இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 2 மே, 2010
தியாகி திலிபனின் கனவை நனவாக்க எழு -மே 02
தியாகி திலிபன் அன்று கூறியதைபோல தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவினைப் பெற்று தரும் ஆகவே தாயகத்தில் அவதியுறும் எம் உறவுகளை எம் நெஞ்சிலிருத்தி.. எமது தேசியத்தலைவரின் வழிகாட்டுதல்களைத் துணைகொண்டு தெளிவு பெறுங்கள். தெளிவுபெற்று உறவு, நட்பு, தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தேசத்தின் விடிவு ஒன்றையே நோக்காக கொண்டு அனைத்து முயல்வுகளிலும் எண்ணித்தெளிந்து செயற்பட்டு நாளை தவறாமல் புலத்தில் வாழும் எல்லாத் தமிழ் மக்களும் நாடு கடந்த அரசாங்கத்திற்க்கான வாக்குப் பதிவினை செய்து, உங்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள். 'எந்தப்பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டுபிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுரபலங்கொண்ட கோலியாத்தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்." மேதகு வே. பிரபாகரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக