ஞாயிறு, 21 மார்ச், 2010

புத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை

இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (ஐ.க்யூ பவர்) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும், ஐ.க்யூ. திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது. ஆயிரக்கணக்கான டீன் ஏஜ் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆய்வின்போது அனுபவ அடிப்படையில் சோதிக்கப்பட்டனர். அப்போது புத்திசாலிகள் (அதிகமான ஐ.க்யூ. திறன் பெற்றிருந்தவர்கள்) பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் திறந்த மனதுடன் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், மற்றவர்களில் இருந்து விதிவிலக்காக அவசியமற்றவற்றை ஒதுக்குபவர்களாகவும் இருந்தனர். பாலியல் ரீதியிலும் விதிவிலக்காகவே உள்ளனர். இந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுள்ள பெண்களுக்கு சம்பந்தமில்லை. அவர்களிடம் இருந்து சாதகமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. புத்திக்கூர்மை உடையவர்கள் எண்ணங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று புதுமையான சிந்தனை உடையவர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திறந்த மனப்பான்மை உடையவர்கள் மற்றும் நாத்திகவாதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடும் சுறாவளி தாக்குதல்

வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சுறாவளி காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சுமா‌ர் 60 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீடுக‌ளி‌ல் ‌மி‌ன் இணை‌ப்பு து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.அவுஸ்திரேலியாவின் ஆ‌‌ர்லி கடற்பகுதியில் உருவாகியிருந்த உல்யூ (Ului) புயல் இன்று காலை 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய சுறாவளிக் காற்றில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. கடற்கரையில் இருந்த பல படகுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான 'கிரேட் பேரியர் ரீஃப்' எனும் இடத்தில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ரேலிய அமைச்சர் நீல் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

தெளிவு இன்னமும் தேவை.............

யாழ் குடா நாட்டின் சில புத்தி சீவிகள், சம்பந்தன் தலைமையிலான குழு, சில ஊடகவியலாளர்கள் ,பத்திரிகை நிறுவனம் தம்மால் இயன்றளவு இணக்க அரசியலுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர். அதாவது தருவதை கேட்டு பெற்றுக்கொண்டு பிரச்சினை இல்லாமல் இர்க்க பார்ப்போம் என்பதற்குத்தான் எத்தனை நியாயப்பாடுகளை பொழிந்து தள்ளுகின்றன. இன்று ஒரு பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கமும் எதேதோ புள்ளி விபரங்களை போட்டு எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தாயகம் பறிபோவதாகவும் அதனை காப்பாற்றத்தான் சம்பந்தரின் இணக்க அரசியல் என்றும் மறு வளமாக சம்பந்தர் சொல்வதன்படி செய்யாது போனால் அதாவது தமிழீழம் என்று புலம்பெயர்ந்தவர்களும், ஏனையோர்களும் உறுதியாக நிற்பதனால் தாயகம் முற்றாக பறிபோகும் என திருகோணமலை மாவட்ட இனவீதாசார மாற்றம் , கந்தளாய் கல்லோயா திட்டம் என்பவற்றை குறிப்பிட்டு காட்டுகின்றனர். அதாவது அவர்கள் குறிப்பிட்ட புள்ளி விபரங்கள் வருமாறு: கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவா பித் திட்டங்களை உருவாக்கி திருகோண மலை, அம்பாறை மாவட் டங்களில் சிங் களக் குடியேற்றங்களை உருவாக்கினர். கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடி யேற்றங்களை உருவாக்கிய அதேவேளை, சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மாவட் டங்களின் எல்லை களிலும் மாற்றங்களையும் உருவாக்கினர். மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்ப தைப் பின்னர் பார்ப்போம். திருகோணமலை மாவட்டம் முல் லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லை யான தென்னமரவாடியிலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லை யான வெருகல் ஆறு வரை யான நீண்ட கரையோரப் பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம், பொலன்ன றுவை மாவட்டங்கள் உள்ளன. 1827ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்கள வர்கள் மட் டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15 ஆயிரத்து 663பேராக வும், முஸ்லிம்கள் 3 ஆயிரத்து 245 பேராகவும் காணப்பட்ட னர். இம் மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமிழர்கள் 81.76 வீதமாகவும், முஸ்லிம்கள் 16.9 வீதமாகவும், சிங்கள வர்கள் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர். 1921ஆம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4 வீதமாக வீழ்ச்சி யடைந்த அதேவேளை, முஸ்லிம்க ளின் சனத்தொகை 37.6 வீதமாகவும், சிங்க ளவர்களின் சனத்தொகை 4.4 வீதமாக வும் உயர்வடைந்திருந்தது. 1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்களக் குடி யேற்றம் மற்றும் முஸ்லிம் களின் சனத் தொகை அதிகரிப்பு என் பனவற்றை தெளிவாகக்காட்டியிருக் கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின்படி திருமலை மாவட் டத்தில் தமிழர்கள் (71 ஆயிரத்து 749 பேர்) 38.1 வீதமாகவும் முஸ்லிம்கள் (59 ஆயிரத்து 924 பேர்) 31.8 வீத மாகவும், சிங்களவர்கள் (54 ஆயிரத்து 744 பேர்) 29.08 வீதமாகவும் காணப்பட்டனர். திருகோணமலை மாவட்டத்தில் 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30 வீதமாகவும், 16 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 46.5 வீதமாகவும் உயர்வ டைந்திருக்கிறார்கள். 81.76 வீதமாக இருந்த தமிழர்கள் 23.5 வீதமாக வீழ்ச்சி யடைந்திருக்கிறார்கள். இங்கு இவர்கள் குறிப்பிடும் புள்ளிவிபரங்கள் புலம்பெயர்மக்களும் தமிழீழம் என்று சொல்வதனாலோ அல்லது கடின போக்காளர்களினாலோ உண்டாகியதா? இந்த காலப்பகுதியில் தற்போது மீண்டும் இணக்க அரசியல், இந்தியா அனுசரணை, என்று சப்புக்கொட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி சந்தர்ப்பவாத அரசியல் பேசும் தலைவர்கள் இருந்த காலத்திலேதான் நடந்தது. ஆகவே மேற்கூறப்பட்ட விடயங்கள் நடந்தேறிய வேளை இந்த தலைவர்களும் அவர்களை வால்பிடித்து எம்.பி பதவியினை பெற்று தமது வியாபாரத்தினை பெற துடிக்கும் முதலாளிகளின் குடும்பங்களும் என்ன செய்தார்கள்? இப்போ இந்தியாவின் உதவியுடன் தான் எல்லாவற்றையும் செய்யலாம் அல்லது தாயகம் பறிபோவதனை காப்பாற்றலாம் என்று கூறுகின்றவர்கள் அன்று இந்தியாவுடன் இப்போது இருந்ததனை விட அன்னியோன்னியமாக இருந்தவேளை ஏன் தாயகம் பறிபோவதனை தடுக்க முடியாது போனது. தாயகம் பறிபோகும் வேளை இந்திய இலங்கை அரசியல் சூழல் எலியும் பூனையுமாக இருந்தவேளை புத்திசாலி தலைவர்கள் சாதித்து இருக்கலாம் அல்லவா? சிங்கள அரசாங்கம் தான் நினைத்தவற்றை கச்சிதமாக செய்து வருகின்றது. அதனை தமிழர்கள் காலங்காலமாக எதிர்த்து வந்திருக்கின்றார்கள். சிங்கள குடியேற்றத்தினை ஆகவே யதார்த்தம் என்னவெனில் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆயுத போராட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் ஓரளவு தடுக்கப்பட்டன மேலும் சில குடியேற்றங்கள் அகற்றப்பட்டன என்பதே உண்மை. ஆகவே ஒவ்வொருவரும் தமது சுய நோக்கங்களுக்காக வரலாறுகளையும், தடங்களையும் பாவிப்பதனை நிறுத்திவிட்டு, குற்றம் சுமத்துவதனை நிறுத்தி ஒவ்வொருவரும் கூட்டாக சேர்ந்து எப்படி, எதனை செய்யலாம் என திட்டமிடவேண்டும். இல்லையேல் விட்டுவிடவேண்டும். திரும்ப திரும்ப ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தமிழர்களுக்குள் தமிழர்கள் சண்டைபிடித்து எதிரிக்கு அனுகூலமான சூழல்களை ஏற்படுத்தி கொடுப்பதனை தவிர்க்கவேண்டும்.

ஒபாமா: உலகையும் கடைத்தேற்ற வந்த கறுப்புச்சூரியனின் அஸ்தமனம் ஆரம்பம்

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின் நாயகன் , என்றெல்லாம் சித்திரிக்கப்பட்ட பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்ற போதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின. ஆம் நம்மால் முடியும்! என்ற அவரது தேர்தல் முழக்கத்தை ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஜபித்தது. அமெரிக்காவில் மட்டுமன்றி, இங்கேயும் சிலர் ஒபாமா காய்ச்சல் தலைக்கேறிச் சுற்றிக் கொண்டிருந்தனர். "புரட்சிப் புயல் வைகோ, ஒபாமாவைப்புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதி அதனை அவரிடமே கொடுத்து கையெழுத்து வாங்கி வந்தார். முதலாளித்துவ ஊடகவியலாளர்களும், கருணாநிதியின் வாரிசு கனிமொழி முதல் தலித்திய எழுத்தாளர்கள் வரை அனைவரும், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவு பலித்துவிட்டது எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தனர். ஆப்கானில் அமெரிக்கப் படையை திரும்ப அழைப்பார், ஈராக் போரை முடித்து அந்நாடு சுதந்திரமடையச் செய்வார், பொருளாதாரச் சீரழிவில் அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களைக் காப்பாற்றுவார் என பலரும் நம்பிக்கையூட்டினர். ஆனால், இன்று ஒரு வருடம் முடிந்த பின்பு, இந்த நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டது. இவரைப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் கேலிச்சித்திரம் போடாத நாளே கிடையாது என்கிற அளவுக்கு அவர் காரியக் கோமாளியாகிவிட்டார். ""ஆம், நம்மால் முடியும்! என்கிற இவரது மந்திரச் சொல் துவங்கி, இவர் வாயைத் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேலி செய்யப்படுகிறது. சமீபத்தில் ""வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முக்கால்வாசி அமெரிக்கர்கள் ஒபாமாவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அமெரிக்க அதிபரும் இவ்வளவு குறைவான மக்கள் ஆதரவைப் பெற்றதில்லை, ஜோர்ஜ் புஷ்ஷைத் தவிர. ஆப்கானில் செருப்படி வாங்கிக் கொண்டு புஷ் வெளியேறிய பின்னர், அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமா செய்த முதல் வேலை, ஆப்கானில் போரைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான். அது மட்டுமல்லாமல் ஆப்கானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட்டார். ஆப்கான் போரைப் பாகிஸ்தான் வரை நீடித்துச் சென்றார். ஒபாமாவின் இந்த இமாலயச் சாதனையைப் பாராட்ட நினைத்த நோபல் கமிட்டியினர் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிக் கௌரவித்தனர். ""நீங்கள் இதுவரை செய்த செயல்களுக்காக இந்த நோபல் பரிசு தரப்படவில்லை. இனிமேல் செய்யப்போவதற்காக முன்கூட்டியே உங்களுக்கு இந்தப் பரிசைத் தருகிறோம் எனக் கூறினார்கள் நோபல் கமிட்டியினர். எதிர்காலத்தில் செய்ய விருக்கும் "நல்ல செயல்களுக்காக நோபல் பரிசு பெற்ற நபர் உலக வரலாற்றிலேயே ஒபாமா ஒருவராகத்தான் இருக்கக்கூடும். இப்படி உலகைக் காக்க வந்த ஒபாமாவின் அடுத்த பணி, சொந்த நாட்டு மக்களைக் காப்பது பொருளாதாரச் சீரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒபாமா கொண்டுவந்த தீர்வு "பெயில் அவுட் பேக் கேஜ் வீடிழந்து, வேலையிழந்து, இதுவரை சம்பாதித்தது அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்ற ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒபாமா எதுவும் செய்யவில்லை. மாறாக, பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணமாக இருந்து, அதன் மூலம் பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த முதலாளிகளுக்கு ""பெயில் அவுட் பேக்கேஜ் என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுத்தார்.வேலையிழப்பைத் தடுக்கப் போகிறேன் ஒருவாரத்தில் பல இலட்சம் வேலைகளை உருவாக்கப் போகிறேன் என ஒபாமா அளித்த வாக்குறுதிகளெல்லாம் வெற்று வாய்ச்சவடால்களாகப் போய் விட்டன. வேலையிழப்பு அங்கே தொடர்கதையாகிவிட்டது. 2010 ஆம் வருடம் பிறந்தது முதல் இதுவரை 20 வங்கிகளுக்கு மேல் அமெரிக்காவில் திவாலாகிவிட்டன. மருத்துவமனைகள் முற்றிலும் தனியார்மயமாகி விட்ட அமெரிக்காவில், மருத்துவத்துக்கு ஆகும் செலவுகள் மிக மிக அதிகம். மருத்துவக் காப்பீடு இல்லாமல் போனால் சாதாரண வியாதிக்கே கூட மக்கள் தங்களது சேமிப்பு முழுவதையும் இழக்க வேண்டிவரும். அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாத மக்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகம். மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ள இவர்களைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில், மருத்துவ நலச் சீர்திருத்த மசோதா ஒன்றை ஒபாமா கொண்டு வந்தார். இது “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் போன்றதொரு மோசடித்திட்டம் என்பது வெகு சீக்கிரத்தில் அம்பலமாகி விட்டது. இவ்வாறு தொடர்ந்து சரிந்து வந்த தனது பிம்பத்தை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த ஒபாமா தேர்ந்தெடுத்த வழி நமது முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் வழி!; அது வேறொன்றும் இல்லை நாடு முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடுவது, அவர்களுக்கு அறிவுரை சொல்வது. ஆனால் ஒபாமாவின் அறிவுரைகளை ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்ட மாணவர்கள், இப்போது ஒபாமா பேசுகிறார் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையே, இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற அவர்களுக்குக் கரிசனமாகப் பேசுவதை குரானிலிருந்து வாசகங்களைப் பயன்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்து பார்த்தார். ஆனால், அவையாவும் பலிக்காமல் போய்விட்டன. இவற்றின் எதிரொலியாக அண்மையில் மாசாசூட்ஸில் நடந்த செனட்டருக்கான இடைத் தேர்தலில் ஒபாமா கட்சி படுதோல்வியடைந்தது. அதிகம் அறிமுகமில்லாத குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ள அமோக வெற்றி, இது நம்ம ஆளு! என்று ஒபாமாவை ஆதரித்து நின்றவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. அண்மையில் ஹெய்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவால் பல்லாயிரக்கணக்கான கறுப்பின மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த போது, அருகிலுள்ள அமெரிக்க ஒபாமா அரசு உடனடியாக உதவ முன்வரவில்லை. வெகுதொலைவில் உள்ள ஐஸ்லாந்து நாடு தான் உடனடியாக வந்து உதவியது.இப்போது ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் அமெரிக்கத் துருப்புகள் அந்நாட்டில் நிவாரண உதவி என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளன. ஒபாமா செய்த ஒரே நல்ல காரியம் ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல் வாதியால் ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தை மாற்றியமைத்துவிட முடியாது, அதன் தன்மையை தனிமனிதரின் ஆளுமை மயிரளவும் மாற்றி விடாது என்பதை நிரூபித்துக் காட்டியதுதான். ஒரு அரசியல் தலைவர், எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறார், அவர் எந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்று பரிசீலிக்காமல், சாதிமதஇன அடிப்படையில் பிழைப்புவாதத்துடன் ஆதரிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை ஒபாமா எதிர் மறையில் நிரூபித்துக் காட்டிவிட்டார்.கடந்த ஓராண்டில் ஒபாமாவின் நிலைப்பாடும் செயல்பாடும் புஷ் காலத்திய செயல்பாடுகளிலிருந்து வேறுபடவில்லை. அமெரிக்க அதிபராக புஷ் இருந்திருந்தால் அவர் என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதையேதான் ஒபாமாவும் செய்துள்ளார்.தலித்தியத் தலைவி மாயாவதியைப் போல், ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்து தனது முகத்திரையை வெகுவிரைவிலேயே கிழித்துக் கொண்ட கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். நன்றி:infotamil

இவர்களிடமா எமக்கான தீர்வைக் கேட்டு நிற்கிறோம்.....?

மகான்களும் மகாத்மாக்களும் வாழ்ந்த காலம் போய் இன்று கொலை வெறி பிடித்த மனித நேயம் சிறிதும் அற்றவர்களாக. இந்தியா அஸ்ஸாம் மாநிலத்தில் தம்மை தாழ்த்தப் பட்ட மக்களாக அங்கீகரிக்குமாறு இந்திய அரசை வேண்டி ஊர்வலமாக வந்த அஸ்ஸாம் ஆதிவாசி மக்களுக்கு நடந்த கதியைப் பாருங்கள். உரிமை கேட்டு வந்தவர்களை துடி துடிக்க அடித்துக் கொள்வதை இந்திய காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது. இளம் பெண்ணை நிர்வாணமாக்கி நாடு தெருவில் ஓட விடுகிறார்கள். இவர்கள் தான் இந்தியர்கள்... .இன்றைய இந்திய சமுதாயத்தை தாங்கி நிற்பவர்கள். அஹிம்சையும் அமைதிப் போராட்டமும் இவர்களிடம் எடுபடுமா...? இது தான் இந்தியாவா...? உரிமை கேட்டு வந்தால் இப்படித் தான் நடக்குமா....? இது 2007 இல் நடந்தேறிய அக்கிரமம் இதற்கான விசாரணையோ நீதியோ கிடைத்ததாக இது வரை அறிய முடியவில்லை. நடக்கும் கொடுமைகளை காண கீழுள்ள இணைப்பை அழுத்தவும்...
http://www.youtube.com/watch?v=OVReet6b2ks&feature=player_embedded

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தூதுவர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளார்- அதன் பின்னணி என்னவாக இருக்கும்....?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பணடாரநாயக்க ஐந்து நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். சந்திரிக்காவின் சொந்த ஊரான ஹொரகொல்லவில் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகைளை சந்திரிக்கா இந்த பகல்போசன விருந்துபசாரத்திற்காக அழைத்திருந்தார். இதனை ஒர் நட்பு ரீதியான சந்திப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இதில் கலந்து காண்டனர். பிற்பகல் 12.30 முதல் மாலை 5.00 மணிவரை இந்த விருந்துபசாரமும், கலந்துரையாடலும் நீடித்துள்ளது.