புதன், 17 மார்ச், 2010

எல்லோரும் களைத்து விட்டீர்களா ?

கடந்த வருடம் இதே நேரம் எம்மவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்கள் எல்லாம் ஏன் இவ்வருடம் நடாத்த முடிய வில்லை எம்மால் ? தமிழர் என்ற இனம் இலங்கை தீவில் வாழ்ந்தார்கள் என்ற சுவடு அழிந்து விட்டதா?எமக்கு என்று ஒரு பிடி நிலமாவது வேண்டும் என்று ஏன் நாம் இப்போ கேட்கமுடியவில்லை சுயநலமா அல்லது சோரம் போய் விட்டீர்களா?அல்லது ........? கொடி தூக்கிய கைகளில் கோடிகளா?எம்மவர்களின் பணம் தானே யார் எப்படி போனால் என்ன நாம் இன்னும் விடுதலைப்புலிகள் தான் யார் என்ன செய்ய முடியும் என்ற எண்ணமா? விடுதலைபுலிகளுக்கும் அவர்களின் நிதிகளுக்கும் கொள்கைக்கும் உரிமை கோர விரும்புபவர்கள் கவனத்திற்கு .................. விடுதலைப்புலிகள் இயக்கம் உரிமையை வென்று எடுக்க புறப்பட்ட ஒரு அமைப்பு.அதனை வழிநடத்தியவர்கள் தலைவரின் கீழ் அவரை ஏற்று செயல்ப்பட்ட ஒட்டு மொத்த தமிழர்கள்.இதற்கு புது வியக்கியானம் கற்பிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி கற்பிக்க நினைக்கும் ஆசான்களை கேட்டுக்கொள்கிறோம் . எல்லோரும் ஓன்று சேர்ந்து மீண்டும் ஒரு முறை சர்வதேசத்தின் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோம் வாருங்கள் உணர்வு சாகவில்லைதானே ..........................?இடித்து உரைப்போம் எழும்புங்கள் அண்ணன் வழி தமிழீழம் கிடைப்பது உறுதி ,விடியலுக்காக மரணித்த மாவீரர்களும்,மக்களும் எம்மை ஆசீர்வதிப்பார்கள்.தமிழீழம் கனவு அல்ல ஒவ்வொரு தமிழனின் தாகம் என்பதை இடித்து உரைப்போம் நடவுங்கள் தெருவை நோக்கி .......................

இவர்கள் சுவிசுக்கும் கனடாவுக்கும் பிரித்தானியாவுக்கும் வருவதற்கு போர்டின்க் கார்ட் உடைக்கிறார்கள் வன்னி சர்வதேச விமான நிலையத்தில் .....

எப்படி சாம்பார் சாதம் சாப்பிட கொஞ்சம் ஊறுகாயும் இருந்தால் .................சொல்லி வேலை இல்ல !

இது தான் பண்டாரவன்னி மன்னன் பரம்பரையின் அரண்மனைகள்....

எப்படி கவர்ச்சி படம் ...................ரசிக்கவும்

இவளின் ஏக்கம் தான் என்ன புரிகிறதா?


ஏன் இப்போது ஒன்றுகூடல் இல்லை ...புலம்பெயர் தெருவில் சிங்களவனுக்கு பயமா ?

தமிழனின் வீடு தாஜ்மஹால் மாதிரி அழகோ அழகு ...........!

இவர்களின் எதிர்காலம்,,, ?இவர்களின் முன்னோர்களால் நீ புலம்பெயர்ந்த்தாய் இவர்களோ ..................

மறந்து விட்டோம் இவர்களின் ......................!

இது புலம்பெயர் தமிழர்களா ?

மாவீரர் அஞ்சலி.....

உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….. சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்….. மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்…. உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்… உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்…. இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்…. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்…. வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்…. சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி… விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த வீரர்கள்….. தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து… விடுதலையை சிரசில் வைத்து… அந்த ஒன்றையே சிந்தித்து…. எங்கள் மனங்களெல்லாம் உரம் தூவிச் சென்றவர்கள்…. அவர் ஆசைப்பட்ட ஓர் உடை போராளிக்கான சீருடை…. விரும்பிய ஆபரணம் கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்…. எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய் தங்கள் நித்திரை கலைத்தவர்கள்…. நிலம் காடு மேடெல்லாம் படுக்கையாய் கொண்டவர்கள்…. மானிட உருவில் வந்த தமிழின் மானம் நீங்கள்….. விடுதலைக் கனவை மட்டுமல்ல வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்… மரித்தாலும் உயிர்த்து எழ நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல…. மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்… கார்த்திகை இருபத்தியேழு உம் கல்லறையை வணங்கிடும் நாள்…. கார்த்திகை பூவினால் உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்… மாவீரர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிடும் நாள்.. எம் மனமும் உன் ஆன்மாவும் கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்… உம் லட்சியம் வெல்வோம் இதை இன்று சத்தியமாய் கொள்வோம்.. உன் சாவின் கனவுகளை நிறைவேற்ற சபதங்க் கொள்வோம்…

"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு" "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடியாக அமையும்".

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2ம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரமாவது: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று [14.01.2010] மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்களை மதியுரைக்குழு கவனத்திற் கொண்டு, இக் கருத்துக்கள் தொடர்பான தனது மீளாய்வினை மேற்கொண்டு அறிக்கையினை செழுமைப்படுத்தி அதன் ஆங்கில மொழியிலான அறிக்கையினை இன்று வெளியிடப்படுகிறது. அவ்வறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை [19.03.10] வெளியிடப்படும். இம் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன. . நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் பெயரில் உள்ள தமிழீழம், அரசாங்கம் ஆகிய இரு பதங்களுக்குப் பதிலாக ஈழத் தமிழர், பேரவை போன்ற பதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. [உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப்பெயர்களில் ஒன்று: நாடு கடந்த ஈழத்தமிழர் பேரவை - Transnational Assembly of Eelam Tamils]. தமிழீழம், அரசாங்கம் என்ற பதங்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும் என்பதுவும் மரபுசார் அர்த்தத்தில் இவை நிலப்பரப்பினை ஆட்சி செய்யும் தகமையினைக் குறித்து நிற்கும் என்பதுவும் இது சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களாகும். இவற்றை ஆய்வு செய்த மதியுரைக்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரினையே தொடர்ந்து பேணுவது என முடிவு செய்துள்ளது. ’தமிழீழம்’ எனும் பதம் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாகவும், உருவாக்கப்படும் அமைப்பின் செயற்பாட்டு இலக்காகவும் இருப்பதனால் அதில் மாற்றங்கள் செய்யக்கூடாது எனவும் ஆட்சி [governence] தொடர்பாக அரசுகளின் பாத்திரத்தைக் கடந்த புதிய அரசியற் கோட்பாட்டை உருவாக்கவும் ’அரசாங்கம்’ என்ற பதம் பேணப்படுவது துணைபுரியும் எனவும் மதியுரைக்;குழு கருதுகிறது. மேலும், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்கான மூலோபாயங்களையும் தந்திரோயாயங்களையும் இப் பதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாத வகையில் சிந்திப்பதே சிறந்தது எனவும் மதியுரைக்குழு கருதுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது முதலாவது அமர்வை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைப்பதனூடாக உருவாக்கப்பபட்டு, அதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்ளும் என மக்கள் கருத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நடைமுறைக்கு மாறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னரே யாப்பு உருவாக்கப்பட்டு இவ் யாப்பின் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது. மதியுரைக்குழு இவ்விரண்டு நடைமுறைகளிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மீளாய்வுக்கு உட்படுத்தியது. மதியுரைக்குழு ஆய்வுக்கெடுத்துக்கொண்ட பல்வேறு விடயங்களில் இதுவே மிக முக்கியமானதாகவும் இருந்தது. இம் மீளாய்வின் அடிப்படையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் யாப்பு உருவாக்கப்படுதலே ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதாகவும் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் கூடுதல் ஏற்புடமை கொண்டதாகவும் அமையும் என்பதனால் அந் நடைமுறையினையைப் பின்பற்றுதலே மீளமைக்கப்பட்ட அறிக்கையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக்கோட்பாடுகளில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனிஅரசினை அமைத்தல் இலக்காக இருக்கும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் இலக்கினை அடைவதற்கான மூலோபாயமாக தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகளுக்கு முதலில் அங்கீகாரம் பெற்று - பின்னர் அவ் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகித்து இறைமையினை வென்றெடுத்தல் அமையும் எனும் அர்த்தத்தில் 'படிப்படி அணுகுமுறை' பின்பற்றப்படுதல் குறித்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இப் பதப்பிரயோகம் வெவ்வேறுவகையான வியாக்கியானங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதனால் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் 'படிப்படி அணுகுமுறை' என்பது நீக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நோக்கு வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களுக்கும், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் முன்கூட்டியே தெளிவாக வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகப்பண்பின் அடிப்படையில் அவசியமாக உணரப்பட்டமையாலேயே மதியுரைக்குழுவின் அறிக்கையில் வழிகாட்டிக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்த பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இருப்பதில்லை என்பது இம் முறையின் குறைபாடாகவும் கருதப்படுகிறது. இதனால் இதனை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறை குறித்த சிந்தனையும் நடைமுறையும் தற்போது கவனத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை பிரதிநிதித்துவத்திலிருந்து மக்கள் ’மீளப்பெறும்’ நடைமுறை கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறித்தும் அவர்கள் வழி தவறி நடக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களை மீளப்பெறும் அதாவது பிரதிநிதித்துவத் தகமையிலிருந்து விடுவிக்கும் பொறிமுறையொன்றும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு என்பது இணைப்பாளரின் ஒருங்கிணைப்பில் மதியுரைக்குழு, நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள், அனைத்துலகச் செயலகம் ஆகியவற்றினைக் கொண்ட கூட்டுத்தொகுதியாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு செயற்குழுவில் மேலதிகப் பிரதிநிதிகளை இணைப்பது என்பதற்குப் பதிலாகவே இப் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இச் செயற்குழுக் கட்டமைப்புக்களதும் இணைப்பாளரதும் பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அதன் நிர்வாகக்கட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் போது முடிவுக்கு வரும். அவை குறித்து மீளமைக்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இனம் இனஅழிப்புக்கு [Genocide] உள்ளாகிறது என நிரூபிக்கப்படும் பொழுது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளான தற்பாதுகாப்பு [Self defence], தற்காப்பு [Self preservation] ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திரநாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ள சூழலில் எமது இனம் இனப்படுகொலைக்கு உட்பட்ட இனம் என நிரூபிப்பதன் ஊடாக சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்கும் அணுகுமுறை தொடர்பாகவும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வரும் மற்றும்; உருவாக்கப்பட்டு வரும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது தொடர்பான திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிய கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முடிவு செய்தலே கூடுதல் பொருத்தமானது என்று மதியுரைக்குழு கருதுகிறது. இது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக முன்வைக்கப்பட்ட பல்வேறு மக்கள் கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கை மீளமைக்கப்பட்டுள்ளது. இன்று ஆங்கில மொழியில் வெளியிடப்படும் இவ் அறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை [19.03.10] வெளியிடப்படும். இம் மீளளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் ஏற்பாடு செய்யப்படும். இம் மீளமைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்களை மதியுரைக்குழு மேலதிக ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளாது. இக் கருத்துக்கள் செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கவனத்திற்குரியவையாகவே இனி கொண்டு வரப்படும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2 ஆம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக்குழுக்கள் இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம் மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும். இத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம். இத் தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கோருகிறோம். திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடாத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்துத் தமிழர் அமைப்புக்களையும் தமிழ் பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இன்று பரிதாபகரமான நிலையில்;அநாதைகளாய் ஈழதமிழினம்?

பிரதிநிதித்துவத்தைச் சிதறடிக்கும் சதி முயற்சிக்கு தமிழர் பலியாகக் கூடாது "பயனற்றுப் போன அணுகுமுறைகளை மீண்டும் நியாயப்படுத்தும் சக்திகளின் கபடநோக்கத்தை புரிந்துகொள்ளவது அவசியம் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சிதைத்துச் சீர்குலைத்து எதிர்காலத்தில் தங்களது எந்தவொரு அரசியல் கோரிக்கைக்காகவும் வலுவான முறையில் குரல் கொடுக்க முடியாதவர்களாக அவர்களை வைத்திருப்பதற்கான ஒரு சதி முயற்சிக்கு துணைபோவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுத் தேர்தலில் பெருவாரியான அரசியல் குழுக்களும் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த மக்கள் தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதாக அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் கொண்டிருக்கக்கூடிய பிரதிநிதித்துவத்தின் கனதியையும் கட்டுக்கோப்பையும் பொறுத்தே அவர்களின் எதிர்கால அரசியல் பாதை அமையும் என்பதில் சந்தேகமில்லை. போரின் முடிவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பாக பாராளுமன்றத் தேர்தலை நிதானத்துடனும் விவேகத்துடனும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக உறுதிப்பாட்டுடன் குரல் கொடுக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாக இருக்கின்ற நிலை தொடரவேண்டுமென்பதே பேரினவாத சக்திகளின் விருப்பமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோக்கத்திற்காக அச்சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும் விலைபோகக்கூடிய கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப்படுவோரையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன என்பதை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் விசமத்தனமான பிரசாரங்களின் மூலம் தெளிவாக உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவதானிகள் கூறியிருக்கிறார்கள். தவறான கொள்கைகளும் தவறான தந்திரோபாயங்களுமே தமிழ் மக்களை இன்று அரசியல் அநாதைகளாக்கியிருக்கின்றன என்பதை அகவுணர்வுகளுக்கு அப்பால் புரிந்துகொண்டு வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு சுயவிமர்சனங்களுக்குத் தங்களை உட்படுத்தத் தயாராயிருக்கக் கூடிய அரசியல் வாதிகளினாலேயே தமிழ் மக்களை இன்றைய அரசியல் வனாந்தரத்தில் இருந்து மீட்பதற்கு எதையாவது செய்யக்கூடியதாக இருக்கும். அந்த யதார்த்த நிலைக்கு முரணாக பழைய, பயனற்றுப் போன கடும் போக்கு கொள்கைகளை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய சில அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியும் கூட இன்று சில அரசியல்வாதிகள் குடாநாட்டு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குக் கேட்கின்ற அளவுக்கு வங்குரோத்து நிலையடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சில கட்சிகள் போரின் முடிவுக்குப் பிறகு ஆரோக்கியமான முறையில் தங்களுக்குள் சுயவிமர்சனங்களைச் செய்யாமல் தான்தோன்றித்தனமான நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு கதிரில் இருந்து உதிரும் நெல்மணிகள் போன்று சிதறி நின்று கொண்டு தமிழ் மக்களை மீண்டும் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிசெய்து கொண்டிருக்கின்றன. சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு இசைவான முறையில் நடைமுறைச்சாத்தியமான கொள்கைகளையும் அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களுக்கு மீண்டும் கண்ணாடியில் நிலவைக் காட்டுவதற்கு முயற்சிக்கும் சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுமென்று அரசியல் அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் அவர்களது உரிமைப் போராட்டங்களின் வரலாற்றில் இன்றுள்ளதைப்போன்று முன்னென்றுமே பரிதாபகரமான நிலையில் இருந்ததில்லை. அத்தகையதொரு சூழ்நிலையில் பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்கள் உண்மையில் தமிழ் மக்களுக்கு துரோகமே செய்கிறார்கள். பல சுயேச்சைக் குழுக்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டிய இன்னொரு விடயமாகும். பம்பலுக்கு போட்டி கல்விமான்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் புத்திஜீவிகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். இக்குழுவின் வேட்பாளர்களில் ஒருவர் தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் இறுதித் தினத்தன்று யாழ்ப்பாணக் கச்சேரியில் இடதுசாரி அரசியல் பிரமுகர் ஒருவருடன் கலந்துரையாடுகையில்; "நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது ஒரு பம்பலுக்கு என்று கூறினாராம். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் விளைவான அவலங்களில் இருந்து மீளமுடியாமல் தமிழ் மக்கள் அல்லாடிக் கொண்டு இருக்கும் போது படித்தவர்கள் என்ற தங்களைக் காட்டிக்கொள்வோர் "பம்பலுக்கு தேர்தலில் நிற்கிறார்கள் என்றால் இவர்களின் படிப்பில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கேட்கவேண்டியிருக்கிறது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சீர்குலைத்து தங்களை நிரந்தரமாகவே அரசியல் அனாதைகளாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சதிமுயற்சிகளுக்கு பலியாகாமல் தமிழ் மக்கள் தங்களது தேர்தலில் விவேகத்துடன் செயற்படவேண்டுமென்பதே அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் பற்றுறுதி கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சிறுபிள்ளைத் தனமான அரசியல் சாகசங்களுக்கு இடங்கொடாமல் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிர்கால அரசியல் பாதையை உருப்படியாக வகுத்துத்தரக்கூடிய அனுபவமுடையவர்களைக் கொண்ட அணியையே பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். வடக்கு,கிழக்கில் இருந்து வலுவான அரசியல் அணியொன்று பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படாதிருப்பதை உறுதிசெய்யும் நோக்கிலான சதிமுயற்சிகளை முறியடிக்க தமிழ் மக்கள் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகும்.

உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்?

இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சைக்குழுக்களாக களமிறக்கியுள்ளார் மகிந்த இந்த செயற்பாட்டில் எம்மவர்கள் விலைபோனதால் மகிந்த ஓரளவு வெற்றி கண்டுள்ளார் என்பது உண்மையே ஆனால் அதற்கான இறுதி வெற்றி கிடைக்கவேண்டுமானால் அது தமிழர்களின் கைகளிலேயே உள்ளது அதை நினைத்து ஓரளவு ஆறுதல்படலாம் ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் புள்ளிபோடுவது ஒவ்வொரு தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கெதிராக கூட்டமைப்பின் உறுப்பினர்களே போட்டியிடுகின்றனர் இவர்கள் மும்முனைகளில் தேர்தலை முகம்கொடுப்பதால் தமிழ் மக்களின் பார்வை எப்படி இருக்கின்றது என்பதே எம்முன்னேயுள்ள கேள்வி. ஆயுதப்போராட்டம் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆயுதரீதியில் பெரு வெற்றி கண்டபோதே அதற்கீடாக களத்திலும் புலத்திலும் தமிழர்களின் அரசியல் வலு தேவைப்பட்டபோதே தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் முற்போக்காளர்களும் இணைந்து அனைத்து தமிழ் கட்சிகளுடன் தனித்தனியாகவும் ஒன்றாகவும் அழைத்து பேசி ஒருமுடிவெடுக்கப்பட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெருவிருட்சம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சிறந்த வழிகாட்டுதலும் ஆலோசனையும் கிடைத்தமையால் அவை ஓர் சீரான பாதையிலும் ஒரே தலமைத்துவத்தின் கீழும் செயற்பட்டு வந்தனர் ஆனால் தற்போது அக்கூட்டமைப்பை சிதறடிக்கும் வகையில் சிலர் செயற்படுவதும் செயற்பட தூண்டுவதும் புலம்பெயர் உறவுகள் சிலர் பணம் அனுப்பி சிலரை தூண்டுவதும் தொடர்தவண்ணமேயுள்ளது என்பதை நினைத்து ஒவொரு தமிழர்களும்; உள்மனதினுள் கவலையடைந்த வண்ணமேயுள்ளனர். கூட்டமைப்பு ஆரம்பமானபோது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 22 பேரை தமிழ் மக்கள் தேர்வு செய்து சிறிலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் எமது முடிவை ஒருமித்த குரலில் எடுத்தியம்பினர். பின்னர் அவர்கள்கூட விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக சிறிலங்காவால் சொல்லப்பட்டு வந்தது. தற்போது ஆயுதபு;போராட்டம் ஓர் முடிவுக்கு வந்தடைந்து விட்டதாகவும் இனி யார் தேர்தலில் வெற்றிபெறுகின்றார்களோ அவர்களுடன்தான் தமிழர்களின் தீர்வுபற்றி பேசுவேன் என்றும் சனாதிபதி கூறுகின்றார் அதாவது நாம் போரில் வென்றுவிட்டோம் நீங்கள் தேர்தலில் வென்றுவாருங்கள் என ஆணையிடுகின்றார்;. ஆதற்காகவே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யாரும் அதிகப்படியான ஆசனங்களை பெற்று உரிமைகளை பேசக்கூடியவாறு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஏராளமான கட்சிகளையும்,சுயேட்சை குழுக்களையும் களமிறக்கியுள்ளார். இதன் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதன் காரணமாக தமிழ் தேசியம் கடந்தமுறை பெற்ற மேதலதிக(போனஸ் ) ஆசனங்களையும் இழக்கும் வாய்பேற்பட்டுள்ளது. அத்துடன் சுயேட்சைக்குழுக்களாக யாழ்பாணத்தின் ஒருசில கல்வியாளர்களும் உதாரணமாக கலாநிதி குணராசா,ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்ஈமுன்னாள் அதிபர் போன்றவர்களும் பணத்திற்காக விலைபோயுள்ளனர். கடந்த தேர்தலில் ஆயுதக்குழுக்களின் பத்துக்கு மேற்பட்ட குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மக்களை வாக்களிக்க செல்லாது அச்சுறுத்தியபோதிலும் தமிழ் மக்கள் துணிந்து சென்று வாக்களித்ததுடன் எவருடைய வழிகாட்டுதலுமின்றியே கடந்த சனாதிபதி தேர்தலின் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் முடிவை ஏகோபித்த குரலில் எடுத்தியம்பினர். இம்முறை வேட்பாளர் தெரிவு இடம்பெற்றபோது சில விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெறாமையினால் சிலர் தனித்து இயங்குவதாக முடிவெடுத்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். தனித்து செயற்படுவது குற்றமல்ல எங்கே தவறு இடம்பெற்றது என ஆராய்வது எமது நோக்கமில்லாவிட்டாலும் “தமிழீழக்கோரிக்கை கைவிடப்பட்டது, இந்தியாவிற்கு விலையோயுள்ளார்கள் என்பதே இவர்களின் பிரதான வாதமாகும். அவ்வாறாயின் இவர்களின் பிரிந்து செல்வதற்கான முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பதே இங்கு ஆழமாக ஆராயப்பட வேண்டியது அதாவது கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் இருவருக்குமான வேட்பாளர் தெரிவில் இடம் கிடைக்காமையினாலேயே இவர்கள் இம்முடிவுக்கு வரக்காரணம் என்பது வெளிப்படை அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது என்பதுடன் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது.” இதற்காக கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரியென்றோ எல்லோருமாக ஏற்றுகொண்டதென்றோ சொல்லவரவில்லை இருப்பினும் தற்போதைய கள யதார்த்தத்தில் தெரிவிற்கு முக்கியத்துவமளிக்காமல் எல்லோருமாக கூட்டமைப்பினை பலப்படுத்துவதைவிட சிறந்த மார்க்கம் தமிழர்களுக்கு எதுவுமில்லையென்பதே உண்மை. இவ்வாறு பிரிந்து செயற்பட்டு ஒருவீட்டு பிள்ளைகளே வீதியிலிறங்கி மகன் தந்தையைபற்றியோ தனையன் மகனைபற்றியோ குறைகூறி பக்கத்துக்குபக்கம் அறிக்கை வெளியிடுவதோ அரசிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் நாமே களமமைத்து கொடுத்தாகிவிடும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக கூறுகின்றீர்களே விடுதலைப்புலிகள் 6 கட்ட பேச்சுக்கு சென்றது தமிழீழத்தை தட்டத்தில் வைத்து அவர்கள் தருவார்கள் என்ற எண்ணத்திலா? அல்லது தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டா? அப்போது எவருமே வாய்திறக்கவில்லையே! களச்சூழலுக்கேற்ப தலைவரின் சிந்தனைக்கேற்ப “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறப்போவதில்லை” அதனடிப்படையில் படிப்படியாகவே எமது நகர்வுகளை செய்யவேண்டிய தேவை உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் அவர்களை குழப்பிவிடாதீர்கள் என்பதே எமது கருத்தாகும். அதாவது பல்கலைக்கழகத்திலுள்ள ஒருசிலரை நீதி நியாயத்திற்கான மாணவர் அமைப்பென்றோ அல்லது கருணாகரன்களால் வெளியிடப்படும் விழிப்பு பத்திரிகையாலோ மக்களை திசைதிருப்பலாம் என கஜேந்திரன் எண்ணுவாராயின் அது அவரின் சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகின்றது. அதாவது இவர்கள் சட்டம்படித்துகொண்டிருப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நீங்கள் ஒரு உருவாக்கத்திற்கான ஆரம்பம் மட்டுமே உங்களைவிட 50ஆண்டுகளுக்குமுன்னரே அவர்கள் சட்டத்துறையையே பிரதானமாக கற்று மும்மொழியிலுமே சிறப்படைந்து உரிமைக்காக குரல்கொடுத்து இதுவரையும் எதிரிக்கு விலைபோகமல் இருக்கின்றார்கள் அவர்களுடன் பார்த்தால் நீங்கள் பேரப்பிள்ளைகள் இப்படி செய்யலாமா? கடந்த சனாதிபதித் தேர்தலில் யாழ்குடாநாட்டிலே எல்லா தொகுதியிலுமே 19-20 வீதமானோர் ஆளும் ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் அதாவது 10பேரில் இரண்டு பேர் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள் அந்த இரண்டு பேரும் அவர்களின் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை அவர்களிடம் உதவிபெற்றவர்கள் கைமாறாக செய்து கொள்ளப்பட்ட உறுதிமொழிக்கமைவாகவே வாக்களித்ததுள்ளனர் எனவே நாம் நமக்குள் முரண்பட்டுக்கொண்டால் எதிரிக்கும் அவனோடியங்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அது வாய்ப்பாக போய்விடும் என்பதை கவனிக்கவேண்டும். அன்பான புலம்பெயர் உறவுகளே, தமிழர் அமைப்புகளே உங்கள் மௌனங்கள் எதுவரைக்கும் இறுதிமுடிவுகளை உரியவர்கள் உரிய காலத்தில் எடுப்பார்கள். அதற்கிடைப்பட்ட காலத்தில் நாமே இணைந்து எடுக்க வேண்டும். எமது வலிகள் வேதனைகள்,சுமைகள் எல்லாவற்றிலும் உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும்,வியர்வையும்; உண்டென்பதை நாம் அறிவோம். ஆகவே நீங்கள் அவரும் வரட்டும்,இவரும் வரட்டும் என்ற நிலையை மாற்றி தற்போதைய காலத்திற்கு இங்குள்ள நிலமைக்கு எந்தமுடிவு எடுப்பது நல்லதென்பதை உங்கள் மௌனங்களை கலைத்து விரைவாக வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுநிற்கின்றோம்

நாங்கள் யார் பக்கம் ?

நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!. தமிழீழ நிலத்தில் மற்றுமொரு போர் வேகம் பெற்று வருகின்றது. முன்பெல்லாம் தமிழீழ மக்களையும், மண்ணையும் மீட்க விடுதலைப் புலிகள் எதிரியின் படையணிகளுடன் யுத்தம் புரிந்தார்கள். அதில் வீரம் இருந்தது, தியாகம் இருந்தது, ஒரே இலக்கு என்ற உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதற்காகத் தமது உயிரையும் ஈகம் செய்யும் தற் துணிவும் இருந்தது. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழினமும் அடித்து நொருக்கப்பட்டு, அழித்து முடிக்கப்பட்டு, முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, வாய் திறக்க முடியாத மவுனிகளாக்கப்பட்ட பின்னர் உருவான இரண்டாவது களத்தில் இத்தப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் படையணிகள் இல்லை. எதிரிகள் மேலான தாக்குதல்களும் இல்லை. விடுதலைப் புலிகளால் நெறிப்படுத்தப்பட்டவர்கள், வழிப்படுத்தப்பட்டவர்கள் பிளவு படுத்தப்பட்டு வௌ;வேறு படையணிகளாக மாறிக் களம் இறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எதிரிகள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. உயிர், உடமைகள், மானம், கவுரவம், எதிர்கால நம்பிக்கை என மனிதத்தின் அத்தனை கூறுகளும் நொருக்கப்பட்டு வாழ்விழந்து நிர்க்கதியாக நிற்கும் ஈழத் தமிழினத்தின் எஞ்சிய மாந்தர் குறித்தும் அக்கறை கொள்ளவில்லை. அடுத்த தலைமுறையையாவது நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற சின்ன ஆசை கூடக் கிடையாது. இந்தப் போர்க்களத்தில் வெல்லவேண்டும். சிங்கள நாடாளுமன்றத்திற்குச் சென்று மகிந்த வழங்கும் சிம்மாசனத்தில் அமர வேண்டும். அது மட்டுமே அவர்களது இந்தப் போரின் குறிக்கோள். ஒரு வேளை, ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒரே மனதாக வாக்களித்துவிட்டால், முன்னொரு காலத்தில் தமிழீழப் பிரகடனத்தோடு சிங்கள நாடாளுமன்றத்திற்குச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அ. அமிர்தலிங்கம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக்கியது போன்ற அவர்களுக்கு மட்டுமேயான ஒரு வசந்த காலம் மீண்டும் கனிந்தால் இரா. சம்பந்தன் அவர்களுக்கு முடி சூட்டி எதிர்க்கட்சித் தலைவராக்கி அழகு பார்க்கும் வெளியே சொல்ல முடியாத ஆசையும் நிச்சயம் அதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இருக்காது என்று நம்ப முடியாது. ஏனென்றால், இந்தப் போர்க் களத்தை உருவாக்கியதில் பெரும் பொறுப்பும், அதில் வென்றே தீரவேண்டும் என்ற பெரும் ஆசையும் அவர்களுக்கு இருப்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. முள்ளிவாய்க்கால் பேரழிவில் அவர்கள் இழந்தது என்று சொல்லும்படியாக எவையும் இல்லை. தவறுதலாகக் களத்தில் தங்க வேண்டிய சூழ்நிலையால் மகிந்த படையினரால் பிடிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினமும் மகிந்தவுடன் உயிர்ப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு, அவருடன் சங்கமமாகிவிட்டார். அவருடன் சில உதிரி வக்கிரகங்களும் களன்று ஒட்டிக்கொண்டன. மகிந்த சகோதரர்களால் தமிழ்த் தேசியக் கூட்டணியில் தீவிர தமிழ்த் தேசியவாதிகளாக அடையாளம் காணப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவனேசன் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இதனால், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும் எழுந்து நின்று துள்ளிக் குதிக்காமல் அடக்கியே வாசித்தார்கள். அதன் பின்னரும், முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் முடக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளான போதும், அங்கே சென்று அவர்களைப் பார்க்க மகிந்த அனுமதி வழங்காமல் மறுத்த போதும் அடக்கமாக அமைதி காத்தனர். அத்தனையும் முடிந்து, அவலத்தையே வாழ்வாக ஏற்றுக்கொண்ட மக்களிடம் அரசியல் செய்து பிழைப்பு நடாத்தும்படி மகிந்த அவிழ்த்து விட்டதும், மன்னார் வரை சென்று, மகிழ்ந்து கோத்தபாயாவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததைத் தவிர, கூட்டமைப்பு எதைக் கிழித்தது என்று வாள் சுழற்றுகிறது என்று புரியவில்லை. மகிந்த சகோதரர்களின் படுகொலைப் பசிக்கு இரையாகாமல், தப்பிப் பிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், பத்மினி ஆகியோரும் தம்முடன் நாடாளுமன்றம் வந்துவிட்டால், தாமும் பேரம் பேசும் தகுதியை இழந்து விடுவோம் என்று அவர்களைக் கழற்றி விட்டதால், இன்னொரு தமிழ்த் தேசிய உணாளரான கஜேந்திரகுமாரும் வெளியேறி விட்டார். அதனால், இப்போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மும் மூர்த்திகளும் வாளை வேகமாகச் சுற்ற வேண்டிய கட்டாய தற்காப்புப் போரை நடாத்தி வருவது நன்றாகவே தெரிகின்றது. சுதந்திர சிறிலங்காவின் ஆட்சிக்குள் அரசியல் செய்ய தமிழ்த் தலைமைகள் அங்கிருந்து தமிழீழ மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததைப் பட்டியலிட்டால், இவர்கள் எதற்காக அங்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியே எஞ்சுகின்றது. நில ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை. சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்ட எண்ணற்ற இளைஞர்களை விடுவிக்க முடியவில்லை. தமிழர்கள் மீதான படுகொலைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள், கப்பம் பெறுதல் என்று அத்தனையும் இன்று வரை பெருகி வந்துள்ளதே தவிர, அவற்றைக் குறைத்துவிடக் கூட இந்தத் தலைமைகளால் முடியவில்லையே. அறுபது ஆண்டுகளாக நடந்து, இன்றுவரை தொடர்ந்தே செல்லும் இந்த தமிழின அழிப்பை இப்போதும் இவர்கள் கைகாட்டும் இந்திய தேசம் எப்போது தடுத்து நிறுத்த முயற்சித்தது? தந்தை செல்வா அவர்கள் தமிழ்த் தேசியத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை நகர்த்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த போராட்ட வடிவத்தினூடாக முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்துள்ளார். அந்தப் பேரழிவை முன்னரே கணிப்பிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அந்தத் தமிழ்த் தேசியத்தை மீட்பதற்கான போராடும் கடமையை புலம்பெயர் தமிழர்களிடமும், இளையோரிடமும் கையளித்திருந்தார். அவரது விருப்பப்படியும், சிந்தனைப்படியும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கான கடமைகளைத் தோளில் சுமந்துள்ளார்கள். அவர்களது போர்க் களம் மேற்குலகின் அரசியலில் பல அதிசயிக்கத் தக்க மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த மாற்றங்களினூடாக சிங்கள தேசத்திற்குக் கிலியூட்ட ஆரம்பித்துள்ளார்கள். அதனால், சிங்கள தேசத்திற்கும், அங்கு நிலை கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்ட இந்திய தேசத்திற்கோ தற்போதைய துருப்புச் சீட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. ஒட்டுக்குழுவாக மக்கள் மத்தியில் எடுபடாத டக்ளசை மட்டும் நம்பி இனிமேலும் மேற்குலகுக்கு எதிரான பனிப் போரை நடாத்த முடியாது என்பது மகிந்தவிற்கு நன்றாகவே தெரியும். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற துருப்புச் சீட்டு மூலமாக இந்தியாவுடன் இணைந்து மேற்குலகின் நகர்வுகளுக்கு அணை போட முயற்சி செய்கின்றார். இத்தனை அழைவுகளுக்கும், இத்தனை அவலங்களுக்கும் பின்னர் அசைந்து கொடுக்காத தன்மீதான அவ நம்பிக்கையைப் போக்க ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அவர்கள் அறிவித்திருந்த இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்கும் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா கடந்த வாரத்திலும் ஈழத் தமிழர்களுக்கான முடிவுறாத தனது துரோகத்தை நீட்டியுள்ளது. அத்தனை துரோகங்களுக்கும் தலையாட்டி நிட்சயமாகத் தன்னுடன் வரக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்குள் உள்ளது இயல்பானதே. புலம்பெயர் தமிழீழ அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண முடியாததற்கும், புலம்பெயர் தமிழீழ மக்களிடம் இன்று வரை நெருங்கிச் செல்ல முடியாததற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கும் தடைகள் இந்தத் திசைகளிலிருந்தே வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கால்க் கட்டுகளை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்த் தேசியத்திற்கான ஓட்டப் பந்தயத்தில் வெல்வது சாத்தியமே இல்லை. ஒரு சில புலிகளாவது சிங்களச் சிங்கங்களை எதிர்த்து நின்று கர்ச்சிக்க வேண்டிய நேரத்தில், எத்தனை பன்றிகள் கூட்டமாகப் போனாலும் என்ன கிடைத்துவிடப் போகின்றது. முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தும்படி புலம்பெயயர் தேசங்கள் எங்கும் கெஞ்சிக் கேட்டோம். அழுது புலம்பினோம். ஆவேசமாக வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தினோம். இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் கோர்டன் பிரவுண் அவர்களுடனும், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடனும் ஈழத் தமிழர்களுக்காகப் பேசும் பலத்தைப் பெற்றிருக்கின்றோம். ஐ.நா. மன்றத்தை அசைத்து வருகின்றோம். மேற்குலகின் ஊடகங்களின் கண்களைத் திறந்துள்ளோம். தற்காலிகமாகவாவது ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை சிங்கள தேசத்திற்கக் கிடைக்காமல் தடுத்துள்ளோம். சிங்களத்தின் மீதான ஒரு பொருளாதார யுத்த களத்தைத் திறந்துள்ளோம் என்று கடந்த வருடத்தில் கையேற்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் வெற்றியைப் பட்டியலிட புலம் பெயர் தமிழர்களால் பட்டியலிட முடிகின்றது. ஈழத் தமிழாகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்தைப் போல… இந்திய ஆட்சியாளாகளைப் போல… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை நிராகரித்தது ஏன்? அவர்களுடன் களத்தில் இறங்கி நடந்து வந்த கஜேந்திரன், பத்மினி ஆகியோரை தேர்தல் களத்திலிருந்து அகற்றியது ஏன்? கஜேந்திரகுமார் அவர்கள் ‘காங்கிரஸ் கட்சிக்காகத் தருவதாகக் கூறும் இரண்டு இடங்களையும் அவர்களுக்கே வழங்குங்கள். அவர்கள் கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றம் வரவேண்டும்’ என்று முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது எதனால்? ஆம், நீங்கள் சோரம் போய்விட்டீர்கள். விடுதலைப் புலிகளால் மானம் மறைக்கப்பட்ட நீங்கள் தற்போது அம்மணமாகிப் போனதால், பிறக்கும்போதே கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணர்கள் உங்கள் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிகிறார்கள். ‘அவர்கள் வரவேண்டும்… உங்களுடன் அவர்களும் வரவேண்டும்… அப்போதுதான் உங்களுக்கும் உங்கள் மானம் மறைக்கப்பட வேண்டும் என்ற துணிவு பிறக்கும்.’ இந்தியா என்ற தேசத்தில் பல மகான்களும், மகாத்மாக்களும் உருவாகியபோதும் அங்கு நல்ல தலைவர்கள் உருவாகாமல் போனதில், அல்லது அங்கு உருவாகிய மாமனிதர்கள் தங்களது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடிய நல்ல வாரிசுகளையும் உருவாக்கிச் செல்லவில்லை. புத்தர் பிறந்த மண்ணில் புத்தம் நிலைக்கவில்லை. காந்தி வாழ்ந்த மண்ணில் காந்தியம் வாழவில்லை. தமிழகத்தில் மக்கள் எழுச்சி மூலம் பெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தி முடித்த அறிஞர் அண்ணா அவர்களால் கருணாநிதியைத்தான் உருவாக்க முடிந்தது. இடையே தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் புரட்சித் தலைவராக உருவெடுத்துத் தமிழகத்தை வழிநடாத்தினாலும், அவரது ஆயுளும் அதுவரை நிலைக்கவில்லை. அதுவே ஈழத் தமிழர்களின் கண்ணீருக்கும், அவலங்களுக்கும் கூடக் காரணமாக அமைந்து விட்டது. இந்தியத் துரோகங்கள் இத்துடன் முடிவுக்கு வரட்டும்! இல்லையேல், மேற்குலகின் மனிதாபிமானத்தை வென்று ஈழத்தை வெல்வோம்! அதுவும் முடியவில்லையானால், சிங்கள எதிரிகளுடன் சமாதானம் பேசுவோம்! அது கைகூடுமானால், சீனாவை அழைத்து வந்தாலும் தப்பேதும் கிடையாது. இந்தியாவின் கையாலாகாத் தனத்தால் ‘தீபெத்’ மக்கள் ஐம்பத வருடங்கள் கழிந்தும் அஞ்ஞானவாசம் புரிவதைப் பார்த்து நாமும் கற்றுக் கொள்வோம். ‘துரோகிகள் எதிரிகளை விடவும் ஆபத்தானவர்கள்’ இது எங்கள் சூரியத் தேவனின் வாக்கு. இந்தியா எங்களின் நண்பனா? எதிரியா? துரோகியா? என்று தீர்மானிக்கப் போகின்றவர்கள் ஈழத் தமிழர்களே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றவர்களும் அவர்களே! நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!

புலம் பெயர் உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்.................!

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழ விடுதலைப்போராட்டம் ஆரம்பித்து மரபுவழிப்போராக மாற்றமடைந்து கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பாக இருந்து, கடந்த வருடம் ஈழ விடுதலைக்கான மரபு வழிப்போர் தோழ்வியில் முடிவடைந்தது. காலம் காலமாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் ஆயிரமாயிரம் உயிர்களைக்கொடுத்து இன்றும் கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். ஆனால் இன்று புலம் பெயர் நாடுகளில் தேச விசுவாசிகள் என்ற போர்வையில் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவி செய்வதாக கூறி மக்களிடம் நிதி சேகரித்து அதை மோசடி செய்வது இனங்காணப்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதி காலத்தில் மிக மோசமான மிகக்கொடூரமான கொலைகளிலும் பட்டினியிலும் இருந்து மீண்ட எம் மக்களின் பெயரால் நிதி மோசடி செய்வது மண்ணிக்கமுடியாத குற்றமாகும். ஈழ மக்களுக்காக எம் புலம் பெயர்வாழ் மக்கள் கொடுத்த, கொடுக்கும் நிதியினை பாதிக்கப்பட்ட மக்களின் பெயரால் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினரோ அல்லது வேறு எந்தத்துறையினரோ எடுத்துக்கொள்வது மண்ணிக்கமுடியாது. எனவே பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவுவதாக கூறி நிதி சேகரித்து மோசடி செய்வோருக்கு அமைப்பின் அதி உச்ச தண்டனையை வழங்குவதென தீர்மாணித்துள்ளோம். ஈழ விடுதலைக்கனவோடு வீரமரணமடைந்த மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்தில் ஏறி நின்று அவர்களின் பெயரால் தவறு செய்பவர்களை மண்ணிக்க முடியாது. நீங்கள் கொடுக்கும் நிதி, துரோகிகளுக்கோ எதிரிகளுக்கோ சென்றடையக்கூடாது. எனவே நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நிதி சரியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துங்கள்.

பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்?

இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவே தான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரும் தகவல்கள் நம்பும்படியாக உள்ளது. அதேசமயம், பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பதை அது இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. முதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். பின்னர் உடல் கிடைக்கவில்லை என்றனர். பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று குழப்பினார்கள். இப்படியாக பொட்டு அம்மான் விஷயத்தில குழப்பமே நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. பொட்டு அம்மான் இறந்து விட்டார். அவரும், அவரது மனைவியும், போரின் இறுதி நாட்களின்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால்தான் அவர்களது உடலை இதுவரை மீட்க முடியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இன்டர்போல் தொடர்ந்து பொட்டு அம்மானைத் தேடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சாரா சிந்தர் யார்?

சி .என் .என் இன் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வருகிறார் இந்த சாரா சிந்தர். சி .என் .என் இக்கு இலங்கையில் நடை பெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வரும் இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கி வரும் இவர் அவருடைய ஒவொரு விவரனங்களிலும் விடுதலை புலிகளை மிக கொடிய பயங்கர வாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை. வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கபட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சிண்டரை அனுமதித்தது ஏன்? தாங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்த படவில்லை என்றும் தாங்கள் ஏ9 பாதை ஊடக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைத்தோம் என்று ஏன் குறிபிடுகிறார்? வெளிநாட்டு செய்தியாளர்களுடன் தனது போலீசாரை சிவில் உடையில்/ராணுவத்தை/புலனாய்வு பிரிவினரை அனுப்பும் இலங்கை அரசு சாரா சிண்டருடன் அனுப்பாதது ஏன்? வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் யாழ்பணத்தில் எங்கு தங்கியிருக்கிறார் என்று எப்படி இவருக்கு தெரியும் ? எந்த இடம் என்றும் குறிப்பிடவில்லை? மொழி பெயர்ப்பாளரை ஒளிபதிவில் காட்டப்படவில்லை? கடைசி யுத்தத்தில் மக்கள் சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு தான் இவ்வாறாக பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டது என்றும், சிங்கள ராணுவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்ற தோரணையில் கூறுகிறார். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு யுத்தத்தினால் தான் என்றும் , சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லபடவில்லை என சுட்டிக் காட்ட விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு சார்பாக கதைப்பதுபோல் நாடகமாடிக் கொண்டு, தமிழர்களுக்காக போராடிய தமிழர்களின் தேசிய இராணுவத்தை உலகுக்கு பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கும் இவர் யார்? உண்மையை எடுத்துரைப்பதே ஊடக தர்மம், சரி உண்மையை வேண்டாம் பக்கசார்ப்பில்லாமல் ஆவணங்கள் வெளியிட வேண்டும். இவர் அதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் மக்களுக்கு இவ்வளவு அழிவென்று இலங்கை இனவாத அரசு போல தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர் யார்?? இலங்கை இனவாத அரசின் கைகூலியா?