வெள்ளி, 12 மார்ச், 2010

மனித உரிமை பேரவையில் உரையாற்ற விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கு சந்தர்ப்பம்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க முகவர்களில் ஒருவரான கருன் பார்க்கர் என்பவருக்கே இவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பார்க்கர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் போலியான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை, இலங்கைப் படைத்தரப்பினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக