ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தாதியர் நியமனத்தில் "தமிழ் யுவதிகள் ஒருவரும்' இல்லையா?"

வடக்கு, கிழக்குப் பகுதிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் மலையகம் தான். கண்டி, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை என்று பல மாவட்டங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது.

அரசு காட்டும் அசமந்தம் மறப்பதற்குரியதல்ல...

போரினால் அனைத்தையும் இழந்து முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தமிழ் மக்கள் துன்பப்படும்போது, இராணுவத்தினரைக் குடியேற்றுவதிலும் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதியை அரச காணியாக்குவதிலும் ,அரசியலமைப்பு சீர் திருத்தத்திலும் அரசு தீவிரம் காட்டி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. வன்னிப்பெரும் போர் நடைபெற்று முடிபுற்றவேளை சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.