வந்தெம் மண்தொட்டு வளைப்போன் எவனெனினும்
கந்தகக் கணைகள் கருக்குமெனக் கூறி நடுநடுங்க வைத்தவரே
உங்களுக்கு எம் தேசம் என்றும் தலைவணங்கும்
எமையடக்கும் எதிரியவன் கதைமுடித்து
எய்யும் கணைகளுக்கே இலக்காகி பணிமுடித்தீர்
கொடியவனை வீழ்த்த வெடிசுமந்து சென்றாலும்
இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ. நீங்கள்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 24 நவம்பர், 2010
ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு.............
விண்ணிலம் பூத்த விரிகடளாய்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)