புதன், 25 ஆகஸ்ட், 2010

ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா?

கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா ? அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடுத்து இவ்வாறு உதாசீனப்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் தமிழர்களிடையே நிலவி வருகிறது. இதுபற்றிய விசாரணை நடந்து முடிந்தாலும் சிங்களக் காடையர்களின் ஆட்சியில் உண்மையான முழு தகவலும் வெளிவருமா என்பது கேள்விக்குறியே?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக