இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 25 டிசம்பர், 2010
ஓ! இறைமகனே! யேசு பாலகா!
ஓ! இறைமகனே! யேசு பாலகா! எங்கள் மண்ணில் நடப்பவற்றை ஒரு கணம் பார்! சிலுவையில் அறையப்பட்ட போது உன் திருவுடலில் இருந்து உதிர்ந்த குருதியை விட அதிக குருதியை எங்களுக்காக சொரிவாய். அந்தளவிற்கு துயரம் அதிகமாக இருக்கும். பாதை தெரியாமல், இருளில் வாழ்ந்த மானிடத்தை வழிப் படுத்த அவதரித்த யேசு பாலகா! எங்கள் மண்ணிலும் உன் பிறப்பு நடக்கட்டும்.உன் பிறப்பால் எங்கள் பாவம் ஒழி யட்டும்.நீதி பிறக்கட்டும்.நியாயம் மலரட்டும்.மோசமான அரசியல் ,அதற்காகத் துதிபாடும் நிர்வாகக் கலாசாரங்கள் அத்தனைக்கும் முடிபு கிடைக்கட்டும்.பாலகனே உன் இரண்டாவது பிறப்பு எல்லாம் இழந்த தமிழ் மக்களின் மண்ணில் நடக்கட்டும். ஆமேன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக