வியாழன், 10 ஜூன், 2010

ராஜபக்சவுடனான சந்திப்பு நம்பிக்கையை தருகிறது: கனிமொழி, திருப்தி அளிக்கவில்லை: டி.ஆர்.பாலு


இலங்கை அதிபர் ராஜபக்சேவை, டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக, காங்கிரஸ்,. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.



அப்போது முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியப்படி, முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவது, அதிகாரப் பகிர்வு, மறுசீரமைப்புக்கான உதவிகளை விரைவுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக மாநிலங்கவை உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளனர்.


திமுக மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,


போர் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. தமிழர்கள் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை எடுத்துச் சொன்னோம். முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். இது ஒரு சின்ன நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது என்றார்.


இச்சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், ராஜபக்சவுடனான சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே. ராஜபக்சவுடனான சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக