சனி, 11 டிசம்பர், 2010

போர்க்குற்ற ஓளிப்படத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் அடையாளம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் . உரும்பிராயை சொந்த இடமாக கொண்ட தங்கராசா - இராசகுலசிங்கம் (சிவாஸ்) 42 வயதையுடைய குடும்பஸ்தர் ஆவார் .இவரின் தாயாரான பக்கியம் அக்கா என்பவர் இந்திய இராணுவ காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் என்பதும் , இவரது இரு சகோதரிகள் மண்ணிற்காய் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதும் அறிய வந்துள்ளது.

மேலும்  இவர் வள்ளிபுனம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும்போது இயக்க நிர்வாகம் ஒன்றில் நிர்வாக பணியொன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் போது கஜன் / கதிர்  என அழைக்கபட்டிருந்தார். போர் உக்கிரமடைந்த போது தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடனும் இடம்பெயர்ந்து இராணுவத்தின் எறிகணை தாக்குதல் ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் 18 /05 /2009 அன்று இராணுவத்தால் கைது செய்ய பட்டதாக உறவினர்கள் உறுதி படுத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக