வெள்ளி, 12 மார்ச், 2010

நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது. குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரைப் பற்றி பகிரங்கமாக எதுவும் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அத்தகவல் தெரிவிக்கின்றது (அதாவது எஸ்.எம்.எஸ் அணியினர் என அழைக்கப்படும் அம் மூவரைப்பற்றிய உண்மைகளை எவரிடமும் கூற வேண்டாம் என கேட்டுள்ளனர்). இந்த நடவடிக்கையானது தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி நிலையே தெட்டத்தெளிவாக விளக்கி நிற்பதாக குறித்த தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஈழத்தில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முற்றாக நிராகரித்து வருவதாகவும், வடபகுதியிலும், திருமலையிலும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முண்ணணிக்கு ஈழத்தமிழ் மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தோல்வி அடைந்து விடுவோம் எனும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தாய்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக சச்சின நியமனம்

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (யு.என்.இ.பி.) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் சச்சின். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய சாதனையும் படைத்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினை தனது திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக யுஎன்இபி நியமித்துள்ளது. உலகளாவிய அளவில் அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்களைப் பிரபலப்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கவும் யுஎன்இபி திட்டமிட்டுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சச்சின் கூறுகையில், இதுவரை உலகம் முழுவதும் நான் விளையாடியுள்ளேன். எனது கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் அனுபவித்து வந்தேன். இப்போது இந்த உலகுக்காக எனது பங்கை செலவிடும் நேரம் வந்துள்ளது. உலகைக் காக்கும் முயற்சிகளில் அனைவருக்கும் பங்குண்டு. இது நமது வீடு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. ஆனால் அந்த சவாலை ஏற்க நான் தயாராகி விட்டேன். யுஎன்இபியுடனும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்தால் பல அற்புதங்களைப் படைக்க முடியும் என்றார். ஐ.நாவுடன் சச்சின் இணைவது இது முதல் முறையல்ல. முன்பு ஐ.நா. குழந்தைகள் நிதியத்துடன் இணைந்து குழந்தைகள் சுகாதாரத் திட்ட பிரசாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டவர் சச்சின். யுஎன்இபியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் இன்றே தனது பணியைத் தொடங்குகிறார். இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவின்போது அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதை ரசிகர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.

பாரிய படைத்தளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளத்தினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுவருகின்ற இக் கூட்டுப் படைத்தளத்தின் உள்ளேயே மாவட்டத்தின் தரைப்படைத் தலைமையகமும் அமைக்கப்பட்டுவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்பு பிரிவினால் அமைக்கப்பட்ட தேக்கந் தோப்புப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கான சிறப்பு சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேக்கம் தோட்டம் 200 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு நோக்கிய நந்திக்கடலை அண்மித்த நிலப்பரப்பில் உலங்கு வானூர்தி இறங்கு தளமும், தரைப்படையினருக்கான பயிற்சி முகாமும் அமைக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பிட்ட ஐந்து கிராமங்களினையும் உள்ளடக்கிய ஆக்கிரமிப்பால் 300 குடும்பங்களைச் சேர்ந்த 2000 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடம் உட்பட்ட தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் அபாய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை குறிப்பிட்ட பகுதிகளை அண்மித்த பகுதிகளில் பாரிய வயல் வெளி காணப்படுகின்றமையால் புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை ஆகிய அயற்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு அண்மித்த பகுதிகளிலேயே அச்சலாவயல், கள்ளியடி போன்ற வயற்பரப்புக்கள் காணப்படுகின்றன. இதே போன்று கொண்டை மடுப் பிரதேசம் வன்னியில் மிகத் தொன்மை வாய்ந்த விவசாய நிலம் ஆகும். இதனைவிடவும் சீனியா மோட்டைக் குளத்திற்கு மேற்குப் புறமாக உள்ள வயல்வெளியில் வற்றாப்பளையைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான நூறு ஏக்கர் வரையான வயல்ப்பரப்புக்கள் காணப்படுகின்றன. நந்திக்கடலை சமாந்தரமாகக் கொண்டதாக இக் கூட்டுப்படை முகாம் அமைக்கப்பட்டு வருகின்றமையால் நந்திக்கடலை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற மீனவக்குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ளனர். நந்திக்கடலுக்கு மறுபக்கம் முல்லைத்தீவு அதன் அருகான வட்டுவாகல், முள்ளிவாய்க்கால்கள், இரட்டை வாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பின் காட்டந்தோனியார் கோவிலை உள்ளடக்கிய மல்லிகைத்தீவுக் கிராமமும் அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளாலும் மீன்பிடித் தொழில் வன்னி மீனவர்களால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் பாரிய இறால் உற்பத்தி குறிப்பிட்ட நந்திக்கடல் பரப்பிலேயே அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை தெரிந்ததே. இதேபோன்று படையினரின் புதிய ஆக்கிரமிப்பு பாதுகாப்பு வலயப்பகுதி வன்னியின் பெருமளவான கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் விளங்கிவருகின்றமை மிக முக்கிய விடயமாகும். ஆயிரக்கணக்கான எருமைகள், மற்றும் பசுக்கள் குறிப்பிட்ட பகுதிகளிலேயே பட்டிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றமை இன்னொரு முக்கிய விடயமாகும். இந்தப் படை ஆக்கிரமிப்பு முப்படை கூட்டுப்படைத்தளம் காரணமாக விவாசயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்பன பாரிய நெருக்கடிக்கு உட்படுவதற்கான அபாய சூழல் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இந்தக் கிராமங்களை உள்ளடக்கிய நான்கு வணக்கத்தலங்கள், பாடசாலை ஒன்று, முன்பள்ளிகள் நான்கு உட்பட்டவையும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலப்பகுதிகள் அனைத்து தொழில்களுக்கும் பொருத்தமானதாகையால் அந்தப் பகுதி மக்கள் வேறு இடங்களில் தமக்கான சொத்துக்களையோ நிலங்களையோ தேடிக்கொள்ள முயலவில்லை. குறிப்பிட்ட பகுதிகளிலேயே காலங்காலமாக வாழ்ந்து நில ஆக்கிரமிப்புப் போரின் தொடராக இடம்பெயர்ந்து தமது உறவுகளையும் உடைமைகளையும் தொலைத்து தற்போது முட்கம்பி முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பையும் வற்றாப்பளையினையும் இணைக்கும் பிரதான வீதி முல்லைத்தீவு ஊடாகவே உள்ளது. ஆனாலும் முல்லைத்தீவு ஊடான பயணத்தினை விடவும் மிகக் குறைந்த தூரத்தில் கேப்பாபுலவு ஊடான வீதி மக்கள் பயன்பாட்டில் இதுவரையில் இருந்து வந்தது. வற்றாப்பளை அம்மன் கோவில் பெருவிழாவில் கலந்துகொள்வதற்கு மக்கள் குறிப்பிட்ட வீதியினையே பயன்படுத்தி வந்திருந்தனர். இனிவருங்காலங்களில் அந்தக் கிராமங்கள் ஊடான போக்குவரத்து கனவில் தான் சாத்தியப்படும் என முதியவர் ஒருவர் கவலை வெளியிட்டார்.

அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும்

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 1994ஆம் ஆண்டுத் தேர்தலிலும், அதற்குப் பின்னரும் சிதறிப்போனதை அவதானித்த மாமனிதர் சிவராம் அவர்களது ஆதங்கமும், சிந்தனாவோட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதியப்படாத கட்சியை கூட்டுருவாக்க வழி கோலியது. மாமனிதரது இந்த முயற்சிக்கு தற்பொழுது சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தென் தமிழீழ ஊடகர்கள் சிலரின் பங்களிப்பும் இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றிய புத்திஜீவிகளுக்கே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழத்தின் அதியுயர் விருதாகிய “மாமனிதர்” விருதினை வழங்கி கெளரவித்து வந்திருக்கின்றார். அந்த வகையில் மாமனிதர் சிவராம் அவர்கள் தமிழீழத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க மட்டுமன்றி அரசியல், படைத்துறை, ஊடகத்துறை என அவர் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய பணியை விடுதலைப் புலிகளின் மதிப்பளிப்பு உணர்த்தி நிற்கின்றது. தமிழீழத்திற்கு வெளியே சிங்கள தேசத்தின் களத்தில் எமது அரசியல் தளத்தை வைத்திருக்கவும், பன்னாட்டு சமூகத்திற்கு தமிழ் மக்களின் வேணவாவை எடுத்துரைக்கவும் விடுதலைப் புலிகளின் ஆசியுடன் மாமனிதர் சிவராம் வகுத்த வியூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு மிதவாத – ஆயுதப் பிரிவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது நான்கு பிரிவுகளாக உடைந்து நிற்கின்றது. இவற்றில் மகிந்த ஆதரவுக் போக்கை எடுத்துள்ள சிவநாதன் கிசோர், கனகரத்தினம், செல்வி தங்கேஸ்வரி போன்றவர்களையும், இடதுசாரி விடுதலை முன்னணி என்ற புதிய பெயர் பெற்றுள்ள கலாநிதி விக்கிரமபாகு தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணியுடன் இணைந்துள்ள ரெலோ அமைப்பின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்ற தரப்புக்களைவிட மற்றைய இரண்டு தரப்புக்கள் இடையே நேரடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை ஆராய்வதைவிட, இதன் பின்னணி என்ன என ஆராய்வது தமிழ் மக்களைக் குழப்பும் விடயத்திற்கு சிலவேளை விடை கொடுக்கலாம். ஊடக ஆய்வுகளும், மன ஊடறுப்புக்களும் ஒரு முக்கிய காலகட்டத்தில், அதுவும் தமிழ் மக்கள் தமது படைத்துறைப் பலத்தை முற்றாக இழந்து, அரசியல் தலைமையைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பகரமான நிலை மிகவும் கவலைக்குரியதே. அதுவும் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு, வழி நடத்தப்பட்ட ஒரு அமைப்பின் அரசியல் தளம் உடைந்து நிற்பது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இது புலம்பெயர்ந்த மக்களை மிகவும் மன ஆதங்கத்திற்கு உள்ளாக்கி இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்திற்கு மாமனிதருடன் இணைந்து பணியாற்றிய சில ஊடகர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் வெளிப்பாடே தமிழ் மக்களின் தலைமையினாலும், தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை பெயர் சொல்லி விமர்சிக்கும் அளவிற்கு அவர்களது ஆய்வுப் பத்திகள் விரிந்து நிற்கின்றன. இவ்வாறான ஆய்வுகள் தமிழ் மக்களின் மனங்களை ஊடறுத்துக் கூறுபோடும் நிலைக்குக் கொண்டு செல்லப்போகின்றது அல்லது கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது என்ற விபரீதத்தை இந்த ஆய்வுப் பத்திகள் மூலம் உணர முடிகின்றது. அண்மைய ஆய்வுகளும், அதன் உள்ளடக்கங்களும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக உழைக்கும் புலம்பெயர்ந்துள்ள ஆய்வாளர்கள் சிலர் வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினால் ஏற்படப்போகும் சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது. 2. தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும். 3. தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது. 1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது இது உண்மைதான். ஆனால் இது பற்றி முன்வைக்கப்படும் ஆய்வுப் பத்திகளில் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டி மறு தரப்பு நியாயங்களை மறுதலிப்பதும், மறுதலிக்க வைப்பதும், அல்லது ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து உரிய தரப்பை, அதன் தலைமையைக் கண்டிக்க மறுப்பதும் இந்த ஆய்வுகளின் நேர்மைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பி நிற்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்து, இந்தியாவின் வகிபாகத்தை இல்லாதொழிக்க சிங்கள பேரினவாதம் மேற்கொள்ளும் முயற்சிக்கு “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” துணை போவதாகக் குற்றம் சுமத்தும் ஆய்வாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியாவின் கைப்பொம்மைகளாக மாறுவது பற்றி எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை. நேரடி எதிரியைவிட கூட இருந்து குழி பறிப்பதே மிகப்பெரும் துரோகமாகும். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமன்றி அதன் பின்னரும் இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு இழைத்துவரும் துரோகத்தனங்கள் பற்றி இந்த ஆய்வுகள் அலசவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனப்போராடிய தமிழ் மக்களின் தலைமையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று விரும்பிய இந்தியா, அதே கொள்கையுடன் தற்பொழுதும் இருப்பதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் ஆதரிக்க முற்படுகின்றது என்பது பற்றி இந்த பத்தி ஆய்வுகள் கேள்வி எழுப்ப மறுக்கின்றன. இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து செல்வதால், சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்புவதாக வாதம் முன்வைத்தால், சீன ஆதிக்கம் இப்பொழுது தீடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதையும், சீன ஆதிக்கம் மட்டுமன்றி அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட விடுதலைப் புலிகளை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை என்ற சதாராண கேள்வி எழுவதை தடுக்க முடியாதே? தமிழர்கள் பாரிய இனவழிப்பை எதிர்நோக்கியிருந்தபோது, விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க மறுத்த இந்தியத் தலைமைகள் (ஒரு சில சந்திப்புக்கள் பலமுனைப் பிரயத்தனத்தின் பின்னர் நடைபெற்றது), இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதை யாரும் இதுவரை விளக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் முள்ளிலாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம், ஏன் அதனைச் செய்யவில்லை? வடக்கு கிழக்கு இணைப்பையே தக்க வைக்க முடியாத இந்தியா தமிழர் தாயகத்திற்கு எதனைச் செய்யப்போகின்றது. இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன்) இணங்கியிருந்தால், அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தம்மை தெரிவு செய்த தமிழ் மக்களிற்கும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கும் அது பற்றி ஏன் தெளிவுபடுத்தவில்லை என்பது பற்றி எந்தவொரு ஆய்வுப் பத்தியும் ஏன் கேள்வி எழுப்பவில்லை. முள்ளிவாய்க்கால் இரத்தநெடி மாற முன்னர், இந்தியாவின் உத்தரவுக்கு அமைய கொழும்பிலுள்ள சில சட்டவாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் பிரதியை கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு.சம்பந்தன் அவர்கள் வழங்காததன் காரணம் என்ன எனவும், அதன் தலைப்பு தமிழர்களின் வேணவாவையும், உள்ளட சரத்துக்களோ அதனை மறுதலிக்கும் மாற்றுப்போக்கையும் கொண்டுள்ள மர்மம் பற்றி நாம் ஏன் கேள்வி எழுப்ப மறந்தோம். தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் அணி, அதனை எப்படிப் பெறப்போகின்றது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், அதே கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுவதாகக்கூறும் மறு தரரப்பிடமும் அதே கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்பட்ட திரு.சம்பந்தன் அவர்கள் லண்டன் சென்றிருந்தபோதுகூட, அங்குள்ள தமிழ் மக்களை உள்ளடக்கிய முக்கிய மிகப்பெரும் அமைப்புக்களைச் சந்திக்காது, தனக்கு நெருங்கியவர்களுடன் நடத்திவிட்டுச் சென்ற சந்திப்புக்கள் அவர் மீது ஏற்படுத்திய சந்தேகத்திற்கு இப்பொழுது விடைபகிர ஆரம்பித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவை முற்றாக நிராகரிக்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் அதற்காக முற்றாக அடிபணிந்து நின்றுவிடவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தமிழ் மக்களின் படைத்துறைப் பலம் இழக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அடிபணிந்து செல்லும் எந்தவொரு நிர்க்கதி நிலையும் தமிழர்களுக்கு ஏற்படவில்லை. அப்படி இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு உதவ முன்வந்தால் அது மகிழ்ச்சியே. ஆனால் அதனை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறீலங்கா மீது தடைகளை இட்டு, போர்க்குற்ற விசாரணை பற்றி வலியுறுத்திவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியா இது பற்றிக்கூட வாய் திறக்கவில்லையே. சிங்களத்தைக் கட்டப்படுத்த தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்தியாவின் கைங்கரியத்திற்கு விடுதலைப் புலிகள் முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அந்த நிலை மீண்டும் தோன்ற நாம் அனுமதிக்கலாமா? அதனால் எமக்கு ஏற்படப்போகும் நன்மைகள் என்ன? மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து, சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்த இந்தியா மறைமுகமாகச் செயற்பட்டது என சிங்கள அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியதும், அதற்கு இந்தியத் தரப்பு வெளியிட்ட மறுப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் அனைவரும் செய்தியாகப் படித்திருக்கின்றோம். இந்தியாவின் மறைமுக நடவடிக்கையில் முக்கியமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரத்து களமிறங்கியதைக் குறிப்பிடலாம். அப்பயென்றால் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, த.தே.கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இயங்கியது என்பதை நாம் ஏன் உணரவில்லை. த.தே.கூட்டமைப்பின் தலைமையிலுள்ள மூவரது ஏதேச்சதிகாரப்போக்கை மாற்றியமைக்கும் மறைமுக பன்முக முயற்சிகள் தோல்வி கண்டதே காங்கிரசின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது எனக்கூறப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றியதும் கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பகத்தன்மையைப் பாரிய கேள்விக்கு இட்டுச்சென்றது. காங்கிரசின் வெளியேற்றத்திற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் கண்டனம் வெளியிடும் நாம், கூட்டமைப்பில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக்குரல் கொடுக்கவோ, அல்லது இணைந்து, இணைத்துச் செயற்படுங்கள் என சம்பந்தன் ஐயாவுக்கு அறிவுரை சொல்லவோ முற்படவில்லை. யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தாயக – தேசிய எல்லை இந்த இரண்டு மாவட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? எனக் கேள்வி எழுப்பும் நாம், மறு புறத்தில் அம்பாறையில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தலைமையிலான (வடக்கு கிழக்கு தேர்தல் பொறுப்பு) இடதுசாரி விடுதலை முன்னணி மீதும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உடைக்கப்படுகின்றது என விமர்சனக் கண்டனம் முன்வைப்பதன் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றோம். திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்கவே, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தன் தோற்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் அடிப்படையில் தேசிய பட்டியல் இடம் கிடைத்தால் (2004இல் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன) அதனை சம்பந்தனே பற்றிக்கொள்வார் என்பது உண்மையே. ஆனால் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்போதே அடிக்கடி வன்னிக்கு அழைத்து ஊசி அடிக்க வேண்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்கள் மெளனமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தன்னிச்சைப்படி, அல்லது இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க ஆடுவதைத் தடுக்க இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் வாதமாக முன் வைக்கலாம் அல்லவா? வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை தொகுதிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடாது தவிர்த்ததற்கு முக்கிய காரணி, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. அதனையே இப்பொழுது பிரதேச வாதமாகக் கிளப்பி நாம் ஆய்வுப் பத்திகளை எழுதுவதால் புண்பட்டுள்ள தென்தமிழீழ மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களைத் தோற்றுவிக்கும். “பிரதேசவாதம் பேசும் பிள்ளையானையும், கஜேந்திரனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக உருவாக்கி அறிக்கை வெளியிடும் ஊடகங்கள், தாம் மறைமுகமாகப் பிரதேச வாதத்தை தூண்டுகின்றோம் என்பதை ஏன் உணரவில்லை. ஆக கருணா, பிள்ளையானுக்கும், இந்த ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம். புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ஒருசில இணைய ஊடகங்களின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக. மறு தரப்பு மீது கண்மூடித்தனமாக மண்வாரித் தூவுவது தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்றோம்? எனக்கூறும் இந்த ஊடகங்களின் நிலைப்பாடு பற்றி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் அல்லவா? திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான நிலையில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஆழமான பிழவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், அதற்கு நாம் துணைபோக முடியாது என்பதையும் தமிழ் மக்களை வழிநடத்த முற்படும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஊடகங்களில் ஆய்வுகளை எழுதி நேரத்தை வீணாக்கி மக்களைக் குழப்பும் நாம், தமிழ் மக்களின் பிளவுபட இருந்த தலைமைகளை ஒன்றிணைக்க எம்மால் முடிந்ததை ஏதாவது செய்தோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். சரி… தவிர்க்க முடியாமல் பிளவு ஏற்பட்டு விட்டது, இது பற்றி எழுதிக் குழப்புவதை விட்டுவிட்டு, இந்தத் தலைமைகளை ஒருங்கிணைக்க இப்போதாவது ஏதாவது செய்தோமா? த.தே.கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அது பற்றி உரியவர்களிடம் எடுத்துக்கூறி மறைமுக ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதே சிறந்த ஊடகருக்கு எடுத்துக்காட்டு. த.தே.கூட்டமைப்பின் உருவாக்கம் மட்டுமன்றி, வேறு எத்தனையோ முக்கிய மறைமுகப் பணிகளை மாமனிதர் சிவராம் அவர்கள் மேற்கொண்ட போதிலும், அவர் அதனை சதாரண மக்களிற்கு தெரிவித்து, விமர்சனங்களை முன்வைக்க முற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில் அரசியல் வார்த்தை ஜாலங்களைப் புரிந்துகொள்ள முடியாத சாதாரண மக்கள் பிரதேசவாதம் என்ற சந்தர்ப்பவாதத்திற்குள் கட்டுப்பட்டு, அவர்களின் விடுதலை உணர்வு சிதறடிக்கப்படும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். பிரதிநிதித்துவம் எவ்வளது முக்கியமோ, அதனைவிட மக்களின் மனங்களும், விடுதலை உணர்வும் அதிமுக்கியம். அவற்றில் தளர்ச்சியோ, பாதிப்போ ஏற்பட நாம் துணைபோகக்கூடாது. 2.தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தைத் தவிர வேறு எந்தவொரு காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை என்பதே உண்மை. 1963ஆம் ஆண்டு திருகோணமலையில் 36 வீதமாக இருந்த தமிழ் மக்கள் 2007ஆம் ஆண்டில் 28.6 வீதமாக வீழ்ச்சியடைந்தனர். இதேபோன்ற நிலை வன்னியிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் காணப்படுகின்றது. போர் நிறுத்தம் என்ற கயிற்றினால் விடுதலைப் புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தபோது ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், திருகோணமலை நகரத்தில் நிறுவப்பட்ட பெளத்த கோவிலையும், மட்டக்களப்பில் வீதிகளுக்கு சிங்களப் பெயர் இடுவதையும், ஏன் வன்னியில் முளைத்த பெளத்த கோவில்களையும் நாடாளுமன்றில் நான்காவது பெரும் பலத்துடன் இருந்த த.தே.கூட்டமைப்பினால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது. இதனால் திருகோணமலையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது சரியென்பது எனது வாதமல்ல. சம்பந்தன் பதவிக்கு வராதுபோனால் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என முன்வைக்கப்படும் ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே எனது கேள்வி? அப்படியென்றால் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு.சம்பந்தன் அவர்கள் நீண்ட காலம் இருக்கும் நிலையில், தமிழ் மக்களின் விகிதார வீழ்ச்சியும், சிங்களக் குடியேற்றமும், முஸ்லீம் மக்களின் பெருக்கமும் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது நியாயம் அல்லவா? ஆக மொத்தத்தில் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் தலைமையாக இப்பொழுது செயற்படக் கூடியவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே, சிங்கள தேசத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி பன்னாட்டு சமூகத்திற்காவது எடுத்துக்கூறி, தமிழ் மக்களிற்கான ஆதரவைத் திரட்ட வழி வகுக்குமே தவிர, விமர்சனங்களை முன்வைத்து தலைமைகளைப் பிரிப்பதால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. 3.தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தின், அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தின் அபிவிருத்தி, மற்றும் வேலை வாய்ப்பு, உயர்கல்வி போன்றன பாதிக்கப்படப்போவதாக முன்வைக்கப்படும் விமர்சங்களில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒரு பிரதேசத்திற்கான ஆறு கோடிகள் இல்லாமல் போகும் என நாம் கவலைப்படுகின்றோம். தமிழர்களின் தன்மானத்திற்காக உயிர் கொடுத்துப் போராடிய எம்மினம், அதிலும் வீரவீச்சுடன் போராடிய பல அரிய போராளிகளைத்தந்த தென் தமிழீழத்திற்கான அபிவிருத்தி தடைப்படும் என நாம் பேச முற்படுவது, அந்தப் போராளிகளின் தியாயங்களை அவமதிப்பது போன்ற செயற்பாடாகும். தமிழர்கள் தற்பொழுதுள்ள நிலையில் சில அணுசரிப்புக்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டு சிங்களத்தின் உதவியைப் பெற வேண்டும் என முன்வைக்கப்படும் வாதம் எவ்வளது தூரம் சரியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதால், அபிவிருத்தி நடவடிக்கைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என எழுந்தமானமாகக் கூறுவதன் ஊடக, மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் போன்றவர்கள் கூட்டமைப்பின் பிளவினால் ஆசனங்களைப் பெறுவதையும் மறைமுகமாக ஆமோதிக்கும் நாம், தென் தமிழீழத்தில் இழக்கப்படும் பிரதிநிதித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் அருகதையை இழந்து நிற்கின்றோம். கருணாவும், பிள்ளையானும் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் துணைப்படைக் குழுக்களை இயக்கி, அவர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியபோது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் எமது மண்ணில் மேற்கொள்ள முடியாமல் போனது. குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில்கூட கலந்துகொள்ளவோ, தமது தொகுதிக்கு வந்து போகவோ முடியாமல் போனது. அப்போது உரத்துக் குரல் கொடுத்து கண்டனங்களை வெளியிட்டு, அபிவிருத்திப் பணிகளுக்கு ஏதுநிலைகளை ஏற்படுத்தாத நாம், இப்போது என்ன நோக்கின் அடிப்படையில் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றோம் என எண்ணிப்பார்க்க வேண்டும். வன்னியில் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்களைச் சென்று பார்வையிடவோ, உதவி செய்யவோ த.தே.கூட்டமைப்பினால் முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்பொழுது மகிந்த அணியில் இருக்கும் கனகரத்தினம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவோ, பன்னாட்டு அரசுகளுக்கும், சமூகத்திற்கும் எம்மை ஊடகர்கள் என வெளிப்படுத்தி, அந்த மக்களின் நிலை பற்றி எடுத்துரைக்கவோ நாம் முற்பட்டோமா? இவற்றை விடுத்து அறைக்குள் இருந்து எழுதும் ஆய்வுப் பத்திகள்? தமிழ் மக்களின் ஒற்றுமையை அம்பலத்தில் ஆடவிடும் என்ற பொறுப்புணர்வு எமக்கிருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பாகும். நாம் வெளியிடும் எந்தப் பத்தியாய்வும் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களின் தலைமையையோ பிளவுபடுத்தாது, அதே நேரத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி துரோகம் இழைப்பவர்களை, அதுவும் இந்த முக்கிய காலகட்டத்தில் அவ்வாறானவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் என்ற மிகப்பெரும் தலைமை மெளனமாக இருக்கும் இந்தக் காலப்பகுதியில், தமிழ் மக்களின் மனங்களைக் குழப்பும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்க முடியாது. இத்துடன் எமது ஆய்வு, அறிக்கை, மற்றும் ஊடகம் ஊடான சிதறடிப்புச் செய்திகளை நிறுத்திவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துப் போராடக்கூடியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கும் பணியைச் செய்வதன் ஊடாக , புலம்பெயர்ந்துள்ள நாம் அடுத்த பொதுத் தேர்தலில் (2004இல் விடுதலைப் புலிகள் போன்று) காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதுடன், பிளவுபட்டுள்ள அணிகளை தேர்தலின் பின் ஒருங்கிணைக்கவும் முடியும் என்பதே தமிழ் மக்களின் நம்பிக்கை.இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 1994ஆம் ஆண்டுத் தேர்தலிலும், அதற்குப் பின்னரும் சிதறிப்போனதை அவதானித்த மாமனிதர் சிவராம் அவர்களது ஆதங்கமும், சிந்தனாவோட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதியப்படாத கட்சியை கூட்டுருவாக்க வழி கோலியது. மாமனிதரது இந்த முயற்சிக்கு தற்பொழுது சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தென் தமிழீழ ஊடகர்கள் சிலரின் பங்களிப்பும் இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றிய புத்திஜீவிகளுக்கே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழத்தின் அதியுயர் விருதாகிய “மாமனிதர்” விருதினை வழங்கி கெளரவித்து வந்திருக்கின்றார். அந்த வகையில் மாமனிதர் சிவராம் அவர்கள் தமிழீழத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க மட்டுமன்றி அரசியல், படைத்துறை, ஊடகத்துறை என அவர் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய பணியை விடுதலைப் புலிகளின் மதிப்பளிப்பு உணர்த்தி நிற்கின்றது. தமிழீழத்திற்கு வெளியே சிங்கள தேசத்தின் களத்தில் எமது அரசியல் தளத்தை வைத்திருக்கவும், பன்னாட்டு சமூகத்திற்கு தமிழ் மக்களின் வேணவாவை எடுத்துரைக்கவும் விடுதலைப் புலிகளின் ஆசியுடன் மாமனிதர் சிவராம் வகுத்த வியூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு மிதவாத – ஆயுதப் பிரிவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது நான்கு பிரிவுகளாக உடைந்து நிற்கின்றது. இவற்றில் மகிந்த ஆதரவுக் போக்கை எடுத்துள்ள சிவநாதன் கிசோர், கனகரத்தினம், செல்வி தங்கேஸ்வரி போன்றவர்களையும், இடதுசாரி விடுதலை முன்னணி என்ற புதிய பெயர் பெற்றுள்ள கலாநிதி விக்கிரமபாகு தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணியுடன் இணைந்துள்ள ரெலோ அமைப்பின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்ற தரப்புக்களைவிட மற்றைய இரண்டு தரப்புக்கள் இடையே நேரடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை ஆராய்வதைவிட, இதன் பின்னணி என்ன என ஆராய்வது தமிழ் மக்களைக் குழப்பும் விடயத்திற்கு சிலவேளை விடை கொடுக்கலாம். ஊடக ஆய்வுகளும், மன ஊடறுப்புக்களும் ஒரு முக்கிய காலகட்டத்தில், அதுவும் தமிழ் மக்கள் தமது படைத்துறைப் பலத்தை முற்றாக இழந்து, அரசியல் தலைமையைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பகரமான நிலை மிகவும் கவலைக்குரியதே. அதுவும் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு, வழி நடத்தப்பட்ட ஒரு அமைப்பின் அரசியல் தளம் உடைந்து நிற்பது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இது புலம்பெயர்ந்த மக்களை மிகவும் மன ஆதங்கத்திற்கு உள்ளாக்கி இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்திற்கு மாமனிதருடன் இணைந்து பணியாற்றிய சில ஊடகர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் வெளிப்பாடே தமிழ் மக்களின் தலைமையினாலும், தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை பெயர் சொல்லி விமர்சிக்கும் அளவிற்கு அவர்களது ஆய்வுப் பத்திகள் விரிந்து நிற்கின்றன. இவ்வாறான ஆய்வுகள் தமிழ் மக்களின் மனங்களை ஊடறுத்துக் கூறுபோடும் நிலைக்குக் கொண்டு செல்லப்போகின்றது அல்லது கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது என்ற விபரீதத்தை இந்த ஆய்வுப் பத்திகள் மூலம் உணர முடிகின்றது. அண்மைய ஆய்வுகளும், அதன் உள்ளடக்கங்களும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக உழைக்கும் புலம்பெயர்ந்துள்ள ஆய்வாளர்கள் சிலர் வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினால் ஏற்படப்போகும் சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது. 2. தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும். 3. தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது. 1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது இது உண்மைதான். ஆனால் இது பற்றி முன்வைக்கப்படும் ஆய்வுப் பத்திகளில் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டி மறு தரப்பு நியாயங்களை மறுதலிப்பதும், மறுதலிக்க வைப்பதும், அல்லது ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து உரிய தரப்பை, அதன் தலைமையைக் கண்டிக்க மறுப்பதும் இந்த ஆய்வுகளின் நேர்மைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பி நிற்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்து, இந்தியாவின் வகிபாகத்தை இல்லாதொழிக்க சிங்கள பேரினவாதம் மேற்கொள்ளும் முயற்சிக்கு “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” துணை போவதாகக் குற்றம் சுமத்தும் ஆய்வாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியாவின் கைப்பொம்மைகளாக மாறுவது பற்றி எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை. நேரடி எதிரியைவிட கூட இருந்து குழி பறிப்பதே மிகப்பெரும் துரோகமாகும். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமன்றி அதன் பின்னரும் இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு இழைத்துவரும் துரோகத்தனங்கள் பற்றி இந்த ஆய்வுகள் அலசவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனப்போராடிய தமிழ் மக்களின் தலைமையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று விரும்பிய இந்தியா, அதே கொள்கையுடன் தற்பொழுதும் இருப்பதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் ஆதரிக்க முற்படுகின்றது என்பது பற்றி இந்த பத்தி ஆய்வுகள் கேள்வி எழுப்ப மறுக்கின்றன. இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து செல்வதால், சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்புவதாக வாதம் முன்வைத்தால், சீன ஆதிக்கம் இப்பொழுது தீடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதையும், சீன ஆதிக்கம் மட்டுமன்றி அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட விடுதலைப் புலிகளை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை என்ற சதாராண கேள்வி எழுவதை தடுக்க முடியாதே? தமிழர்கள் பாரிய இனவழிப்பை எதிர்நோக்கியிருந்தபோது, விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க மறுத்த இந்தியத் தலைமைகள் (ஒரு சில சந்திப்புக்கள் பலமுனைப் பிரயத்தனத்தின் பின்னர் நடைபெற்றது), இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதை யாரும் இதுவரை விளக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் முள்ளிலாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம், ஏன் அதனைச் செய்யவில்லை? வடக்கு கிழக்கு இணைப்பையே தக்க வைக்க முடியாத இந்தியா தமிழர் தாயகத்திற்கு எதனைச் செய்யப்போகின்றது. இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன்) இணங்கியிருந்தால், அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தம்மை தெரிவு செய்த தமிழ் மக்களிற்கும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கும் அது பற்றி ஏன் தெளிவுபடுத்தவில்லை என்பது பற்றி எந்தவொரு ஆய்வுப் பத்தியும் ஏன் கேள்வி எழுப்பவில்லை. முள்ளிவாய்க்கால் இரத்தநெடி மாற முன்னர், இந்தியாவின் உத்தரவுக்கு அமைய கொழும்பிலுள்ள சில சட்டவாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் பிரதியை கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு.சம்பந்தன் அவர்கள் வழங்காததன் காரணம் என்ன எனவும், அதன் தலைப்பு தமிழர்களின் வேணவாவையும், உள்ளட சரத்துக்களோ அதனை மறுதலிக்கும் மாற்றுப்போக்கையும் கொண்டுள்ள மர்மம் பற்றி நாம் ஏன் கேள்வி எழுப்ப மறந்தோம். தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் அணி, அதனை எப்படிப் பெறப்போகின்றது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், அதே கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுவதாகக்கூறும் மறு தரரப்பிடமும் அதே கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்பட்ட திரு.சம்பந்தன் அவர்கள் லண்டன் சென்றிருந்தபோதுகூட, அங்குள்ள தமிழ் மக்களை உள்ளடக்கிய முக்கிய மிகப்பெரும் அமைப்புக்களைச் சந்திக்காது, தனக்கு நெருங்கியவர்களுடன் நடத்திவிட்டுச் சென்ற சந்திப்புக்கள் அவர் மீது ஏற்படுத்திய சந்தேகத்திற்கு இப்பொழுது விடைபகிர ஆரம்பித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவை முற்றாக நிராகரிக்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் அதற்காக முற்றாக அடிபணிந்து நின்றுவிடவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தமிழ் மக்களின் படைத்துறைப் பலம் இழக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அடிபணிந்து செல்லும் எந்தவொரு நிர்க்கதி நிலையும் தமிழர்களுக்கு ஏற்படவில்லை. அப்படி இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு உதவ முன்வந்தால் அது மகிழ்ச்சியே. ஆனால் அதனை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறீலங்கா மீது தடைகளை இட்டு, போர்க்குற்ற விசாரணை பற்றி வலியுறுத்திவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியா இது பற்றிக்கூட வாய் திறக்கவில்லையே. சிங்களத்தைக் கட்டப்படுத்த தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்தியாவின் கைங்கரியத்திற்கு விடுதலைப் புலிகள் முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அந்த நிலை மீண்டும் தோன்ற நாம் அனுமதிக்கலாமா? அதனால் எமக்கு ஏற்படப்போகும் நன்மைகள் என்ன? மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து, சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்த இந்தியா மறைமுகமாகச் செயற்பட்டது என சிங்கள அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியதும், அதற்கு இந்தியத் தரப்பு வெளியிட்ட மறுப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் அனைவரும் செய்தியாகப் படித்திருக்கின்றோம். இந்தியாவின் மறைமுக நடவடிக்கையில் முக்கியமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரத்து களமிறங்கியதைக் குறிப்பிடலாம். அப்பயென்றால் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, த.தே.கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இயங்கியது என்பதை நாம் ஏன் உணரவில்லை. த.தே.கூட்டமைப்பின் தலைமையிலுள்ள மூவரது ஏதேச்சதிகாரப்போக்கை மாற்றியமைக்கும் மறைமுக பன்முக முயற்சிகள் தோல்வி கண்டதே காங்கிரசின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது எனக்கூறப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றியதும் கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பகத்தன்மையைப் பாரிய கேள்விக்கு இட்டுச்சென்றது. காங்கிரசின் வெளியேற்றத்திற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் கண்டனம் வெளியிடும் நாம், கூட்டமைப்பில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக்குரல் கொடுக்கவோ, அல்லது இணைந்து, இணைத்துச் செயற்படுங்கள் என சம்பந்தன் ஐயாவுக்கு அறிவுரை சொல்லவோ முற்படவில்லை. யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தாயக – தேசிய எல்லை இந்த இரண்டு மாவட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? எனக் கேள்வி எழுப்பும் நாம், மறு புறத்தில் அம்பாறையில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தலைமையிலான (வடக்கு கிழக்கு தேர்தல் பொறுப்பு) இடதுசாரி விடுதலை முன்னணி மீதும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உடைக்கப்படுகின்றது என விமர்சனக் கண்டனம் முன்வைப்பதன் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றோம். திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்கவே, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தன் தோற்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் அடிப்படையில் தேசிய பட்டியல் இடம் கிடைத்தால் (2004இல் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன) அதனை சம்பந்தனே பற்றிக்கொள்வார் என்பது உண்மையே. ஆனால் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்போதே அடிக்கடி வன்னிக்கு அழைத்து ஊசி அடிக்க வேண்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்கள் மெளனமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தன்னிச்சைப்படி, அல்லது இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க ஆடுவதைத் தடுக்க இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் வாதமாக முன் வைக்கலாம் அல்லவா? வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை தொகுதிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடாது தவிர்த்ததற்கு முக்கிய காரணி, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. அதனையே இப்பொழுது பிரதேச வாதமாகக் கிளப்பி நாம் ஆய்வுப் பத்திகளை எழுதுவதால் புண்பட்டுள்ள தென்தமிழீழ மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களைத் தோற்றுவிக்கும். “பிரதேசவாதம் பேசும் பிள்ளையானையும், கஜேந்திரனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக உருவாக்கி அறிக்கை வெளியிடும் ஊடகங்கள், தாம் மறைமுகமாகப் பிரதேச வாதத்தை தூண்டுகின்றோம் என்பதை ஏன் உணரவில்லை. ஆக கருணா, பிள்ளையானுக்கும், இந்த ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம். புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ஒருசில இணைய ஊடகங்களின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக. மறு தரப்பு மீது கண்மூடித்தனமாக மண்வாரித் தூவுவது தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்றோம்? எனக்கூறும் இந்த ஊடகங்களின் நிலைப்பாடு பற்றி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் அல்லவா? திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான நிலையில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஆழமான பிழவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், அதற்கு நாம் துணைபோக முடியாது என்பதையும் தமிழ் மக்களை வழிநடத்த முற்படும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஊடகங்களில் ஆய்வுகளை எழுதி நேரத்தை வீணாக்கி மக்களைக் குழப்பும் நாம், தமிழ் மக்களின் பிளவுபட இருந்த தலைமைகளை ஒன்றிணைக்க எம்மால் முடிந்ததை ஏதாவது செய்தோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். சரி… தவிர்க்க முடியாமல் பிளவு ஏற்பட்டு விட்டது, இது பற்றி எழுதிக் குழப்புவதை விட்டுவிட்டு, இந்தத் தலைமைகளை ஒருங்கிணைக்க இப்போதாவது ஏதாவது செய்தோமா? த.தே.கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அது பற்றி உரியவர்களிடம் எடுத்துக்கூறி மறைமுக ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதே சிறந்த ஊடகருக்கு எடுத்துக்காட்டு. த.தே.கூட்டமைப்பின் உருவாக்கம் மட்டுமன்றி, வேறு எத்தனையோ முக்கிய மறைமுகப் பணிகளை மாமனிதர் சிவராம் அவர்கள் மேற்கொண்ட போதிலும், அவர் அதனை சதாரண மக்களிற்கு தெரிவித்து, விமர்சனங்களை முன்வைக்க முற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில் அரசியல் வார்த்தை ஜாலங்களைப் புரிந்துகொள்ள முடியாத சாதாரண மக்கள் பிரதேசவாதம் என்ற சந்தர்ப்பவாதத்திற்குள் கட்டுப்பட்டு, அவர்களின் விடுதலை உணர்வு சிதறடிக்கப்படும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். பிரதிநிதித்துவம் எவ்வளது முக்கியமோ, அதனைவிட மக்களின் மனங்களும், விடுதலை உணர்வும் அதிமுக்கியம். அவற்றில் தளர்ச்சியோ, பாதிப்போ ஏற்பட நாம் துணைபோகக்கூடாது. 2.தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தைத் தவிர வேறு எந்தவொரு காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை என்பதே உண்மை. 1963ஆம் ஆண்டு திருகோணமலையில் 36 வீதமாக இருந்த தமிழ் மக்கள் 2007ஆம் ஆண்டில் 28.6 வீதமாக வீழ்ச்சியடைந்தனர். இதேபோன்ற நிலை வன்னியிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் காணப்படுகின்றது. போர் நிறுத்தம் என்ற கயிற்றினால் விடுதலைப் புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தபோது ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், திருகோணமலை நகரத்தில் நிறுவப்பட்ட பெளத்த கோவிலையும், மட்டக்களப்பில் வீதிகளுக்கு சிங்களப் பெயர் இடுவதையும், ஏன் வன்னியில் முளைத்த பெளத்த கோவில்களையும் நாடாளுமன்றில் நான்காவது பெரும் பலத்துடன் இருந்த த.தே.கூட்டமைப்பினால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது. இதனால் திருகோணமலையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது சரியென்பது எனது வாதமல்ல. சம்பந்தன் பதவிக்கு வராதுபோனால் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என முன்வைக்கப்படும் ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே எனது கேள்வி? அப்படியென்றால் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு.சம்பந்தன் அவர்கள் நீண்ட காலம் இருக்கும் நிலையில், தமிழ் மக்களின் விகிதார வீழ்ச்சியும், சிங்களக் குடியேற்றமும், முஸ்லீம் மக்களின் பெருக்கமும் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது நியாயம் அல்லவா? ஆக மொத்தத்தில் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் தலைமையாக இப்பொழுது செயற்படக் கூடியவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே, சிங்கள தேசத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி பன்னாட்டு சமூகத்திற்காவது எடுத்துக்கூறி, தமிழ் மக்களிற்கான ஆதரவைத் திரட்ட வழி வகுக்குமே தவிர, விமர்சனங்களை முன்வைத்து தலைமைகளைப் பிரிப்பதால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. 3.தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தின், அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தின் அபிவிருத்தி, மற்றும் வேலை வாய்ப்பு, உயர்கல்வி போன்றன பாதிக்கப்படப்போவதாக முன்வைக்கப்படும் விமர்சங்களில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒரு பிரதேசத்திற்கான ஆறு கோடிகள் இல்லாமல் போகும் என நாம் கவலைப்படுகின்றோம். தமிழர்களின் தன்மானத்திற்காக உயிர் கொடுத்துப் போராடிய எம்மினம், அதிலும் வீரவீச்சுடன் போராடிய பல அரிய போராளிகளைத்தந்த தென் தமிழீழத்திற்கான அபிவிருத்தி தடைப்படும் என நாம் பேச முற்படுவது, அந்தப் போராளிகளின் தியாயங்களை அவமதிப்பது போன்ற செயற்பாடாகும். தமிழர்கள் தற்பொழுதுள்ள நிலையில் சில அணுசரிப்புக்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டு சிங்களத்தின் உதவியைப் பெற வேண்டும் என முன்வைக்கப்படும் வாதம் எவ்வளது தூரம் சரியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதால், அபிவிருத்தி நடவடிக்கைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என எழுந்தமானமாகக் கூறுவதன் ஊடக, மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் போன்றவர்கள் கூட்டமைப்பின் பிளவினால் ஆசனங்களைப் பெறுவதையும் மறைமுகமாக ஆமோதிக்கும் நாம், தென் தமிழீழத்தில் இழக்கப்படும் பிரதிநிதித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் அருகதையை இழந்து நிற்கின்றோம். கருணாவும், பிள்ளையானும் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் துணைப்படைக் குழுக்களை இயக்கி, அவர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியபோது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் எமது மண்ணில் மேற்கொள்ள முடியாமல் போனது. குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில்கூட கலந்துகொள்ளவோ, தமது தொகுதிக்கு வந்து போகவோ முடியாமல் போனது. அப்போது உரத்துக் குரல் கொடுத்து கண்டனங்களை வெளியிட்டு, அபிவிருத்திப் பணிகளுக்கு ஏதுநிலைகளை ஏற்படுத்தாத நாம், இப்போது என்ன நோக்கின் அடிப்படையில் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றோம் என எண்ணிப்பார்க்க வேண்டும். வன்னியில் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்களைச் சென்று பார்வையிடவோ, உதவி செய்யவோ த.தே.கூட்டமைப்பினால் முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்பொழுது மகிந்த அணியில் இருக்கும் கனகரத்தினம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவோ, பன்னாட்டு அரசுகளுக்கும், சமூகத்திற்கும் எம்மை ஊடகர்கள் என வெளிப்படுத்தி, அந்த மக்களின் நிலை பற்றி எடுத்துரைக்கவோ நாம் முற்பட்டோமா? இவற்றை விடுத்து அறைக்குள் இருந்து எழுதும் ஆய்வுப் பத்திகள்? தமிழ் மக்களின் ஒற்றுமையை அம்பலத்தில் ஆடவிடும் என்ற பொறுப்புணர்வு எமக்கிருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பாகும். நாம் வெளியிடும் எந்தப் பத்தியாய்வும் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களின் தலைமையையோ பிளவுபடுத்தாது, அதே நேரத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி துரோகம் இழைப்பவர்களை, அதுவும் இந்த முக்கிய காலகட்டத்தில் அவ்வாறானவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் என்ற மிகப்பெரும் தலைமை மெளனமாக இருக்கும் இந்தக் காலப்பகுதியில், தமிழ் மக்களின் மனங்களைக் குழப்பும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்க முடியாது. இத்துடன் எமது ஆய்வு, அறிக்கை, மற்றும் ஊடகம் ஊடான சிதறடிப்புச் செய்திகளை நிறுத்திவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துப் போராடக்கூடியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கும் பணியைச் செய்வதன் ஊடாக , புலம்பெயர்ந்துள்ள நாம் அடுத்த பொதுத் தேர்தலில் (2004இல் விடுதலைப் புலிகள் போன்று) காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதுடன், பிளவுபட்டுள்ள அணிகளை தேர்தலின் பின் ஒருங்கிணைக்கவும் முடியும் என்பதே தமிழ் மக்களின் நம்பிக்கை.

அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை! மனிதஉரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக அமெரிக்கா காட்டம்!!

சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார். கனடாவின் வெளிநாட்டலுவல்கள் நாடாளுமன்ற செயற்குழு செயலர் தீபக் ஒபராய் மேற்கண்ட கருத்தை சிறிலங்காவின் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்காவின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஒபராய் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய கூடிய செயல் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் எனவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை தடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இலங்கைத்தீவில் நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்தநிலையில் 300 000 தமிழ் மக்களை கொண்ட கனடா நாடு தமிழ் மக்களைபற்றிய விடயங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மனித உரிமைகளை பேணி பாதுகாப்பதில் சிறிலங்கா அரசு தவறியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த வருடம் முழுவதும் அரச ஆதரவு துணைப்படைகளும் பாதுகாப்பு படைகளும் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத வன்முறை பிரயோகித்துள்ளனர் எனவும் சித்திரவதைகள் கடத்தப்படுதல் தடுத்துவைத்தல் மற்றும் கடத்திவைத்து பணம் பறித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அறியமுடியவில்லை. இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக சிறிலங்கா சட்டமைப்பின்படி அமைக்கப்படவேண்டிய மனித உரிமை கமிசன்களையோ அல்லது இலஞ்ச தடுப்பு கமிசன்களையோ அல்லது காவல்துறை கமிசன்களையோ அல்லது நீதிமன்ற கமிசன்களையோ அமைப்பதை தடுத்துவந்திருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரசப்படைகளும் அதன் துணைப்படைகளும் பலரை சட்டத்திற்கு புறம்பான முறையில் கொன்றுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர்கள் செயற்படமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி ஊடக அடக்குமுறையை தொடர்ந்தும் பின்பற்றிவந்துள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ள இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கடுமையான முறையில் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பில் உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் மலேசியப் புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட முழுமையான இணக்கத்தின் அடிப்படையில் கே.பி. இலங்கையிடம் சரணடைந்ததாகக் கொழும்பில் முக்கிய மட்டங்களில் பேசப்படுகிறது. கே.பி. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் வெளியில் தெரியும் நபராக இருந்த போதிலும் சர்வதேச வலையமைப்பை வேறொருவரே வழிநடத்தி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரின் நிலைப்பாடாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொட்டு அம்மான் சமாதான உடன்படிக்கைக் காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் குறித்த குறிப்பிட்டுக்கூறக் கூடிய தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருக்கவில்லை என்பதால் அவரை சிக்கவைக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கிடையில் சில பிளவுகள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பொட்டு அம்மான் அந்த அமைப்பின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடவில்லை எனவும் அவர் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளன.

மனித உரிமை பேரவையில் உரையாற்ற விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கு சந்தர்ப்பம்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க முகவர்களில் ஒருவரான கருன் பார்க்கர் என்பவருக்கே இவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பார்க்கர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் போலியான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை, இலங்கைப் படைத்தரப்பினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

மகிந்தவுக்கும், தன் இந்திய மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்


போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து இலங்கையை காப்பாற்றும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவரும் பின்னணியில், மிகப்பெரிய குடும்ப அரசியலும் பரஸ்பரம் நன்றிக்கடன் நடவடிக்கைகளும் ஒழிந்திருக்கின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: இலங்கைக்க்கு எந்த நடவடிக்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படையாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை என்பது சகல தரப்பினரும் அறிந்த உண்மை. இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் முதல் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்த போர்க்குற்றம் வரை சிறிலங்கா அரசு மேற்கொண்ட மிகவும் பாரதூரமான குற்றங்களுக்கு ஐ.நா. சபை எந்த உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய மூத்த அதிகாரிகள் பலர் வெளிப்படையான கண்டனங்களையும் நடவடிக்கைகளுக்கான முஸ்தீபுகளையும் மேற்கொண்டடிருந்தபோதும் அவற்றை அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தாக அறிவித்து செல்லாக்காசாக்கும் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை விவகாரத்தில் தனது பொறுப்பையும் தொடர்ச்சியாக தட்டிக்கழித்து வருகின்றமை சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினரும் அறிந்த விடயம். பான் கீ மூனினது இந்த காரியங்களின் பின்னணியில், இந்தியாவும் இலங்கையும் கொண்ட பல குடும்ப மற்றும் நட்பு உறவுகளே காரணம். பான் கீ மூனினது மருமகன் சித்தார்த் சட்டர்ஜி, 1987 ல் இலங்கை சென்ற இந்திய படைகளின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவர் ஆவார். அக்காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றிய சித்தார்த் சட்டர்ஜி பின்னர் ஓய்வுபெற்று தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை படைகளின் பிரதானி விஜய் நம்பியாரின் சகோதரரும் இந்திய இராணுவத்தின் முன்னாள் பிரதானியுமான சதீஷ் நம்பியார் வன்னியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை பொதுமக்களை காப்பாற்றுவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார். இவர் தனது சகோதரரின் ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை இராணுவத்துக்கு ஆலோசனை வழங்கினாரே தவிர பொதுமக்களை காப்பாற்றுவதற்கு இலங்கை அரசுடன் பேச்சு நடத்தவேண்டிய தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தன.(விஜய் நம்பியார் சமாதான காலத்தின்போது இந்தியாவின் சிறப்பு தூதுவராக இலங்கைக்கு சென்று உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கக்கூடாது என்று இலங்கைக்கு ஆலோசனை வழங்கி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.) ஆகவே, இறுதிப்போரில் தனது படைகளை நேரடியாக வன்னிக்கு அனுப்பிய இந்தியா, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் ஐ.நா. மட்டத்தில் கூர்மையடையும்போது, அது போரின் பின்னணியின் தான் நடத்திய நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்துவிடும் அச்சத்தில், நம்பியார் சகோதரர்கள் மற்றும் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி ஆகியோரின் செல்வாக்கை பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை முறியடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு கடந்த தடவை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிடுவதற்கு இலங்கை தரப்பில் ஜெயந்த தனபாலவை நிறுத்திய இலங்கையின் அரச அதிபர் மகிந்த, பின்னர், பான் கீ மூனின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயந்த தனபாலவின் நியமனத்தை வாபஸ் பெற்றிருந்தார். அன்றுமுதல், மகிந்தவுக்கு நன்றிக்கடன் உடையவராக செயற்பட்டுவரும் பான் கீ மூன், இன்றுவரை மகிந்த தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்பதிலும் வேறு தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் அவற்றை அனுமதிப்பதில்லை என்பதிலும் விடாப்பிடியாக நிற்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.