யாழ்ப்பாணம் . உரும்பிராயை சொந்த இடமாக கொண்ட தங்கராசா - இராசகுலசிங்கம் (சிவாஸ்) 42 வயதையுடைய குடும்பஸ்தர் ஆவார் .இவரின் தாயாரான பக்கியம் அக்கா என்பவர் இந்திய இராணுவ காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் என்பதும் , இவரது இரு சகோதரிகள் மண்ணிற்காய் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதும் அறிய வந்துள்ளது.
மேலும் இவர் வள்ளிபுனம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும்போது இயக்க நிர்வாகம் ஒன்றில் நிர்வாக பணியொன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் போது கஜன் / கதிர் என அழைக்கபட்டிருந்தார். போர் உக்கிரமடைந்த போது தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடனும் இடம்பெயர்ந்து இராணுவத்தின் எறிகணை தாக்குதல் ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் 18 /05 /2009 அன்று இராணுவத்தால் கைது செய்ய பட்டதாக உறவினர்கள் உறுதி படுத்தியுள்ளனர்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக