வெள்ளி, 22 ஜூலை, 2011

கறுப்பு ஜூலை கொடூரத்தின் 27 ஆவது நினைவு நாள் அதே 23 இல் இன்று தமிழரின் தலைவிதி நிர்ணயம்.

1983 ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புதினம்.இரத்தக்கறை படிந்த நாள் . பேரினவாதிகள் மிருகங்களாக மாறி தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகு நாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலையுண்ட 27 ஆவது நிறைவு நாள். இன்றும் ஜூலை 23. தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள்.

27 ஆண்டுகளுக்கு முன் 1983 ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலம் நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்கக் காட்சிகள் கண்முன் விரிகின்றன. அந்த சில நாள்களில் 3ஆயிரம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனம் அல்லது காயங்களுக்கு இலக்காகினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்களை இழந்து நிர்க்கதியாகினர். இந்த அக்கிரமம், அராஜகம், காடைத்தனங்களைப் புரிந்த பேரினவாதிகள் குதூகலித்து ஆரவாரித்து கொண்டாடியதை எப்படி மறப்பது?துயரம் மிகுந்த அந்த நினைவு நாளில் இன்று தமிழன் தன் தலைவிதியை நிர்ணயிக்கத் தயாராகிவிட்டான். தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவை சர்வதேசம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமிழரின் விடிவு அவர்களின் கைகளில் தான்!

வியாழன், 21 ஜூலை, 2011

இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்ததால் அவனது புனைப் பெயரைக் கூறி வீரா இல்லையா என்றேன். நான் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டதால் அந்த அம்மா எந்தவித தயக்கமும் இன்றி அப்படி ஒருவர் இல்லை என்று கன்னத்தில் அறைந்த மாதிரி பதிலைச் சொல்லி விட்டு கொட்டிலுக்குள் சென்றுவிட்டா.
 

திங்கள், 11 ஜூலை, 2011

எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?

உவங்கள் எங்கட தமிழ்ச் சனத்தை என்னடா கேக்கிறாங்கள்…?’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் முகத்தார்.


‘காலங்காத்தால கடகத்திலை ஏத்திக்கொண்டு வந்திட்டியளோ…?’ என்று வழக்கமான நக்கலுடன் முகத்தாரை வரவேற்றார் அப்புக்குட்டியர்.