இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 12 மார்ச், 2010
மனித உரிமை பேரவையில் உரையாற்ற விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கு சந்தர்ப்பம்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க முகவர்களில் ஒருவரான கருன் பார்க்கர் என்பவருக்கே இவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பார்க்கர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் போலியான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, இலங்கைப் படைத்தரப்பினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக