புதன், 25 ஆகஸ்ட், 2010

தமிழர்களின் நிலைவரத்தை ஆராய................?

இலங்கைத் தமிழர்களினதும் இடம்பெயர்ந்த மக்களினதும் நிலைவரத்தை நேரில் ஆராய்வதற்காக இந்தமாத இறுதியில் இலங்கைக்கு தான் பயணம் மேற்கொள்ள விருப்பதாகவும் அதற்கு முன்னர் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்புக்குச் செல்வாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருக்கிறார்.

மட்டக்களப்பிலிருந்து இளம் பெண்களை தென் பகுதிக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைததுச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.


“தமிழனின் கண்ணீர் தலையைக்கொய்யும்”

இராணுவ அதிகாரிகளை நினைத்தபடி பந்தாடவும், அவர்களுக்கு பதவி உயர்வு, பதவி இறக்கம்,கட்டாய ஓய்வு என்று எதையும் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தார் சரத் பொன்சேகா. புலிகளை அழிக்கும் தேவைக்கு சரத் பொன்சேகா அவசியமானவர் என்பதால் அவருக்கு இந்த அதிகாரங்களைக் கொடுத்திருந்தது அரசாங்கம். தான் கேட்ட அதிகாரங்கள் அனைத்தும் கிடைத்ததால் அவர் பதவியில் இருந்த போது தலைகால் புரியாமல் நடந்து கொண்டார் என்பது வெளிப்படையான விடயம்.

ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா?

கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா ? அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடுத்து இவ்வாறு உதாசீனப்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் தமிழர்களிடையே நிலவி வருகிறது. இதுபற்றிய விசாரணை நடந்து முடிந்தாலும் சிங்களக் காடையர்களின் ஆட்சியில் உண்மையான முழு தகவலும் வெளிவருமா என்பது கேள்விக்குறியே?.