வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழே நீ நலமா...

நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல் முடியாது என்று முடித்துவிடக் கூடாமல் என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்... நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்? தமிழே நீ நலமா... நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் ஆனால்... பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்.... நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்

துணை ஆளுநராக தமிழ்மகன்.

அமெரிக்க இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பரக் ஒபாமா இதற்கான தீர்மானித்தை எடுத்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரையே ஜனாதிபதி ஒபாமா துணை ஆளுனராக நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியவராவார்.இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் என்ற பெருமை இவரைச் சார்ந்திருக்கும். ஜனாதிபதி ஒபாமாவின் நீண்டகால நண்பர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. கடந்த காலங்களில், ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய கிளையின் தேர்தலுக்கான கருத்தரங்கு எங்கே எப்போது?

துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கையில் உயர்வு

தென் ஆபிரிக்க காவல்துறையினரால் மக்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னைய வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த வருடத்தில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் 556 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நடைபெற்ற விவாதமொன்றின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வதில் தவறில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். உலகில் அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் தென் ஆபிரிக்காவும் முக்கிய இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், மக்களை படுகொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமாக காவல்துறையினர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தென் ஆபிரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் கிணற்றிற்குள் பெண்ணின் சடலம்

கோப்பாய் தெற்கில் கிணறு ஒன்றிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளை என்னும் இடத்தைச் சேர்ந்த கணேசபிள்ளை தவமலர் என்பவருடையது என என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இதுவரை 20 மேற்பட்ட சடலங்கள் குடா நாட்டில் கிணற்றிற்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இதற்கான காரணங்களை பொலிசாஅர் கண்டு பிடிக்கவில்லை ‘ விசாரணைகள் தொடர்கின்றன` என்றே கூறப்படுகின்றன.

ஏங்கித்தவிப்போரை ஏமாற்றுகிறார்...........

வவுனியாவில் உள்ள சர்வதேச பாடசாலையின் அதிபரான கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அரச சார்பில் போட்டியிடுகிறார் இவர் இலங்கை இராணுவத்தின் ஆட்காட்டி என்பதை அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இவரின் கணவர் நகுலேஸ்வரன் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார் இத்தேர்தலில் கீதாஞ்சலி போட்டியிட கணவர் முற்றிலும் மறுத்ததினால் இருவரிடையேயும் பெருந்தகராறு ஏற்ப்பட்டது. இதனால் பதவி மோகம் பிடித்த கீதாஞ்சலி இராணுவத்திடையே உள்ள தனது செல்வாக்கை பயன் படுத்தி நகுலேஸ்வரனை கடத்தியுள்ளார் என்று பலராலும் பேசப்படுகிறது. எமது தமிழ்ச் சமூகப் பெண்கள் கீகாஞ்சலிக்கு ஏற்ப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்தால் உலகில் உள்ள எல்லாத் தெய்வங்களையும் வேண்டி கோயில் கோயிலாக அலைந்து திரிவது வழமை ஆனால் கீதாஞ்சலி முற்றிலும் மாறாக கணவர் காணாமல் போன அடுத்த வாரமே அரைகுறை ஆடைகளுடன் கொழும்புக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருவதாக பாடசாலை ஆசிரியர்கள் வருத்தம் தெருவிக்கின்றனர். தற்போது கீதாஞ்சலி புதுக்கதை ஒன்றை சொல்லி வருகிறார் அதாவது காணாமல் போன தனது கணவனை கண்டுபிடிக்கவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் வவுனியாவில் ஏற்கனவே காணாமல் போயுள்ளோரின் உறவுகளை அளைத்து விபரம் சேகரிப்பதோடு தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுள்ளார். இப்படி கபட நாடகம் ஆடி அப்பாவி மக்களை ஏமாற்றி தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார் இப்படியாக மக்களை ஏமாற்றும் துரோகிகளை புலிகள் என்றைக்குமே விட்டுவைத்ததில்லை தற்காலிகமாகவே புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை கீதாஞ்சலி போன்றோர் மறந்துபோய் விட்டனர். மீண்டும் புலிகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது கீதாஞ்சலியின் பெயரும் அவர்களின் பட்டியலில் உள்ளதா? ஏன்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.