இனப்பிரச்சினைக்குப் பொருத்த மான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் வகையில் இணைந்து செயல்பட தமிழ்க் கட்சிகள் அனைத் தும் இணங்கி உள்ளன. பொதுத் தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டும் வகையில் அடிப்படைக் கொள்கை களில் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆரா´வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப் பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 11 டிசம்பர், 2010
ராஜபக்ச சகோதரர்கள், இராணுவ அதிகாரிகள் கதை முடிவுறும் நிலை.....
ஒரு நெடுங்கால ஆரசியல் பிரச்சனைக்குப் போர் நடவடிக்கை மூலம் தீர்வு கண்டதற்காகப் பாராட்டப்பட்ட நாடு தானே பிரச்சனைக்குரிய நாடாக இருப்பது சமகால உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. மே 2009 ற்குப் பிந்திய சிறிது காலம் சிறிலங்கா புகழின் உச்சிக் கொப்பில் இடம் பிடித்தது.
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது
போர்க்குற்ற ஓளிப்படத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் அடையாளம் காணப்பட்டார்.
யாழ்ப்பாணம் . உரும்பிராயை சொந்த இடமாக கொண்ட தங்கராசா - இராசகுலசிங்கம் (சிவாஸ்) 42 வயதையுடைய குடும்பஸ்தர் ஆவார் .இவரின் தாயாரான பக்கியம் அக்கா என்பவர் இந்திய இராணுவ காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் என்பதும் , இவரது இரு சகோதரிகள் மண்ணிற்காய் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதும் அறிய வந்துள்ளது.
கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன ?ஜனாதிபதி ஒக்ஸ்பேட்டில் பேசியிருந்தால் தீர்வு வந்திருக்குமாம் !
லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரையில் இலங்கைக் கான அரசியல் தீர்வு குறித்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறவிருந்தேன். ஆனால் உள்ளூர் சக்திகள் சர்வதேச சக்திகளுடன் இணைந்து அதைத் தடுத்துவிட்டன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான
விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் ....
ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிய விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஆவணங்கள் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் அதி நவீன பாதாள அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)