புதன், 10 நவம்பர், 2010

கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது

எங்களுக்காகத் தங்களைக் களப்பலியாக்கிய மாவீரர் தினத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும் நிச்சயம் எம்மவர்களாக இருக்க முடியாது. மாவீரர்களது தியாகத்தைத் தமக்கான அடையாளப்படுத்தலுக்கும், தமது சுய லாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கும் எவரும் தமிழனாகப் பிறந்திருக்க முடியாது..காலம் உங்களுக்கு வழங்கிய கடமைகளை நேர்மையான பாதையில் நின்ற...ு நிறைவேற்றுங்கள். மாவீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்து உயர்த்திப் பிடித்த தமிழீழ இலட்சிய நெருப்பை நீங்களும் கைகளில் ஏந்துங்கள். அவர்கள் கல்லறைகளில் உங்கள் கண்ணீரையும் காணிக்கையாக்குங்கள். மாவீரர் நாளில் ஆயிரம் ஆயிரமாகத் திரளும் தமிழ் மக்களுடன் நீங்களும் விளக்கேற்றி சத்தியம் செய்யுங்கள். ‘தமிழீழ இலட்சியம் நோக்கிய பாதையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகஎழுவோம்’

ஒவ்வொரு தமிழனின் கடின உழைப்பில்தான் தங்கியுள்ளது ஈழத்தமிழரின் கையில் தமிழீழம் கிடைப்பது.!!!!

* மே 18க்கு முன் தழிழீழ விடுதலைப்போராட்டம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரத்தோடும் விவேகத்தோடும் களத்தில் நின்று போரடியது. ஆனால் மே18க்குப் பிறகு.... * தமிழீழ மண்ணில் ஈழத்தமிழர் படும் துயரத்தில் பங்கு கொள்ள புலம்பெயர் உறவுகள் சிலர் துடித்தநிலையில் தலைமைத்துவத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டார்கள், சில பேராசை பேர்வழிகள்.....


* பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள்....