சனி, 27 மார்ச், 2010

கிளிநொச்சியில் பாரிய படைமுகாம்களுக்கு மத்தியில் புதிய சிறைச்சாலை ஏன்?

இலங்கை கிளிநொச்சியில் புதிய சிறைச்சாலை அமைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சிறைச்சாலை மீண்டும் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிளிநொச்சி சிறைச்சாலையை விடுதலைப்புலிகள், முகாமாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது இலங்கையில் நடந்த போர் காரணமாக சிறைச்சாலை இருந்த இடத்தில் சட்ட திட்டங்களை அமுல் செய்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாகவும், கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சிறைச்சாலை இலங்கையின் இருபதாவது விளக்க மறியல் சிறைச்சாலை என்றும் கூறப்படுகிறது. இச்சிறைச்சாலை கேள்வியற்ற கைது நடவடிக்கைகளுக்கும் சித்ரவதை முகாமாகவும் தமிழர்களுக்கெதிராக பயன்படுத்தப் படலாம் என ஒருபுறம் செய்தி கசிந்து வருகிறது. இது தமிழர்களால் மேலும் ஒரு போராட்டம் முன்நெடுக்கப்ப்படுமிடத்து போராட்டத்தை வெளியில் தெரியாதவாறு அடக்கி ஒடுக்க இலங்கை அரசிற்கு இலகுவாக அமையும் என்றே தமிழர்களால் நோக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக