புதன், 24 நவம்பர், 2010

இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ

வந்தெம் மண்தொட்டு வளைப்போன் எவனெனினும்
கந்தகக் கணைகள் கருக்குமெனக் கூறி நடுநடுங்க வைத்தவரே
உங்களுக்கு எம் தேசம் என்றும் தலைவணங்கும்
எமையடக்கும் எதிரியவன் கதைமுடித்து
எய்யும் கணைகளுக்கே இலக்காகி பணிமுடித்தீர்
கொடியவனை வீழ்த்த வெடிசுமந்து சென்றாலும்
இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ. நீங்கள்

ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு.............

விண்ணிலம் பூத்த விரிகடளாய்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய  உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்