்டு மாவட்டங்களும் இடிபாடுகள் நிறைந்த இடங்களாக மாறிவிட்டன. விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த சந்தேகத்தில் மாணவர் ஒருவர் இராணுவ தடுப்பு முகாமில் இருந்திருக்கிறார். மாதக்கணக்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தலைகீழாகக் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பிளாஸ்டிக் பைகளால் தனது தலை கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அதன் பின் ஜோன் என்பவர் மற்றொரு புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இலங்கைக் கொடியை எவ்வாறு ஏற்றுவது என்பது தொடர்பாக அவருக்குப் படிப்பிக்கப்பட்டது. அவர்கள் எமது மனதை மாற்ற விரும்பினார்கள் என்று அவர் கூறினார். நாதன், அக்பர் போன்ற பல மாணவர்களுக்கு ஷெல் காயங்கள் ஏற்பட்டன. பாரிய சத்தம் அதிகளவு வெளிச்சம் என்பனவற்றால் நாதன் அவ்வப்போது நினைவை இழந்துவிடுகிறார். இந்த மாணவர்களின் பலரின் கனவானது வெளிநாட்டிற்குச் சென்று சிறப்பான வாழ்க்கையை நடத்துவதாகும். ஆனால், இழந்த வருடங்களை அவர்களால் மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா? இரண்டு மூன்று வருடங்களாக தமது கல்வியாண்டுகளை அவர்கள இழந்துவிட்டனர். ஆனால், அவர்கள் கெட்டிக்காரர்கள். கடுமையாகப் படிக்க முயற்சிக்கின்றனர் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம் தெரிவித்தார். கடந்த காலத்தைக் கடந்து எதிர்காலத்தை நோக்கி முன்நகர்ந்து சென்றால் அவர்களால் கல்வியில் இழந்த வருடங்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். (சகல மாணவர்களின் பெயர்கள் இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.)

மகிந்தாவின் பிறவி குணம் ......

ஆழ குழி தோண்டி போட்டு மறைத்தாலும் அதிலிருந்து ஒருநாள் உண்மை வெளிவரும். உண்மையை மறைக்க முடியாது. இரண்டும் இரண்டும் நான்கு என்றால் நான்குதான். இதில் கூட்டியோ குறைத்தோ சொல்வதற்கு இதுவரையில் புதிய கண்டுபிடிப்போ, அறிவியல் ஆதாரங்களோ இல்லாத நிலையே நீடிக்கிறது. ஆகவே, உண்மை என்பதும், நான்கு என்ற அடிப்படையிலே தான் இருக்குமே தவிர, அது மூன்றாகவோ, ஐந்தாகவோ மாற முடியாது. சில முட்டாள்கள் அப்படி மாற்றுவதற்காக பெரும் முயற்சி எடுக்கிறார்கள். பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அடுக்கடுக்காய் பொய்களை அவிழ்த்துவிடும் இலங்கை அரசு, அதன் தலைமை இறுதியாக தம்மிடம் இந்த ஆயுதங்கள்தான் இருக்கிறது. அது கனரக ஆயுதங்களைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது, பொய்யாயுதம். அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்துமுடிக்க இலங்கை அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இன்று இலங்கைக்கு நேரிடை நின்று அதன் அநியாயங்களை தட்டிக்கேட்க, சரியாக தலைமைக் குழு இல்லாத காரணத்தினால் தமக்கு தெரிந்த வகையில் மட்டும்தான், அல்லது தாம் விரும்புபவை மட்டும்தான் உண்மை என்று உலகையே நம்ப செய்ய பல்வேறு முயற்சிகளை, பலவாறு செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு சான்றுதான் பொட்டு அம்மான் குறித்த செய்தி. இறந்தவரின் உடல் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் அது கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆகவே, இறந்தாரா, இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும் என்று காத்திருக்கலாம். ஆனால் மகிந்தாவின் அரசு அப்படி இல்லாமல் உலக காவல்துறையினருக்கு பொட்டு அம்மான் இறந்து விட்டதாக செய்தி தருகிறது. உலக காவல்துறையினருக்கு அவர் உயிருடன் இருப்பதாக உண்மை தெரிகிறது. ஆகவே அந்த உண்மையை மறைக்க, அவரை தேடுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இலங்கை அகில உலக போலீசை கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையான ஒன்றை அல்லது தெரியாத ஒன்றை ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுத்து மறைக்க முயற்சிக்க வேண்டும் என்கிற அடிப்படை வாதம்கூட இலங்கையிலுள்ள சிங்கள பாசிச வெறியர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்றால், அவர்களுக்குள் புதைந்துள்ள முட்டாள் தனமும், ஆதிக்க வெறியும்தான் என்பதை மறுத்துறைக்க முடியாது.ஒரு இனத்தின் இறையாண்மையை, தனித்தன்மையை வேரோடு அழிக்க முனைப்புக் காட்டிய சிங்கள அரசு, தமது நட்பு நாடாக தேர்வு செய்தது இந்தியாவை. இன்று இந்தியா, இலங்கையில் தொடர் வண்டிக்கான பணி திட்டங்களை மிக செம்மையாக நிறைவேற்றி வருவதாக செய்திகள் சொல்கிறது. இதை மகிந்தாவே ஒப்புக் கொள்கிறார். ஆனால் இலங்கை எமக்கு ரயில் திட்டத்திற்கான பாதையை அமைத்துத் தருகிறது என்பதற்காக நாம் எந்த நிலையிலும் இந்தியாவிற்கு அடிமை இல்லை என்பதை மிகவும் நாசுக்காகவும் வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் கூறும்போது, இலங்கையை ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அது இந்தியாவோ இலங்கையோ எதுவானாலும் சரி என்பதற்கு அழுத்தம் தருகிறார். ஒரு உண்மையை அவர் அப்பட்டமாக ஒப்புக் கொள்கிறார், நாம் வேறொரு நாட்டிலிருந்து இனி ஆயுதம் கொள்முதல் செய்வதில்லை. காரணம், போதிய ஆயுதங்கள் தம்மிடம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அது. ஆக, தேவைக்கு அதிகமாக ஒரு நாட்டின், அந்த நாட்டு மக்களின் குருதி வடித்த பணத்திலே ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது அடக்குமுறை, ஆணவம், ஆதிக்கம் என்கிற எல்லையை தாண்டி ஒரு மாபெரும் மனிதநேயமற்ற ஆட்சியை அங்கே மகிந்தா நிறுவி இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அப்படி அடக்குமுறையான ஒரு ஆட்சி அங்கே நீடித்திருக்கிற காரணத்தினால்தான், அதன் வெளித்தோற்றம் மட்டுமல்ல, உள்ளடக்கமும் மிகவும் கமுக்கமாகவே செயல்படுவதை காணமுடிந்தது. மகிந்தா எந்த அளவிற்கு தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்றால், இந்த ஆட்சி கட்டிடம் கவிழாமல் இருக்க யாரையும் கவிழ்க்க அவர் தயாராக இருக்கிறார். யாரையும் கொல்ல அவர் எப்போதும் தயார் நிலையில்தான் இருக்கிறார். தம்மை எதிர்ப்பவர்கள் இருக்கக்கூடாது என்கிற ஆதிக்க மனப்போக்கிலே தான் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என்பதற்கான, அடுக்கடுக்கான காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகமுடியும். ஆனால் குறிப்பான ஒரு காரணம் மகிந்தா, சரத்தை சிறையில் அடைத்தது. சிறையில் அடைத்ததோடு அவர் பொது நீதிமன்றத்திலே வழக்கு நடத்தி, விடுவிப்போ, தண்டனையோ கொடுத்திருக்கலாம். ஆணவத்தின் உச்சமாக அவர் சொல்கிறார், ”சரத்பொன்சேக-வை நான் மன்னிக்க மாட்டேன்” என்று. ஆக, சிங்கள நாட்டிலே சட்டத்திற்கோ, ஆட்சி அமைப்பிற்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார். சிங்கப்பூர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், ”சரத்தை முட்டாள் என்று கடுமையாக வர்ணித்திருக்கிறார். அவர் படிப்படியாக சொல்லும்போது, சரத் 2009 நவம்பர் 16ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் இதோ, இந்த இடத்திலேதான் எனது வலதுப்பக்கம் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் பலமுறை கேட்டேன், தேர்தலில் போட்டியிட விருப்பமா? என. அவர் இல்லையென மறுத்துவிட்டார். நான் நினைத்திருந்தால் அவரை பணியிலிருந்து விடுவிக்காமல், அவர் தேர்தலின் பக்கமே வராமல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் கடைசிவரை என்னை ஏமாற்றினார். ஆகவே இனி நான் அவரை மன்னிக்க மாட்டேன்” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். மேலும், மகிந்தா கூறும்போது, ”அரசியல் வேறு, ராணுவம் வேறு என்று நான் சரத்திற்கு அறிவுரை கூறினேன். அரசியலில் எதுவும் நடக்கும். நாம் நினைத்தது நடக்காது என்றெல்லாம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று மேலும் தம்முடைய எண்ண குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவிட ஒரு கேவலம், இந்த நாட்டின் இறையாண்மை, இந்த நாட்டு மக்களின் பன்முகத்தன்மை, அவர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளையெல்லாம் கடந்து, மகிந்தா சொல்கிறார், இந்த ராணுவ சட்டங்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிசால் ஏற்படுத்தியவை. இதுவரை அச்சட்டங்கள்தான் நடைமுறைப்படுத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது என்பதை கூறுவதின்மூலம் அவர் ஒரு மறுகாலனியின் அடிமை என்பதை தமது ஒப்புதலாக வழங்கியிருக்கிறார். இந்தியாவிலும், ரௌவ்ளட் போன்ற மிக கடுமையான அடக்குமுறை சட்டங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது தமது நாட்டின்மீது திணிக்கப்பட்டது. அதே அடக்குமுறை சட்டங்கள்தான் இன்று வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, சொந்த மக்களை அடக்குமுறை தன்மைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிய மக்கள் திரள் ஒருநாள் எழுந்து நிற்கும். இதை எத்தனை பெரிய ஆற்றல் வாய்ந்த, கடுமையான அடக்குமுறையாளர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவானாலும், இலங்கையானாலும் இதுதான் உண்மை. காரணம், அடக்குமுறையாளர்கள் வெற்றிப்பெற்றதாக இதுவரை வரலாறு இல்லை. இனி ஒருபோதும் அப்படிப்பட்ட வரலாறு வரப்போவதும் இல்லை. வரலாற்று நாயகர்கள் எல்லாம் அடிமை மக்களின் அணியில்தான் அணிவகுத்து இருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அடக்குமுறையாளர்களின் பக்கத்தில் நின்றது கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் தமிழீழம் விழித்தெழும். அது மிக அருகாமையில்தான் இருக்கிறது. அதேபோன்று, சிங்கள பாசிச வெறியும் துடைத்தெறியப்படும். சிங்கள மக்களே அணித்திரண்டு அதை உடைத்தெறிவார்கள். அதற்கான கட்டமைப்பைத்தான் மகிந்தா அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் தமது ஆதிக்கத்தின்கீழ் வரவேண்டும் என்பதற்காக அடக்குமுறையாளன் இட்லர் ஜெர்மானிய மக்களை இனிவெறியூட்டி, படைப்படையாய் அணிவகுக்கச் செய்தான். ஆனால் அவனை வீழ்த்த செஞ்சேனை வீறுகொண்டெழுந்தது. எப்படி அடக்குமுறையாளன் இட்லர் ஐரோப்பிய ஒன்றியத்தையே அழித்தொழிக்க முனைந்துபோய், தாம் அழிந்துபோனானோ, அதேபோன்று தமிழீழ அரசின் தமிழர் படையும் ஒருநாள் உயிரோட்டோத்துடன் அடக்க முடியா ஆற்றலோடு மீண்டும் சமர் புரிய வரும். அந்நேரத்திலே இட்லருக்கு நிகழ்ந்த அதே நிகழ்வு மகிந்தாவுக்கு ஏற்படலாம். நாம் செய்தி சொல்கின்ற இந்தநேரத்தில், பாவம் சரத்திற்கு ஒரு கதையும் சொல்லியிருக்கிறோம். ஒரு நாட்டில் யானையும், நரியும் நண்பர்களாக இருந்தது. காட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நரி சொன்னது, பக்கத்து ஊரில் நல்ல வளமான கரும்புத் தோட்டம் இருக்கிறது. கரும்புதான் உங்களுக்குப் பிடிக்குமே? வாருங்கள். நாம் சேர்ந்தே போய் சாப்பிடுவோம் என்று. யானையும் நரியின் பேச்சைக் கேட்டு காட்டைக் கடக்க முயன்றது. வழியில் ஓர் பெரிய நீரோடை. நரியைப் பார்த்து யானை சொன்னது, இந்த நீரோடையை நான் கடந்து விடுவேன். உன்னால் கடக்க முடியுமா? என்று. நரி சொன்னது, நான் உன் முதுகின்மீது ஏறி அமர்ந்து கொள்கிறேன். நீ ஓடையை கடந்தவுடன் இறங்கி கொள்கிறேன் என்று கூறியபடி யானையின் மீது நரி அமர்ந்துகொண்டது. யானையும் ஓடையை கடந்தது. ஓடையை கடந்துபோய், கரும்பு தோட்டத்திலே உள்ள கரும்பை முடிந்தவரை யானையும் சுவைத்தது. நரியும் கூடி கும்மாளம் போட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நரி மிக வேகமாக ஊளையிடத் தொடங்கியது. யானைக்கு ஒன்றும் புரியவில்லை. நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள் ஒன்றுகூடி, கையில் கிடைத்த கல், கம்புகளைக் கொண்டு எறிந்தார்கள். ஊருக்குள் நரி வந்துவிட்டதே என்று. நரி தந்திரமாக ஓடி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. யானை பாவம். பருத்த உருவம் அல்லவா? அது கல்லின் அடிமையிலும், கட்டையின் அடியையும் தம் மேல் காயம் பட்டு, அதுவும் ஓடி ஒளிந்தது. ஊர்மக்கள் சரி, இரண்டும் ஒழிந்தது என்று நினைத்து திரும்பி சென்றார்கள். நரி திரும்ப வந்தது. யானை கேட்டது, ஏன் ஊளையிட்டாய். நீ ஊளையிட்டதால்தானே ஊர் மக்கள் கூடினார்கள் என்று. நரி சொன்னது, என்ன செய்வது நானும் அடக்கத்தான் நினைக்கிறேன். ஆனால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் எனக்கு ஊளையிட வேண்டும்போல் இருக்கிறது. நானும் ஊளையிடுகிறேன். இது என் பிறவி குணம், மாற்றமுடியாது என்று சொன்னது. யானை நினைத்துக் கொண்டது, இப்படி கேடு கெட்ட பிறவி குணம் கொண்ட ஒருவனுடா நான் இத்தனை நாளும் நட்புக் கொண்டேன். அதற்காக நான் பட்ட அடி, உதை போதும். இனிமேல் நரியோடு உறவு வேண்டாம் என உளறிக் கொண்டே யானை காட்டுக்குள் சென்றது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்குள் முரண்பாடு?

ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக செயற்படுவதை நிராகரித்துள்ள இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜென்றல் அமல் கருணாசேகர ஓய்வுபெறத் தயாராகி வருவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எரித்திரியாவிற்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கருணாசேகர லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக வாக்குமூலமொன்றைப் பெறவேண்டும் எனக் கூறி அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியழைக்கப்பட்டார். சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு ஜெனரல் பொன்சேக்கா காரணம் என வாக்குமூலத்தைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகள் மேஜர் ஜெனரல் கருணாசேகரவிடம் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர். தான் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக கடமையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் பணியாற்றி வந்ததாக கருணாசேகர கூறியுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு உதவியதாகக் கூறி இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இரகசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த அநாவசியமான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் சம்பந்தமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர்களுக்கெதிராக இந்த நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரனவே ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. கபில ஹெந்தாவித்தாரன இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றியபோது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்று வந்தனர். ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் புலனாய்வுப் பிரிவை முழுமையாக மறுசீரமைத்ததுடன் அதன் தலைவராக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை நியமித்தார். புலனாய்வுப் பிரிவுத் தலைவர் என்ற வகையில் அமல் கருணாசேகர விடுதலைப் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரியென்பதை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். யுத்தத்தின் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கின்ற இடம் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஏழு ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டமை, புலிகளின் முக்கியஸ்தரான கேர்ணல் ராம் கல்முனையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை மற்றும் கே.பி.யை கைதுசெய்வதற்கான தகவல்களைப் பெற்றுக்கொடுத்தமை ஆகிய பணிகளையும் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மேற்கொண்டிருந்தார்.

சிங்கள அரசு ஒட்டுண்ணி அமைச்சர் டக்ளஸ் என்ன செய்கிறார்?

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை. நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது. குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்... 'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!. ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம். தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....! தமிழ்மொழி இருட்டடிப்பு தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது. உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு... ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி. இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது. இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது. அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்....... ஆலய வரலாறு அது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம். யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம். சோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. மாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர். வடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம். முருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்?

அவதானிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை

அவதானிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் பட்டியல் படுத்தியுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் மனித உரிமைகள் ஆண்டறிக்கையில் அவதானிக்கப்பட வேண்டிய நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயர் மட்டுமே இந்த ஆண்டில் இணைக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. சிறிய அளவில் விடுதலைப் புலி உறுப்பினர்களும், ஏனைய ஆயுதக் குழுக்களும் தொடர்ந்தும் இயங்கி வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் கருணா தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் ஆயுதமேந்தி வருவதாக வெளிவவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் வேறும் தமிழ் துணை இராணுவக் குழுக்கள் இடம்பெயர் முகாம்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்கள் ஆயுதங்களை களையவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்கள் அமெரிக்காவுக்கு கடத்தல்

சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கப்பல் மூலமாக அனுப்பப்படும் பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளின் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். சுங்கத்துறையினரின் கண்ணில் படாமல் எந்த பொருளும் கண்டெய்னருக்குள் நுழைய முடியாது. அந்த அளவுக்கு சென்னை துறைமுகத்தில் பார்சல்கள் அனுப்பும் பிரிவில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் மூலமாக ராணுவ ரகசியங்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் துறைமுகத்தில் பார்சல்கள் வைக்கப்படும் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத் துக்கிடமான வகையில் இருந்த 5 பார்சல்கள் அதிகாரிகளின் கண்ணில் பட்டது. இந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் நீலக்கலரில் இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய வரைபடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பார்சல்கள் அனைத்தையும் தனியாக எடுத்துச் சென்று பாதுகாத்து வருகிறார்கள். ராணுவ ரகசியங்கள் அடங்கிய இந்த பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதனை அனுப்பியது யார் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் இந்த பார்சல்களை முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் குடும்பத்தினர் அனுப்பி வத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்திய ராணுவ ரகசியங்களை அமெரிக்காவுக்கு கடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுங்கத் துறை அதிகாரி ராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சந்தேகத்துக்கிடமாக 5 பார்சல்களை பறிமுதல் செய்துள்ளோம். அதில் “ப்ளு பிரிண்ட்” ஒன்று உள்ளது. அது என்ன என்று இப்போது கூற முடியாது. இதனை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த பார்சல் களை இன்று மீண்டும் சோதனையிட உள்ளோம். அதன்பிறகுதான் இதுபற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும். சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கப்பல் மூலமாக அனுப்பப்படும் பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளின் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். சுங்கத்துறையினரின் கண்ணில் படாமல் எந்த பொருளும் கண்டெய்னருக்குள் நுழைய முடியாது. அந்த அளவுக்கு சென்னை துறைமுகத்தில் பார்சல்கள் அனுப்பும் பிரிவில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் மூலமாக ராணுவ ரகசியங்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் துறைமுகத்தில் பார்சல்கள் வைக்கப்படும் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத் துக்கிடமான வகையில் இருந்த 5 பார்சல்கள் அதிகாரிகளின் கண்ணில் பட்டது. இந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் நீலக்கலரில் இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய வரைபடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பார்சல்கள் அனைத்தையும் தனியாக எடுத்துச் சென்று பாதுகாத்து வருகிறார்கள். ராணுவ ரகசியங்கள் அடங்கிய இந்த பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதனை அனுப்பியது யார் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் இந்த பார்சல்களை முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் குடும்பத்தினர் அனுப்பி வத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்திய ராணுவ ரகசியங்களை அமெரிக்காவுக்கு கடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுங்கத் துறை அதிகாரி ராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சந்தேகத்துக்கிடமாக 5 பார்சல்களை பறிமுதல் செய்துள்ளோம். அதில் “ப்ளு பிரிண்ட்” ஒன்று உள்ளது. அது என்ன என்று இப்போது கூற முடியாது. இதனை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த பார்சல் களை இன்று மீண்டும் சோதனையிட உள்ளோம். அதன்பிறகுதான் இதுபற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும்.

இனி நடைபெறும் பேச்சுக்களின் போது வி.புலிகள் கேட்டதை த.கட்சிகள் கேட்கமுடியாது!: மகிந்த

எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத் தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல் லாம் கேட்க முடியாது. வடக்குக் கிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது ஆபத்தானது. சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமானது. அது பிரிவினையுடன் தொடர்புபட்டது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூரின் "ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ்' பத்திரி கைக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டியில் மேற்கண்டவற்றைத் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பேட்டியில் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு இப்போது மன்னிப்புக் கிடையவே கிடையாது என்றும், அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தத் தவறிய முட்டாள் என்றும் விமர்சித்துள்ளார். "ஸ்ரெய்ட் ரைம்ஸ்' பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து எவ்வாறு மதிப்பிடு கிறீர்கள்? மூன்றில் இரண்டு பெரும் பான்மை சாத்தியமா? பதில்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் குறித்து நான் பதற்றமற்ற நிலையில் உள்ளேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது எனக்கு முக்கியமான விடயமல்ல . ஏனென்றால், நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட வேளை என்னிடம் பெரும்பான்மை இருக்கவில்லை. நாடாளு மன்ற சபாநாயகரை எதிர்க்கட்சியினரே நியமித்தனர். நான்கு வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை நான் கலைத்த வேளை, சபாநாயகர் உட்பட 47 புதியவர் கள் எனது கட்சியில் இருந்தனர். எனக்கு பெரும்பான்மையும் இருந்தது. ஆகவே, நான் எண்ணிக்கை குறித்து கவலையடையவில்லை. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறுவோம். எனினும், மூன்றில் இரண்டு பெரும் பான்மை என்பது அரசமைப்பை மாற்றுவ தற்கு உதவும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்க வில்லை. கேள்வி: விடுதலைப் புலிகளின் ஆதர வாளர்கள் இன்னமும் செயற்படுகிறார்களா? பதில்: இலங்கைக்குள் செயற்படு வதை விட, அதற்கு வெளியேதான் அதி களவிற்கு செயற்படுகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தை வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுக்கென நிகழ்ச்சி நிரல் உள்ளது. அவர்கள் இதில் வாழ்கின்றனர். கடந்த காலம் போன்று தமிழர்கள் தற் போது நிதி வழங்க முன்வராததால் விடுத லைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களைப் பொறுத் தவரை இங்கே ஏதாவது நடக்கவேண்டும். கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்து என்ன சொல்கிறீர்கள்? அதன் அதிகாரங் களைக் குறைப்பீர்களா? பதில்: இதனை நாடாளுமன்றமே தீர்மா னிக்கவேண்டும். நாடாளுமன்றம் இவ் வாறான விடயங்களை கடந்த காலங்க ளில் கையாண்டுள்ளது. ஆகவே, நாடாளு மன்றமே இதனைத் தீர்மானிக்கட்டும். கேள்வி: நாடாளுமன்றம் நீங்கள் சொல்வதைத் தானே செய்யும்? பதில்: எனக்குத் தெரியும். அவ்வாறே கருதுகிறேன். என்றாலும், சில மாற்றங்கள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் கடப்பாடுடைய ஜனாதிபதி முறையை நான் விரும்புவேன். அல்லது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாடாளு மன்றத்திற்குப் பதிலளிக்கும் பிரதமரை யும் விரும்புவேன். அல்லது ஓய்வுபெற்று சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று அர சிற்கு ஆலோசனை வழங்க விரும்புவேன். ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில்லாவிட் டால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந் திருக்க முடியாது. கேள்வி: பூரண நல்லிணக்கத் திட்டம் குறித்து எழுதியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன? பதில்: இதனையே நான் நம்புகிறேன். சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. இதேபோன்று அபிவிருத்தி இல் லாமல் சமாதானம் இல்லை. கிராமமொன்றிற்கோ அல்லது நலன் புரி முகாமிற்கோ சென்று உங்களுக்கு அரசமைப்பு மாற்றம் வேண்டுமா எனக் கேளுங்கள். எங்களுக்கு இருப்பதற்கு வீடு வேண்டும், எனது குழந்தைக்கு கல்வி வேண்டும் என்ற பதிலே வரும். இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய் தால் புதிய நடைமுறையும், புதிய அரசி யல்வாதிகளும் உருவாகலாம். இதற்காகவே நான் தேர்தலை நடத்தி னேன்.வடபகுதி மக்கள் எனக்கு ஆதர வளிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந் தும் தேர்தலை நடத்தினேன். என்றாலும் எனக்குக் கிடைத்த வாக் குகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள் ளன. கேள்வி: தீர்வு என்ற வகையில் சமஷ்டி கொள்கை தகுதிவாய்ந்தது இல்லையா? இந்தியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடு களில் இது பலனளித்துள்ளதே? பதில்: சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமான வார்த்தை. அது பிரிவினையுடன் தொடர் புபட்டுள்ளது. அரசியலிலிருந்து ஓய்வு பெற அல்லது விலகத் தீர்மானித்தால் சமஷ்டி பற்றிப் பேசுவதே சிறந்த வழி, அதற்குப் பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். நான் ஓர் அரசியல்வாதியல்லவா? உண்மையான நிலைவரம் என்னவென் றால், இது இந்தியா போன்று பாரிய நாடல்ல. இலங்கையின் வரலாற்றை மறக்க முடியாது. தற்போது அனைத்து முதலமைச்சர்க ளும் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் என் பதால் அவர்களை என்னால் கட்டுப் படுத்த முடிகின்றது. என்றாலும், அவர்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்டு கின்றனர். அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்கினால் தாங்கள் நினைத்ததை எல் லாம் செய்வார்கள். இந்தியத் தமிழர்கள் தமது பகுதிக்கு வரமுடியாது என அவர்கள் தெரிவிக்கவும் கூடும். கேள்வி: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? குறிப்பாகப் பொலிஸ் மற்றும் காணி மீதான அதிகாரங் கள் மாகாண சபைகளுக்கு வழங்குவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? பதில்: இதுகுறித்து நாங்கள் ஆராய வேண்டும். 13 ஆவது திருத்தம் ஏற்க னவே நடைமுறையில் உள்ளது. பொலிஸ் அதிகாரத்தைத் தவிர, ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்கிவிட்டோம். நிலங்கள் தொடர்பாகச் செய்வதற்கு எதுவுமில்லை. வடக்கில் மாகாணசபை இல்லாத போது என்னால் என்ன செய்யமுடியும்? எவ்வாறெனினும், மத்திய அரசின் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். நீர்ப்பாசனக் குளங்களைத் தமது நண் பர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிலர் வழங்குகின்றனர். பொலிஸ் அதிகாரத் தைப் பொறுத்தவரை எனது மக்கள் இதனை வழங்கவேண்டாம் என்றே தெரிவிப்பர். சோனியா காந்தி உத்தரப்பிரதேசத் திற் குச் சென்றவேளை, என்ன நடை பெற்றது என்பதைப் பாருங்கள். அவரது தொகுதிக் குள் அவரை நுழைவதற்கு அந்த மாநில முதலமைச்சர் அனுமதி வழங்க மறுத்தார். அவர்கள் பொலிஸின் கட்டுப்பாட்டிற் காக அடிபணிகின்றனர். இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன் நான் இந்தியாவிடமிருந்து பாடம் கற் றுள்ளேன். இதே தவறை நான் செய்வேன் எனக் கருதுகிறீர்களா? கேள்வி: விடுதலைப் புலிகள் முற் றாக அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறு வீர்களா? பதில்: இல்லை. செயற்படாமல் இருக்கும் உறுப்பினர்கள் உள்ளனர். குறிப் பாக இலங்கைக்கு வெளியே அவர்கள் உள்ளனர். தலைமைத்துவம் அழிக்கப்பட் டதால் அனைத்தும் முடிவடைந்து விட வில்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்பது மாதங்களே ஆகின்றன. பயிற்றுவிக்கப் பட்ட தற்கொலைப் போராளிகள் செயற் படாமலுள்ளனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் தற்கொலைப் போராளி களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை நடத்தினர். அவர்கள் கொழும் பிலும் ஏனைய வெளிநாடுகளிலும் உள் ளனர். பலர் அவர்களைப் பயன்படுத்த லாம். பொன்சேகா ஒரு முட்டாள் மன்னிப்பு வழங்கு சாத்தியம் இல்லை. கேள்வி: பொன்சேகா குறித்த உங் களது உணர்வலைகள் என்ன? நீங்கள் திட்டமிட்டுள்ள தேசிய நல்லிணக்கத்தின் கீழ் அவரையும் அரவணைக்க முடியாதா? பதில்: அவர் ஒரு முட்டாள். நவம்பர் 16ஆம் திகதி அவர் இங்கு எனக்கு முன் னால் அமர்ந்திருந்தார். ஜனாதிபதித் தேர்த லில் போட்டியிட விரும்புகிறீரா என நான் அவரைக் கேட்டேன். அவர் இல்லை யென்றார்; அதுபற்றிச் சிந்திக்கவில்லை என்றார். இறுதியாக என்னைச் சந்தித்த போது கூட அவர் இதுபற்றிக் கூறவில்லை. நான் அவரிற்கு ஆலோசனை வழங் கினேன். அரசியல், இராணுவத்திற்குரியது அல்ல என்றேன். இராணுவத்தில் நீங்கள் உத்தரவிட் டால் அவர்கள் பின்பற்றுவார்கள். அரசிய லில் வேறு மாதிரி. உங்களை விமர்சித்த வர்களிடமே நீங்கள் செல்கிறீர்கள் என் றேன். அவர் இதுவும் அரசியல்தானே என்றார். நான் நீங்கள் அவதானமாக இருங்கள், அவர்கள் ஒருநாள் உங்களைக் கைவிடு வார்கள் என்றேன் சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங் கியதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அவர் தன்னை அரசியலுக்குத் தயார்ப் படுத்தாத முட்டாள்என்றார்.

டக்ளஸ் லப்டொப் கொடுக்கிறாராம்..

வடக்கின் வசந்தத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு கையடக்கணனி! இது தேர்தல் சூதாட்டமா அல்லது மீள்கட்டுமானத்தின் படிமானமா! வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு மடி கணனிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் காலம் நெருங்கி வருவதால் வடகிழக்கில் அபிவிருத்திகள், மீள்கட்டுமானங்கள், திறப்பு விழாக்கள் என தடல்புடலாக நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. இவையெல்லாம் தேர்தலை குறியாக கொண்டுதான் வேகம் பெறுகின்றதா? உண்மையாகவே மக்களின் நலனை கொண்டுதான் இவை இடம்பெறுகின்றதா? தேர்தல் நெருங்கும்போது திகதியிடப்பட்ட காசோலைகளை வழங்குவதும், தேர்தலின் பின்னர் அவ் கசோலைகளில் பணம் இல்லாதுபோவதும் கடந்தகால நிகழ்வுகளாக இடம்பெற்றன. ஆகவே அபிவிருத்திகள், திறப்பு விழாக்கள், நன்கொடைகள், உதவிகள் எமது மக்களுக்கு தேவையானவைதான். அவற்றை வழங்குவதும் நடைமுறைப்படுத்துவதும் வரவேற்கக் கூடியதுதான். இவையெல்லாம் தேர்தல் நெருங்கும்போது சூடுபிடிப்பதுதான் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தினால் எந்தவொரு அபிவிருத்தியையும் காணாத வடகிழக்கு மாகாணம் அபிவிருத்தியில் புத்துயிர் பெறுவது வரவேற்கப்பட வேண்டியதுதான். இது தேர்தலுடன் மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெற்கே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் போன்று வடக்கு அபிவிருத்தியும் செழிப்புற வேண்டும். அதுவே பாராளுமன்றிற்கு தெரிவு செய்யும் மக்களிற்கான நன்றியுணர்வாகும்.

அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை

இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழுமையாகத் தெரிந்தவர்கள் 7. கருணாவைச் சிறைபிடித்து பின் விடுதலை செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்கள் இப்படி இவர்களின் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் திடீர் திருப்பமாக மேற்;கூறப்பட்ட அறிவிப்பு எதற்கும் சம்பந்தம் இல்லாதவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகவும் ஈழமாகவும் ஆணித்தரமாகவும் சிந்தித்து செயலாற்றவேண்டும். புலிகளுக்கான தடை அகற்றப்படவில்லை. எப்படிப் புலிகள் சரணடையமுடியும்? அப்படிச்சரணடைந்தால் அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்படி தான் சிறையில் அடைக்கப்படும். இந்த அறிவிப்பானது எஞ்சியுள்ள புலிகளைக் கூண்டில் அடைக்க ஒரு தந்திரமான சதியாகவும் இருக்கலாம் அல்லவா? சர்வதேசம் புலிகள் என்ற விடயத்தில் ஓர் அணியாகத்தான் இன்றும் இருக்கின்றனர் என்பதைத் தமிழ்மக்கள் யாவரும் மறந்துவிடக்கூடாது. ஒரு பக்கம் எதிர்பபும் மறுபக்கம் அணைப்பும், இன்னொரு பக்கம் ஆதரவுமாக சர்வதேசம் தமிழ்மக்களைப் பலவழிகளில் பொறி வைக்கின்றது. உதாரணமாக தமிழர்களின் உரிமைப்போராட்டம் என வர்ணித்த ஜேர்மனி புலி உறுப்பினர்களைக் கைது செய்தது யாவரும் அறிந்த விடயம். எனவே இந்த அறிவிப்பில் ஏதோ ஒரு பாசாங்குத்தன்மை ஒளிந்திருக்கின்றது. இவற்றைத்தமிழ்மக்கள் சரியா எடைபோடவேண்டும். சில புலி உறுப்பினர்கள் தஞ்சம் அடைந்தால் அவர்கள் மூலமாக புலிகளின் தற்கால செயற்பாடுகளையும், யுக்திகளையும் உள்ளடிவாறுகளையும் அறியலாம் என்ற உள்நோக்கங்களும் இருக்கலாம். இந்த அறிவிப்பானது ஒரு பொறியாக இருக்கலாம். புலிகள் உறுப்பினர்கள் ஏன் இங்கு வந்து அகதி கோரவேண்டும்?

இலங்கை போரில் 2,15,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: உலக சுகாதார நிறுவனம்

1983ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது 2,15,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனதின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடையில் இப்போரினால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைவிட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகளும் இலங்கை படையினரால் இப்போர்க் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையதளம் ஒன்றில் ஜேம்ஸ் நைஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2008ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கையின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 20,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைவிட இப்போரினால் 30,000 தமிழ் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இப்போரின் இறுதிக் காலப்பகுதியில் 2,50,000க்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பல சந்தர்ப்பங்களில் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பிரித்தெடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இம்முகாம்களில் காணப்பட்ட சுகாதார வசதியின்மை, மருத்து வசதியின்மை போன்ற காரணங்களாலும், தொற்று நோய்களாலும் 2009ஆம் ஆண்டு ஜீலை மாதக் கணக்கீட்டின்படி கிழமைக்கு 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் பிரித்தானிய அரசு 13.7 மில்லியன் பவுன்டுகளை இலங்கை படைத்துறைக்கு நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார். 1956, 1958, 1977, 1981 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளே தமிழ் மக்களை இலங்கை அரசுக்கு எதிராக ஆயதமேந்தி தீவிரமாகப் போராட வைத்ததாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழினத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கப்போவது யார்? - பருத்தியன்

நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது. இங்கு யார் பிரிந்தார்கள்; பிரிக்கப்பட்டார்கள் என்பவற்றின் காரண காரியங்களை இரண்டாம் பட்சமாக வைத்து, இவ்வளவு காலமாய் நம் மக்கள் பட்ட துன்பங்கள்,கஷ்டங்கள்,இழப்புக்கள் எல்லாம் எதற்காக??? என்ற கேள்வியை முதன்மையாக வைப்போம். சிங்களவன் போடும் பிச்சைத் தீர்வை வாங்கிக் கொள்வதற்கு இவ்வளவு போராடியிருக்கத் தேவையில்லை. இவ்வளவு அவலங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், போகிற போக்கில் இவர்களின் ஒற்றுமையில்லாத செயற்பாடுகளினூடாக சிங்களவன் போட நினைக்கும் பிச்சைத் தீர்வைவிட கேவலமான ஒரு தீர்வுதான் தமிழருக்குக் கிடைக்கும் போலிருக்கின்றது. அப்போது இவர்கள் ஏதாவது சொல்வதற்கும், செய்வதற்கும் ஒன்றுமே இருக்காது. எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்களாய் நிற்பார்கள். இவர்களோடு துணைநின்ற துணைக்கண்டம் கூட துணை நிற்காது. மேற்குலகமும் வேடிக்கை பார்த்து நிற்க தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படும். தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிங்களம் சொல்லும் எதனையும் ஆமோதிக்கும் தமிழ்த் தலைவர்கள் மாத்திரம் விருந்தினர்களாய் வந்து உட்கார அனுமதிக்கப்படுவார்கள். தமிழர்களின் எதிர்காலம் நமது அரசியல் சாணக்கியர்கள் முன்னாலேயே சிங்களவன் கைகளிற்கு எழுதிக் கொடுக்கப்படும். நம் மக்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மண்ணாய்ப் போகும்! மண்ணோடு மண்ணாகிப் போன நம் மாவீரர் கனவுகள் எல்லாம் வீணாய்ப் போகும்! தமிழீழம் என்கின்ற தேசத்தின் விடியல் தொலைவாகி தமிழினத்தின் விடுதலையும் கனவாகிப் போகும்! பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தற்போது மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மிகவும் வினோதமாய் அமைந்துள்ளன. வழமையாக ஒரு தேர்தல் வரும்போது கட்சிகள் சில ஒற்றுமையாகி கூட்டணி வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ளவே முயலும். ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவடைந்து மூன்று அணிகளாக உருவாகியிருப்பதானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தாயகத்திலுள்ள தமிழர்களினைப் பொறுத்தவரையில் தற்பொழுது சிங்கள தேசத்தினால் நிர்ணயிக்கப்படும் தேர்தல்களில் அதிக நாட்டமில்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.வாக்களிக்க ஆர்வமுள்ள அற்ப சொற்ப வீதமானவர்களைக் கூட தமது அச்சுறுத்தல்களினால் அடக்கிவிடுகின்றது சிங்கள வல்லாதிக்கம். அதைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காணமுடிந்தது. நிலைமை இப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவென்பது தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் விரக்தி நிலையையுமே உருவாக்கியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவது உறுதி என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிந்தவுக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள் நம் தமிழ் அரசியல் சாணக்கியர்கள். ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் தமிழீழம் என்ற இலட்சியக் கனவினை அடிமனதில் சுமந்தபடியே வாழ்கின்றான் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கோட்பாட்டினைக் கைவிட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். தற்போழுதும், எப்பொழுதும் உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் இருப்பவர்களை இனங்கண்டு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியுமென்பதுடன், தாயகத்தில் வாழும் தமிழர்களின் அபிலாசையும், கோரிக்கையும் தமிழீழத் தேசியமே என்பதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் முடியும். ஒரு பேரழிவின் பின்னும் ஒன்றுபடாத இனமாக தமிழினம் இருப்பது சகிக்க முடியாத வலியை மட்டுமே கொடுக்கின்றது. தாயக நிலைமை இவ்வாறிருக்க, புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் கூட பிளவுபட்ட நிலையே காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, வட்டுக் கோட்டைத் தீர்மானம் என பல வழிகளில் தொடரப்படும் போராட்டங்களின் நோக்கங்கள் , கொள்கைகள் தாயக விடுதலையையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்தாலும், இவ்வமைப்புக்களுக்கிடையில் ஆரோக்கியமான ஒருங்கிணைந்த புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லையென்பதும் தெரிகின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு தாயக விடுதலை என்ற இலட்சியத்தினை நோக்கி சமாந்தரமாகப் பயணிக்கும் முப்படையணிகளாக எதிர்காலத்தில் தமது ஜனநாயக வழி போராட்டங்களினை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. அத்தோடு, இவற்றின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து தாயக விடுதலைக்காக உழைக்க வேண்டியது அனைத்து புலம்பெயர் தமிழர்களினது கடமையாகவும் அமைகின்றது. ஒரு இனத்தின் எதிர்காலத்தினை அந்த இனமே தீர்மானிக்கவேண்டும். அதை வேறொருவர் தீர்மானிக்க எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. எமது இனத்தின் எதிர்காலமும் விடுதலையும் எமது விடுதலை உணர்விலேயே தங்கியுள்ளன. இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாய், வரவிருக்கும் காலங்களில் தமிழ்த் தேசியக் கோரிக்கையினை வெளிப்படுத்துவோம்! தமிழீழம் ஒன்றுதான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம்! "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" (Courtesy:Pathivu)