புதன், 17 மார்ச், 2010

புலம் பெயர் உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்.................!

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழ விடுதலைப்போராட்டம் ஆரம்பித்து மரபுவழிப்போராக மாற்றமடைந்து கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பாக இருந்து, கடந்த வருடம் ஈழ விடுதலைக்கான மரபு வழிப்போர் தோழ்வியில் முடிவடைந்தது. காலம் காலமாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் ஆயிரமாயிரம் உயிர்களைக்கொடுத்து இன்றும் கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். ஆனால் இன்று புலம் பெயர் நாடுகளில் தேச விசுவாசிகள் என்ற போர்வையில் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவி செய்வதாக கூறி மக்களிடம் நிதி சேகரித்து அதை மோசடி செய்வது இனங்காணப்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதி காலத்தில் மிக மோசமான மிகக்கொடூரமான கொலைகளிலும் பட்டினியிலும் இருந்து மீண்ட எம் மக்களின் பெயரால் நிதி மோசடி செய்வது மண்ணிக்கமுடியாத குற்றமாகும். ஈழ மக்களுக்காக எம் புலம் பெயர்வாழ் மக்கள் கொடுத்த, கொடுக்கும் நிதியினை பாதிக்கப்பட்ட மக்களின் பெயரால் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினரோ அல்லது வேறு எந்தத்துறையினரோ எடுத்துக்கொள்வது மண்ணிக்கமுடியாது. எனவே பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவுவதாக கூறி நிதி சேகரித்து மோசடி செய்வோருக்கு அமைப்பின் அதி உச்ச தண்டனையை வழங்குவதென தீர்மாணித்துள்ளோம். ஈழ விடுதலைக்கனவோடு வீரமரணமடைந்த மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்தில் ஏறி நின்று அவர்களின் பெயரால் தவறு செய்பவர்களை மண்ணிக்க முடியாது. நீங்கள் கொடுக்கும் நிதி, துரோகிகளுக்கோ எதிரிகளுக்கோ சென்றடையக்கூடாது. எனவே நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நிதி சரியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக