ஞாயிறு, 2 மே, 2010

தமிழீழத் தமிழச்சி!


தமிழீழத் தமிழச்சி என்பதால் என் தாயும் விதவை என் சகோதரியும் விதவை என் நண்பியும் விதவையே.....! அன்று கிருசாந்தியை புதைத்த போது வாய் பொத்தியிருந்தாய் நேற்று தர்சினியை எரித்த போது கண் மூடியிருந்தாய் உனது பலதடவை அறியாமையினால் இன்று எம்மின தமிழ்ப் பெண்கள் இப்ப எம்மோடு இல்லை....! எங்கள் மிஞ்சியிருக்கும் கண்மணிகளை தமிழகத்துக்குள் ஒழித்து வைத்தால் – அங்கையும் கருணாநிதியின் மோப்ப நாய்கள் பெண்ணாய் பிறந்த எமக்கு ஈழத் தமிழச்சியாக வாழ....???

தாயுமான எமது தலைவன் .............................


சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது.

தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை......


தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை நெடும்பயணத்திற்குத் தயாராகிறது ஆயிரக்கணக்கில் நதிகளும் மலைகளுமாய் நடந்து தடைகளை எளிதில் கடந்தனர். மலைமுகட்டிலிருந்து பாம்புகள் போல் சீற்றலைகளோடு ஐந்து அருவிகள் கீழிறங்கி விழுகின்றன. மலையின் மச்சமாய் கோபுரம்போல் டாம்பீகமாய் உமெங் மலைச்சிகரங்கள் செங்குத்தான மலைகளின் மீது வெப்ப மேகங்கள் படர்கின்றன. அலையலையாய் தங்க மணல் விழும், இரும்புச் சங்கிலிப் பாலத்தின் கண்களின் வழியே தாது நதி குளிர்ச்சியாய் வழிந்தோடுகிறது. ‘மின்’ தொடர் மலைகளின் மீது பல மைல்கள் பனிபடர்ந்து உடையலங்காரம் நடக்கிறது. பெரிதாய் சிரித்தவாறு எங்கள் செஞ்சேனை வீரர்கள் இவற்றை எளிதாய்க் கடந்து ஏகினர் காண். -தோழர் மாவோ (1940) எமது இனிய உறவுகளே! மீண்டும் ஒருமுறை இந்த கவிதையை வாசியுங்கள்.

தியாகி திலிபனின் கனவை நனவாக்க எழு -மே 02

தியாகி திலிபன் அன்று கூறியதைபோல தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவினைப் பெற்று தரும் ஆகவே தாயகத்தில் அவதியுறும் எம் உறவுகளை எம் நெஞ்சிலிருத்தி.. எமது தேசியத்தலைவரின் வழிகாட்டுதல்களைத் துணைகொண்டு தெளிவு பெறுங்கள். தெளிவுபெற்று உறவு, நட்பு, தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தேசத்தின் விடிவு ஒன்றையே நோக்காக கொண்டு அனைத்து முயல்வுகளிலும் எண்ணித்தெளிந்து செயற்பட்டு நாளை தவறாமல் புலத்தில் வாழும் எல்லாத் தமிழ் மக்களும் நாடு கடந்த அரசாங்கத்திற்க்கான வாக்குப் பதிவினை செய்து, உங்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள். 'எந்தப்பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டுபிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுரபலங்கொண்ட கோலியாத்தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்." மேதகு வே. பிரபாகரன்

பத்துத் தடவை பாடை வராது


தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம்!!



இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் சதி ஒன்று அங்கு இடம்பெறத் தயாராகிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாகக் கிழக்கைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நகர்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.

புதிய கண்டுபிடிப்பு! எடப்பனுக்கு பிரதி அமைச்சர் பதவி கொடுத்த ஞானோதயமா?!


வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்ததாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் ஒட்டுக்கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் கடத்தல்களாம்!!!! கூறுபவர்கள், ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறுபவர்கள்!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில்