சனி, 25 டிசம்பர், 2010

தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை: டக்ளஸ்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார். அந்த வகையில்  யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

ஓ! இறைமகனே! யேசு பாலகா!

ஓ! இறைமகனே! யேசு பாலகா! எங்கள் மண்ணில் நடப்பவற்றை ஒரு கணம் பார்! சிலுவையில் அறையப்பட்ட போது உன் திருவுடலில் இருந்து உதிர்ந்த குருதியை விட அதிக குருதியை எங்களுக்காக சொரிவாய். அந்தளவிற்கு துயரம் அதிகமாக இருக்கும். பாதை தெரியாமல், இருளில் வாழ்ந்த மானிடத்தை வழிப் படுத்த அவதரித்த யேசு பாலகா! எங்கள் மண்ணிலும் உன் பிறப்பு நடக்கட்டும்.உன் பிறப்பால் எங்கள் பாவம் ஒழி யட்டும்.நீதி பிறக்கட்டும்.நியாயம் மலரட்டும்.மோசமான அரசியல் ,அதற்காகத் துதிபாடும் நிர்வாகக் கலாசாரங்கள் அத்தனைக்கும் முடிபு கிடைக்கட்டும்.பாலகனே உன் இரண்டாவது பிறப்பு எல்லாம் இழந்த தமிழ் மக்களின் மண்ணில் நடக்கட்டும். ஆமேன்

மானிப்பாயில் யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம்

யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்றினை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அந்த அமைப்பிற்கான இணைப்பாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் தெரிவித்திருக்கின்றார். யுத்த சூழ்நிலையினால் இந்தச் சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்துள்ள குறித்த நபர், சுமார் 100 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பத்தில் இயங்கிய இந்தச் சங்கத்தின் ஊடாக பௌத்த தர்மத்தை போதிக்கும் பாடசாலையொன்றை மானிப்பாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது