வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழே நீ நலமா...

நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல் முடியாது என்று முடித்துவிடக் கூடாமல் என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்... நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்? தமிழே நீ நலமா... நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் ஆனால்... பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்.... நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக