இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 10 ஜூன், 2010
ராஜபக்சவுடனான சந்திப்பு நம்பிக்கையை தருகிறது: கனிமொழி, திருப்தி அளிக்கவில்லை: டி.ஆர்.பாலு
இலங்கை அதிபர் ராஜபக்சேவை, டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக, காங்கிரஸ்,. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.
லெப்.கேணல்.சாந்தகுமாரி/ஜெயசுதா-சூசையப்பு மொறாயஸ் ரமணி மன்னார்
எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.
புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.
சிறிலங்கா அரச படைகள் புரிந்த போர்க் குற்றங்கள் ....!?
“எந்தவொரு அரசாங்கமோ, அல்லது நீதி நிர்வாகக் கட்டமைப்போ குற்றவாளிகளை சட்டத்திலிருந்து காப்பாற்ற முடியாது. அவர்கள் ஒரு நாட்டின் உயர் இராணுவ அதிகாரிகளாக, அல்லது அந்நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்களது உத்தரவினை நிறைவேற்றும் அரச அதிகாரிகளாக இருப்பினும் அவர்கள் புரிந்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்”.
இவ்வாறு குறிப்பிட்டிருப்பவர் வேறு யாருமல்ல,
மஹிந்த இணக்கம்?!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம்.
தமிழீழம் என்று சொல்லப் பழகு -கண்மணி
தமிழ்நாட்டிலே ஒட்டுமொத்த தமிழர்களும் எழுச்சியோடு தமது உணர்வுகளை பதிவு செய்து உலக போர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இன அழிப்பு கொலைகாரன் மகிந்தாவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு, மகிந்தா சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டார். தமிழின அழிப்புக்குத் துணைப்போன இந்தியாவின் அரசத் தலைவர்கள் மகிந்தாவோடு குலாவினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)